புதன், 22 டிசம்பர், 2010

கீழ்வானம் சிவக்குது

உழைக்கும் மக்களின் தன்மான உணர்வு எத்தகையது என்பதற்கு உலக வங்கியில் இந்திய வாங்கியுள்ள கடனுக்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா 3500 ரூபாய்க்கு மேல் கடன் உண்டென்பதரிந்து அந்த தொகையை நாட்டு பிரதமருக்கு மணி ஆர்டர் எடுத்து அனுப்பிய திருச்சி கைவண்டி இழுக்கும் தொழிலாளியின் செயல் ஒன்றே சான்றாகும். மேலும் இனிமேல் இதுபோல் கடன் வாங்க வேண்டாம் என்றும் அப்படி வாங்கும் முன் தன்னிடம் கேட்டுவிடுமாரும் கடிதம் போட்டிருந்தாராம். இந்த பத்திரிகை செய்தியை படித்து விட்டு அந்த தொழிலாளியின் அறியாமையை எள்ளி நகையாடினர் மேட்டுக் குடி நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள். அந்த தொழிலாளியின் தன்மான உணர்வை அறிவு(!)ஜீவிகளுக்கு எடுத்து சொல்லி விளக்கியதும் மன்னிப்புக்கேட்டு விலகிக்கொண்டனர். இங்கே விஷயம் அதுவல்ல இப்பேர்ப்பட்ட தன்மையும் தன்மான உணர்வும் கொண்டது உழைக்கும் மக்களின் மனநிலை. இப்படி பட்ட மக்களையும் அவர்களின் மன நிலையையும் இதுவரை காயடித்து வந்த தொழிற்சங்கங்களுக்கு காயடித்துள்ளனர் கோவை NTC (பஞ்சாலை) தொழிலாளர்கள். கோவை நகரை உருவாக்கியதில் கோவையில் இருக்கும் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு முக்கிய பங்குண்டு இன்று இங்கே செயல் பட்டுக்கொண்டிருக்கும் கல்வி நிறுவங்கள், மருத்துவமனைகள் எல்லாமே பஞ்சாலை முதலாளிகள் பஞ்சாலையில் இருந்து பெற்ற இலாபத்தில் கட்டியதே. அதேபோல போராட்ட குணத்திலும் இந்த பஞ்சாலை தொழிலாளர்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு ஸ்டேன்ஸ் மில் போராட்டமும் சின்னியம் பாளையம் தியாகிகளின் உயிர் தியாகமும் பறைசாற்றுகிறது எனினும் இப்படிப் பட்ட உழைக்கும் மக்களைத்தான் கடந்த காலங்களில் அனைத்து ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கமும் மடைமாற்றி ஏய்த்து வந்தன அவர்கள் தொழிலாளிகளின் போராட்ட குணத்தை மாற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுத்ததெல்லாம் நாமம் போராட்டம், கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டம் போன்றவைகளையே. இது போன்ற சூழலில் தான் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி கோவையில் செயல்படத்தொடங்கி கோவையில் உள்ள SRI எனும் நிறுவனத்தில் மிகப்பெரும் அடக்குமுறைகளை எல்லாம் சந்தித்து தன் போராட்ட குணத்தால் பல்வேறு சலுகைகளை தொழிலளர்களுக்கு பெற்றுத்தந்தது இதை பார்த்து பல்வேறு ஆலைகளில் பு ஜ தொ மு வின் கிளைகள் கட்ட தொழிலாளர்கள் ஆர்வப்பட்டு கோவையில் சில நிறுவனகளில் கிளைகளும் கட்டப்பட்டு தொழிலார்களுக்காகவே இயங்கிவருகிறது. இந்த சூழலில் தான் இதுவரை தேர்தலே நடக்காமல் இருந்த NTC மில்களில் தேர்தல் நடத்தவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கிட்டு வெற்றி கண்டது பு.ஜ.தொ.மு.வுடன் இணைக்கப்பட்ட கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கம சங்க பிரதிநிதிகளின் அயராத உழைப்பாலும் அவர்களின் எளிமையாலும் எளிதாகவே தொழிலாளர்கள் அவர்களை நோக்கி வருவது கண்டு பயந்த துரோக சங்கங்கள் பல்வேறு இன்னல்களையும் இடையூறுகளையும் பொய் பிரச்சாரங்களையும் செய்து பார்த்தும் தேர்தலில் தொழிலாளர்கள் பெருவாரியாக வாக்களித்து சங்கத்தை இரண்டாம் இடத்தில் கொண்டுவந்தனர் சங்க கிளையே இல்லாத இடத்தில் கூட தொழிலாளர்கள் வாக்களித்துள்ளனர் கோவை பாட்டாளிகளின் வரலாறு மீண்டு(ம்) எழுதப்படுகிறது கீழ்வானம் சிவந்து விட்டது இனி பழைய விலங்குகளை கழட்டிவிட்டு புதிய சிறகுகளுடன் பறக்கலாம் வாழ்த்துக்கள்

வெள்ளி, 22 அக்டோபர், 2010

காவல் துறையை புரிந்துகொள்ளுங்கள்

செப்டம்பர் 15 முதல் ஆந்திர மாநில காவல்துறை ஒரு கண்காட்சி நடத்தியுள்ளது
கண்காட்சியின் தலைப்பு "காவல் துறையை புரிந்துகொள்ளுங்கள்"
புரிந்து கொள்ளுங்கள் என்பதை நாம் எப்படி உச்சரிக்கிறோமோ அதற்க்கேற்றார்போல் அர்த்தமும் மாறும்
உண்மையில் அரசாங்கம் உத்தேசித்த அர்த்தம் என்ன என்று தெரியவில்லை
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு போலிசை பற்றி புரியவைக்கும் நிகழ்ச்சியும் நடத்தியுள்ளனர் பொறுப்புள்ள போலீஸ்காரர்கள் அதன்படி கடந்த 20 10 2010 அன்று மாணவர்கள் அந்த கண்காட்சியை சுற்றிப்பார்த்து வந்துள்ளனர் அவ்வாறு பார்த்துக்கொண்டே வந்த பள்ளி மாணவர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் stun gun எனும் வகைப்பட்ட இயந்திர துப்பாக்கியை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஒரு காவலர் அது செயல்படும் விதம் குறித்து செயல் முறை விளக்கம் செய்து காண்பித்துள்ளார் அதிலிருந்து தோட்டாக்கள் பாய்ந்து 2 மாணவர்கள் மரணித்துள்ளனர் எவ்வளவு அலட்சியம் இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பள்ளி மாணவர்கள் நிச்சயம் காவல்துறையை புரிந்துகொண்டிருப்பார்கள் காரணம் ரத்தமும் சத்யுமாக அந்த நிமிடம்வரை அவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சக மாணவர்களை கொண்டல்லவா நீங்கள் அவர்களுக்கு செயல்வழிக் கல்வி போதித்தீர் (உங்கள் ஆற்றலை காட்டவா எங்கள் மழலைகளை கொன்று போட்டீர்) எனவே உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டது
இந்த சம்பவத்திற்கு காரணமான போலீஸ்காரர் வெறும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் அவளாவே இப்போது ஆந்திர மக்கள் உங்களை புரிந்துக்கொள்ள அவசரகதியில் ஒரு கண்காட்சி தேவைப்படுவதன் அவசியம் என்ன? அதன் அரசியல் உள்நோக்கம் என்ன? ஆந்திர மக்கள் மட்டுமல்ல காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும் அரங்கேற்றிக்கொண்டுதான் இருக்கிறீர்கள் கண்காட்சிகளை நாங்களும் உங்களை புரிந்து கொண்டுதான் இருக்கிறோம்

வியாழன், 14 அக்டோபர், 2010

பாலஸ்தீன்,காஷ்மீர் தமிழக முஸ்லீம்கள்





இன்று இந்த கட்டுரை பதிவேரிக்கொண்டிருக்கும் நேரத்தில் கூட பல சிறுவர்கள்,பெண்கள்,இளைஞர்கள் கல்லெறிந்து கொண்டிருக்கலாம் தங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் ராணுவங்களுக்கு எதிராக. அந்த உணர்வுக்கும் நெஞ்சுரிதிக்கும் ஒரு வீர வணக்கம். இந்த போராட்டத்தில் அவர்கள் வெற்றிபெற புரச்சிகர வாழ்த்துக்கள்.
பாலஸ்தீனிலும் காஷ்மீரிலும் ஏதோ முஸ்லீம் மத அடிப்படை வாதத்துக்காகதான் போராடுகின்றனர் என்பது போன்ற ஒரு மாயை இங்குள்ள முஸ்லீம்களிடையே நிலவுவதையும் அதை இசுலாமிய தலைமைகள் அப்படியே ஊட்டி வளர்ப்பதையும் காண்கிறேன்.
காஷ்மீரை பொறுத்தவரை இதுபோன்ற இசுலாமியர்களின் சிந்தனையை வைத்து அங்கு உண்மையிலேயே ஒரு மத மோதல் தான் நடந்துகொண்டிருக்கிறது என்று இந்துத்துவ சக்திகள் தங்கள் ஊடகங்கள்(இதற்க்கு உதாரணமாக நிறைய சினிமா மற்றும் செய்திகள் உள்ளன அத்தனையும் இட இடம்பத்தாது) மூலம் நிலை நிறுத்துகிறது அதில் வெற்றியும் பெற்றுள்ளது
என் 26 வயதுவரை நானும் பாலஸ்தீன விடுதலைபோரை ஒரு தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்த்திருந்தேன் பின் ஒரு முறை லைலா ஹலேத் (laila khaled )எனும் ஒரு ஆவணப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதை பார்த்த பிறகே பாலஸ்தீன் பற்றிய என் மதிப்பீடுகள் முழுதும் தவறானதே என் சமூகத்தின் தலைமை பீடத்தில் உள்ளவர்களும் எங்களுக்கு இந்த உண்மையை சொல்லாமல் மறைக்கின்றனர் என்றும் மறைப்பதன் அரசியலும் விளங்கியது.
இனி அந்த ஆவணப்படம் பற்றி;
ஆவணப்படம் லைலா ஹலேத் என்ற ஒரு போராளி பெண்மணியை பற்றியது.
அந்த பெண்தான் வரலாற்றில் முதல் முறை ஆகாய விமானத்தை கடத்தியவர் அதுவும் இருமுறை (இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் எகிப்ப்தில்) அந்த பெண் ஒரு நாத்திகவாதி (இறை மறுப்பாளர்) மேலும் அவர் சார்ந்திருக்கும் அமைப்பு தோழர்(ஆண்)அவருடன் கைகுலுக்கிறார் நீண்ட இடைவெளிக்குப்பின் அவரை சந்திக்கும் தோழர் பாசப்பூரிப்புடன் அவரை ஆரத்தழுவிக்கொள்கிறார் கன்னத்தில் முத்தமிடுகிறார் பின் ஹலேடிடம் கேட்ப்பார் இப்பவும் நி தொழுகாம்தான் இருக்கியா என்பர் ஹலேத் சற்றும் யோசிக்காமல் இல்லையென்பார் அந்த ஆவணப்பட இயக்குனர் அவரிடம் கேட்க்கும் கேள்விக்கெல்லாம் அற்ப்புதமாக பதிலளித்துக்கொண்டே வருகிறார் ஒரு இடத்தில் சிறுவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் அப்போது இயக்குனர் ஹலேத் இடம் சிறுவர்கள் போரிடுவது தவறில்லையா என வினவுவார் அதற்கவர் அவர்கள் சிறுவர்களையும்தான் கொள்கின்றனர் என பதிலளிப்பார்
பின் இருவரும் வீதியில் நடந்துவரும்பொழுது சில சிறுவர்கள் ஒரு ஹெலிகாப்டரின் மீது கல்லெறிந்துவிட்டு(கல் அவ்ளோதூரம் போய் தாக்கவில்லை)மீண்டும் பழையநிலைக்கே வந்து விளையாடிக்கொண்டிருப்பார் அவர்களில் ஒருவனிடம் இயக்குனர் ஏன் கல் எறிந்தீர்கள் எனும்போது அவன் அவர்கள் எங்களை ஏமாற்றி அடிமைபடுத்திவைத்துள்ளனர் அதற்கெதிராகவே கல் எறிந்தோம் என்று கூறிவிட்டு சைக்கிளிலில் ஏறி சென்றுவிடுவான்
இதிலிருந்து தெரிவது ஒன்றுதான் மதம் எனும் அடிப்படையிலோ அல்லது மத வெறியின் அடிப்படையிலோ அங்கெல்லாம் போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை மாறாக சுதந்திரம் வேண்டியும் அடிமை தலைகளை எதிர்த்துமே முன்னெடுக்கப்படுகிறது
போராட்டம் நடக்கும் பலஸ்தீனில் போராடுவது முஸ்லீம்கள் என்பதாலேயே அவ்வாறு பார்க்கப்படுகிறது
காஷ்மீரின் நிலையும் இதுவே பார்க்க ஜூ வியில் இந்த வார(13/10/2010)ம் மனித உரிமைப்போராளி சுகுமாரனின் கட்டுரை
இனியேனும் தமிழக முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் பாலஸ்தீனையும் காஷ்மீரையும் இங்குள்ள தலைவர்களையும்
இனியும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் அது காவி பயங்கரவாதிகளுக்கே சாதகமாகும்

காஷ்மீர்

பற்றி எரிகிறது பனி மலை

எரியூகியாக எங்கள் உணர்வு

நிறைந்து வழிகிறது எங்கள் குருதி

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்

ஒரு நாள் வெந்து பொசுங்கும் உங்கள் ஏகாதிபத்திய மோகம் 

அதுவரை அஞ்சாமல் தொடர்வோம்.....................

கல்லெறிதலும் கல்லறை செல்வதும்

திங்கள், 20 செப்டம்பர், 2010

இன்னும் ஓர் (அ)நீதி

சுதந்திர ? இந்தியாவின் அகப்பெரும்பான்மையான வன்முறையில்  இரண்டாவது பாபர் மசூதி இடிப்பு (முதலாவது முஸ்லீம் வேடமிட்ட ஒரு காவி பயங்கரவாதி கோட்சேவால் காவி மிதவாதி காந்தி படுகொலை செய்யப்பட்டது )இப்போது நாடே ஒரு வித பதட்டத்துடன் (கோவையில் சில கல்லூரிகளில் i v போவது கூட ஒத்தி வைத்துள்ளனர் தீர்ப்புக்காக )இந்த இடிப்புக்கான தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளது . ஆனால் உண்மை என்ன   
மசூதி இடித்த அன்றே எழுதியாகிவிட்டது தீர்ப்பு இப்போது நடப்பதெல்லாம் நாடகமே தாமதமாக வழங்கப்படும் நீதியும் அநீதியே. இந்த அநீதிக்கு பின்னும் நடக்கிறது காமெடி.  சாதா   காமெடி  அல்ல உலகமாக ஜனநாய காமெடி. பிரதமர் உதிர்த்த காமெடி தீர்ப்பு இத்தோடு தீர்ந்து விடாது இதை மேலும் மேல் முறையீடு செய்யலாம் என்று .
ஆம் இவர்கள் மனித படுகொலையே மலுங்கடிதவர்கள் போபாலில். இவர்களுக்கு  இந்த மசூதி படுகொலை எல்லாம் எம்மாத்திரம்

காலை மணி எட்டு கண்டபடி திட்டு .

இன்று காலை சுமார் எட்டு மணி இருக்கும்
வீட்டு வாசலில் வண்டி துடைத்துக்கொண்டிருந்தேன் ஒரு தாய்? தன் ஐந்து வயது மகனை பள்ளிக்கு கூட்டி இல்லை இல்லை அடித்து இழுத்து சென்றுகொண்டிருந்தார்
(அடின சாதாரண அடி இல்லேங்க தர்மடி) தெருவெல்லாம் அடித்துக்கொண்டே வந்தார்
அந்த ஒரு கட்டத்துல எனக்கே வலிக்க ஆரம்பித்துவிட்டது. பொறுக்க முடியாமல் அந்த அம்மாவை அதட்டி விட்டேன் அவ்வளவுதான் இதுதான்னு இல்லாதளவுக்கு எனை வருத்தெடுத்துவிட்டார். அந்த அம்மா அங்கிருந்து சென்றபின் நிலவிய அமைதிக்குப்பின் என் அருகில் வந்த அண்டை வீட்டாரும் எனதருமை தாயாரும் எனையே குறை சொல்லி
அறிவு புகட்டினர் எனக்கு தேவையில்லாத வேலையாம். (அதுல ஒருத்தரின் அபார கண்டுபிடிப்பு எனக்கு மனதில் ரஜினின்னு நினைப்பாம் பெரிய மனோதத்துவ மருத்துவறு) எல்லாம் முடிந்த்த மூட் அவுட்டில் நண்பனை பிக்கப் செய்ய போனால்  அவன் வீட்டு  தொலைக்காட்சியில் எங்க போயிட்டு இருக்கு என் சமூகம் என வருந்திக்கொண்டிருந்தார் தம்பி பட மாதவன் 
ஆம் எங்க போயிட்டிருக்கோம்

புதன், 15 செப்டம்பர், 2010

விளம்பரம் எனும் விபரீதம்

கடந்த 10 09  2010 அன்று கைரளி (மலையாளம்) டிவியில் ஒரு விவாத நிகழ்ச்சி (நம்ம விஜய் டிவி நியா நானா மாதிரி)  நிகழ்ச்சியின் பெயர் க்ராஸ் பையர் நிகழ்ச்சியின் அன்றைய விவாத தலைப்பு கேரளாவில் சமீபத்தில் புயல் கிளப்பிக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு ஊழல்
விவாதத்தின் ஒரு கட்டத்தில் லாட்டரி அனுமதிக்க வேண்டும் என்று அதன் விற்ப்பனையில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வந்த ஒருவர் தெரிவித்தார் அதற்க்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் பேசுகையில் லாட்டரிக்கு அனுமதி அளிக்கலாம் ஆனால் இதற்க்கு முன் நடிகர் ஜகதீஸ் தோன்றி லாட்டரி விற்ப்பனையை ஊக்குவித்தது போன்ற விளம்பரங்களை மறு பரிசீலனை செய்து (அப்ப கூட விளம்பரத்துக்கு தடை கோரவில்லை அவர்) விளம்பரங்கள் மக்கள் மனதில் அதீத ஆசைகளை விதைக்காவண்ணம் செய்ய வேண்டும் என்றார் அந்த இடத்தில்
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு சிறிய விளம்பர இடை வேளை விட்டார் 
அந்த இடை வேளையில் ஒரு விளம்பரத்தில் ஒரு பள்ளி மாணவன் ஒரு இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பு மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியிடம் ஒரு பூவை பரிசளிக்கிறான் அவள் அதை தூக்கி எறிகிறாள் திரும்பவும் அவன் ஒரு கடிதம் குடுக்கிறான் அதையும் அவள் தூக்கி எறிகிறாள் பின் பள்ளிக்கூட வரண்டாவில் நிற்கும் அவன் அவள் வரும்போது ஒரு அழகிய நகை பெட்டியை திறந்து காட்டுகிறான் அதில் ஒரு மோதிரம் இருக்கிறது அதை பார்த்ததும் அவள் இம் முறை அவன் கரங்களை பற்றிக்கொண்டு பள்ளிக்கூட வராண்டாவில் நடக்கிறாள் அவர்கள் இருவரும் அவுட் ஓப் போகஸில் தெரிய திரையில்
சோன ஜுவல்லரி  என எழுத்துக்கள் விரிகின்றன
எங்கே போய் கொண்டிருக்கிறோம் எதை கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது இந்த ஊடகங்கள்
நமக்கு என யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுதே இன்னொரு விளம்பரம்
இந்த முறை நடிகர் மாதவன் ஒரு டேபிளில் தன் மனைவிக்கு தன் கையால் சமைத்த உணவை பரிமாறுகிறார் அதில் உள்ள அன்பை நுகராமல் அதன் சுவை குறைவாக உள்ளது  என அவள் அதை வெறுப்புடன் நிராகரிக்கிறாள் உடனே நடிகர் வேறொரு பாத்திரத்தை அவள் முன் வைக்கிறான் அவள் அதையும் மறுக்கவே அவன் அதை திறந்தது காட்டவே உள்ளே விலை உயர்ந்த்த நக்லஸ் அதை காணும் அவள் அவனை கட்டியனைக்கிறாள்  உறவுகள் அனைத்தும் பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மார்க்சின் வார்த்தைகள்
உயிர் பெற்றுக்கொண்டே இருக்கிறது ஒவ்வொரு முறையும்