ஞாயிறு, 1 ஜூலை, 2012

ஜனநாயகம் இது முதலாளித்துவ ஜனநாயகம்…







இது முதலாளிகளின் இலாப நலனுக்காக முதலாளிகளுக்காக இருக்கும் ஜனநாயகம் என்பதை நீரூபித்து இருக்கிரது சமீபத்தில் கல்வி தனியார்மயம் ஆவதை எதிர்த்து டிபிஐ அலுவலகத்தை முற்றுகை இட்ட மாணவர்களின் மீதான காவல்துறையின் தாக்குதல். அதிலும் தற்ப்போது நடப்பது பாசிச காட்டாச்சி தடியையும் அடக்குமுறையும் அன்றி வேற்றென்ன எதிர்பார்க்க முடியும்.

அடக்குமுறைகளும் வரலாற்று தேவையே..

எனது கடந்தகால அனுபவங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்து இருக்கின்றன எப்போதும் போராட்ட காலங்களில் களங்களில் இதுபோன்ற அடக்கும்றைகள் மட்டுமே தாவரங்களுக்கு இடயே தாவரம் போலவே வளர்ந்திருக்கும் கலைகளை கலைய உதவும். ஆம் சமாதானக்காலங்களில் வாய் சொல்லில் வீரர்களாக இருந்த பலர் ஒடுக்குமுறை காலங்களில் அட்ரஸ்ஸே இல்லாமல் போனதையும் அடிபனிந்த கைப்பிள்ளைகளாக மாறியதையும் பார்த்துள்ளேன் எனவே போராளிகளையும் போராளிகளைப்போல காட்சியளித்து பொழுதை போக்குவோரயும் பிரித்தறிய அடக்குமுறைகள் எப்போதும் பயன்பட்டே வந்துள்ளது

வரலாறு எப்போதும் ஒரே திசையில் பயணிப்பது இல்லை.

’’பண்டைய கால வரலாற்றில் வல்லரசுகளாக விளங்கிய ஏமன் மற்றும் சிரியாவுக்கு இடையே இருந்த ஒரு சிறு நாடோடிக்கூட்டத்தின் தலைவன் இந்த இரு நாடுகளையும் நாம் ஒரு நாள் ஆளுவோம் என் றார் அதை எளனமாக பார்த்த கூட்டம் அப்படி அவர்கள் ஆண்டதையும் பார்க்க நேர்ந்தது என்பதே அரேபிய வரலாறு’’ சின்ன வயதில் அன்னை சொல்லிக்கொடுத்து வளர்த்த கதைகளில் கேட்டது
பதின் வய்துகளில் ஏரியாவில் இருந்த தோழர் அண்ணன் என ஏரியா பசங்களால் செல்லமாக அழைக்கப்பட்ட DYFI தோழர் நஸீர் சொல்லிய கதைகள்ளின் ஊடாக சொல்லித்தந்தார் அடிமை விலங்குகளை அடிமைகளே உடைத்தெரிந்ததன் குறிஉயீடே ஸ்பார்ட்டகாஸ் என்று
அதன் பிறகு விரும்பிப்படித்த ருஷ்ய வரலாறு காட்டியது கஞ்சிக்கு கஷ்ட்டப்படும் தொழிலாளி வர்கம் போராடி வென்றதே மக்கள் ஜனநாயகம் என்பதை.
எனவே வரலாறு தோறும் ஒடுக்கப்பட்ட மக்கள் வென்றுள்ளதே நிதர்சனம்.
விதைக்கும்  காலம் ஒன்று உண்டெண்றால் அறுவடைக்காலமும் இருந்தே தீரும் இப்போது விதைத்திருக்கும் அடக்குமுறையாளர்களும் அறுவடை காலத்தை எதிர்பார்த்தே ஆகவேண்டும்…