புதன், 31 ஜூலை, 2013

வார்த்தைகளின் பயணம்.



என் 

உணர்வுகளை
மொழியாக்கி
உச்சரிக்கிறேன்

எளிதாக
எட்டிவிடுகிறது
உன்
செவிகளை

ஆயினும்
நீண்ட கால தூரம்
பயணிக்க வேண்டும்
அவை உன்
இதயத்தை வந்தடைய...

செவ்வாய், 30 ஜூலை, 2013

சமாதி கட்டுவோம்...



சாதிக்கும் கரங்கள்
இணைந்தால்
சாதிக்கு(ம்) சமாதி
கட்டலாம்..

ஞாயிறு, 28 ஜூலை, 2013

திரை கடல் ஓடி...


வந்தேரிகள்.. வந்தேரிகள்..
என வசை பாடி - தமிழில்
தட்டச்சினான் தமிழக இளைஞன்
இலண்டனிலிருந்து...

வெள்ளி, 19 ஜூலை, 2013

கவிதை..!

  


வார்த்தைகளை 

வசப்படுத்துவது அல்ல
கவிதை...! 

வாழ்வின்
இயல்பை 

பாடுவதே
கவிதை...

செவ்வாய், 16 ஜூலை, 2013

தொலைந்து போனவன்.!



என்
வாழ்க்கையை
நீ
வழி
நடத்திய
பின்

ஏன் 
என்னை
தேடி
கொண்டு
இருக்கிறாய்

நான்
உறுமாறி
அங்கே
நீ
இருக்கிறாய்

என்னை
தேடாதே

என்
தனி
சிறப்புகளாக
நீ
நேசித்தவைகளை
தேடாதே

நான்
நீயில்
இறந்து
வெகு
காலம்
ஆகிவிட்டது

காதல்.!



காதல்
திரையில்
சாத்தியமாகிறது

நிஜத்தில்
சாதியமாகிறது

கேளாய்...



உன்
முரண்
சொற்களுடன்

சமர்
செய்து
சமர்
செய்து

அறை
எங்கும்
சோர்ந்து
கிடங்கின்றன

என்
சமரச
சொற்கள்

                           

தனியாக ஏன்?



சிந்தனைகளால் 
என்னுள்
நீயும் 
உன்னுள் 
நானும் 
கலந்து
பல
காலங்கலாகியும்
சில
சமயம்
நானும்
நீயும்
தனியாக
வெளிபடுகிறோமே... ஏன்?

ஞாயிறு, 7 ஜூலை, 2013

கடவுள்...!


மனிதன்..
கடவுளை
படைத்தான்
ஊர்
உலகம்
இரெண்டு
பட்டது...

பிணத்திலும்... பெருமை..



செத்தவனை
புதைக்கவும்
தனி
சுடு காடு
பிணத்திலும்
பெருமை
தேடும்.
.
.
சாதி.....

வெள்ளி, 5 ஜூலை, 2013

ஓட்டு...



எதை

’சாதி’த்’தீ’ர்
உங்கள்
’சாதி’த் “தீ”
கொண்டு..!

கேள்வியின்
இறுதியில்
எஞ்சி
நின்றது
விடை
”ஓட்டு”

சாதீ



மனிதத்தை
எரி பொருளாக
கொண்டு
மனிதர்களை
எரித்து
கொண்டு
இருக்கிறது....

அனைக்க
முடியாதவாறு
பற்றிப்
பரவிக்
கொண்டு
இருக்கிறது

சா”தீ”...

புதன், 3 ஜூலை, 2013

எனக்கும் உண்டு ஒரு பெரிய உலகு...



முக்காடு போடாமல்
வாசலில் நிற்காதே
புர்கா அணியாமல் 
வீதியில் நடக்காதே 

ஜன்னத்து கிடைக்காது 
ஜன்னலில் பார்க்காதே
மையத்தும் மதிக்காது 
மாடியில் உலவாதே 

சத்தமாய் சிரித்து 
சைத்தானை அழைக்காதே 
வெட்கமற இருந்து 
இப்லீஸை இழுக்காதே 

தலை நிமிர்ந்து நடந்து 
'தவ்பா' வை இழக்காதே 
பலர்முன்பு பேசி
'பத்வா 'வாங்காதே 

எவ்வளவோ தடைகள் 
எப்போதும் விதிக்கிறாய் ,
என் சுயத்தின் கழுத்தை -இரு 
கைக்கொண்டு  நெறிக்கிறாய் 

என்சுதந்திர வானில் 
முள்வலையை விரிக்கிறாய் 
உன் ஆதிக்கச் சங்கிலியில் 
என் பெண்மையை பினைக்கிறாய் 

ஒழுக்கம் என்கிறாய் -பெரும் 
கற்பு என்கிறாய் -எனைப் 
பண்டமாய்ப் பார்க்கிறாய் -வெறும் 
பொருளாய் நினைக்கிறாய் 
பொறுப்பென பிதற்றுகிறாய் 
பாதுகாப்பென கதைக்கிறாய் 

உன் குற்றங்களை நியாயப்படுத்த 
குரானையும் ஹதீசையும் 
துனைக்கழைத்துக்  கொள்கிறாய் 

நான் தூங்குகையில் 
கைபேசியில் தேடுகிறாய் 
நான் குளிக்கையில் -என் 
நாட்காட்டியில் நுழைகிறாய் 

என் முகநூலை உளவு பார்க்க 
முகமூடியில் வருகிறாய் 
புர்காவில் மூடாத 
என் முகக்கண்களை வேவுபார்க்க 
நான் அறியாமல் தொடர்கிறாய் 

நடக்கையிலும் நிற்கையிலும் - ஒரு 
ஜோடிக்கண்கள் எனை 
ஊடுருவிப் பார்ப்பதை 
அவ்வப்போது உணர்கிறேன் 

பேசும்போதும் சிரிக்கும்போதும் - ஒரு 
திருட்டுக்கண்கள் என் அந்தரங்கத்தில் 
நுழைவதை எப்போதும் அறிகிறேன் 

தாய்ப்பாலின் தூய்மை அளக்க 
தராசு கேட்கும் இரக்கமற்றவன் நீ 

மறுமொழி சொன்னால் 
முகம்பார்க்க மறுக்கிறாய் 
காரணம் கேட்டால் 
கண்பார்த்து முறைக்கிறாய் 

உயிர்அழும் நேரங்களில் 
உறங்காமலே விடிந்துபோன 
இரவுகளை நீ அறிவாயா?

என் தலையணை ஓரங்களில் உறைந்துபோன 
உப்புநீர்  ஓவியங்களை 
என்றாவது நீ உணர்வாயா?

வேர்களின் அழுகுரல் 
வெட்டுபவற்கு தெரிவதில்லை 

பறவையின் அபலக்குரல் 
வேடர்களுக்கு புரிவதில்லை 

உன்னைப் பொறுத்த வரை நான் 
உன் காமம் தணிக்கும் போகக்காரி 
உன் வீட்டைப்பெருக்கும் வேலைக்காரி 

இன்ஷா அல்லாஹ் இன்னல் தீருமென்று 
இரவும் பகலும் தொழுதும் கூட 
எல்லாம் வல்லவனின் கிருபை 
எனக்கு மட்டும் கிடைக்கவில்லை 

செத்துவிடத்தான் நினைக்கிறேன் 
பெற்ற பிள்ளை முகம் தடுக்குது - உன்னை 
விட்டுவிடத்தான் நினைக்கிறேன் 
உற்ற சொந்தம்  வந்து முறைக்குது 

சமாதனம் சொல்ல வரும் 
சொந்தங்களுக்கு எப்படிச்சொல்வேன் 
என் தன்மானம் தற்கொலை செய்து 
ஆண்டு சில ஆனதென்று 

இயல்பான புரிதல் மறுத்து 
எதிர்மறை எண்ணம் வளர்த்து 
எண்ணங்களால் குழம்பித் தவித்து 
குழப்பத்தில் சுயநிலை இழந்து 

உன்னை நீயே உணர மறந்து 
விபரீத கற்பனையில் பறந்து 
எங்கோ எதையோ தேடித்திரிந்து 
தொலைத்தாய் நீ அமைதி மருந்து 

இல்லாத பழியொன்றை 
என்மேல் சுமத்த துடிக்கிறாய் 
உன் சந்தேகக்  கருநஞ்சை 
possessiveness என அழைக்கிறாய் 

சந்தேகம் உள்ளே வந்தால் 
சந்தோஷம் ஓடிப்போகும்

இனியாவது உணரப்பழகு 
இயல்பாக வாழப்பழகு 
இல்லையெனில் தூர விலகு 
எனக்கும் உண்டு ஒரு பெரிய உலகு...

தோழர் - ஹீரா

நண்பன்.. தோழன்..



என் 
சரிகளுக்கு 
கிரீடம் 
சூட்டி
மகிழ்ந்தவர்கள்
என்
நண்பர்கள்

என்
தவறுகளை
சிலுவையில்
ஏற்றி
என்னை
செதிக்கியவர்கள்
எம்
தோழர்கள்

தவறுகளை
சிலுவையேற்றி
தவறுகளை 
சரிகளாக
உறுமாற்றிய
தோழன்

சரிகளை
ஊக்குவித்து
என்னுள்
உற்ச்சாகமாக
என்
நண்பன்


என்
நண்பனுக்கும்
எம்
தோழனுக்குமான

இடைவெளி
இவ்வளவே...

என் நண்பன்
எம் தோழன்