வியாழன், 14 அக்டோபர், 2010

பாலஸ்தீன்,காஷ்மீர் தமிழக முஸ்லீம்கள்





இன்று இந்த கட்டுரை பதிவேரிக்கொண்டிருக்கும் நேரத்தில் கூட பல சிறுவர்கள்,பெண்கள்,இளைஞர்கள் கல்லெறிந்து கொண்டிருக்கலாம் தங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் ராணுவங்களுக்கு எதிராக. அந்த உணர்வுக்கும் நெஞ்சுரிதிக்கும் ஒரு வீர வணக்கம். இந்த போராட்டத்தில் அவர்கள் வெற்றிபெற புரச்சிகர வாழ்த்துக்கள்.
பாலஸ்தீனிலும் காஷ்மீரிலும் ஏதோ முஸ்லீம் மத அடிப்படை வாதத்துக்காகதான் போராடுகின்றனர் என்பது போன்ற ஒரு மாயை இங்குள்ள முஸ்லீம்களிடையே நிலவுவதையும் அதை இசுலாமிய தலைமைகள் அப்படியே ஊட்டி வளர்ப்பதையும் காண்கிறேன்.
காஷ்மீரை பொறுத்தவரை இதுபோன்ற இசுலாமியர்களின் சிந்தனையை வைத்து அங்கு உண்மையிலேயே ஒரு மத மோதல் தான் நடந்துகொண்டிருக்கிறது என்று இந்துத்துவ சக்திகள் தங்கள் ஊடகங்கள்(இதற்க்கு உதாரணமாக நிறைய சினிமா மற்றும் செய்திகள் உள்ளன அத்தனையும் இட இடம்பத்தாது) மூலம் நிலை நிறுத்துகிறது அதில் வெற்றியும் பெற்றுள்ளது
என் 26 வயதுவரை நானும் பாலஸ்தீன விடுதலைபோரை ஒரு தவறான கண்ணோட்டத்துடன்தான் பார்த்திருந்தேன் பின் ஒரு முறை லைலா ஹலேத் (laila khaled )எனும் ஒரு ஆவணப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதை பார்த்த பிறகே பாலஸ்தீன் பற்றிய என் மதிப்பீடுகள் முழுதும் தவறானதே என் சமூகத்தின் தலைமை பீடத்தில் உள்ளவர்களும் எங்களுக்கு இந்த உண்மையை சொல்லாமல் மறைக்கின்றனர் என்றும் மறைப்பதன் அரசியலும் விளங்கியது.
இனி அந்த ஆவணப்படம் பற்றி;
ஆவணப்படம் லைலா ஹலேத் என்ற ஒரு போராளி பெண்மணியை பற்றியது.
அந்த பெண்தான் வரலாற்றில் முதல் முறை ஆகாய விமானத்தை கடத்தியவர் அதுவும் இருமுறை (இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் எகிப்ப்தில்) அந்த பெண் ஒரு நாத்திகவாதி (இறை மறுப்பாளர்) மேலும் அவர் சார்ந்திருக்கும் அமைப்பு தோழர்(ஆண்)அவருடன் கைகுலுக்கிறார் நீண்ட இடைவெளிக்குப்பின் அவரை சந்திக்கும் தோழர் பாசப்பூரிப்புடன் அவரை ஆரத்தழுவிக்கொள்கிறார் கன்னத்தில் முத்தமிடுகிறார் பின் ஹலேடிடம் கேட்ப்பார் இப்பவும் நி தொழுகாம்தான் இருக்கியா என்பர் ஹலேத் சற்றும் யோசிக்காமல் இல்லையென்பார் அந்த ஆவணப்பட இயக்குனர் அவரிடம் கேட்க்கும் கேள்விக்கெல்லாம் அற்ப்புதமாக பதிலளித்துக்கொண்டே வருகிறார் ஒரு இடத்தில் சிறுவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் அப்போது இயக்குனர் ஹலேத் இடம் சிறுவர்கள் போரிடுவது தவறில்லையா என வினவுவார் அதற்கவர் அவர்கள் சிறுவர்களையும்தான் கொள்கின்றனர் என பதிலளிப்பார்
பின் இருவரும் வீதியில் நடந்துவரும்பொழுது சில சிறுவர்கள் ஒரு ஹெலிகாப்டரின் மீது கல்லெறிந்துவிட்டு(கல் அவ்ளோதூரம் போய் தாக்கவில்லை)மீண்டும் பழையநிலைக்கே வந்து விளையாடிக்கொண்டிருப்பார் அவர்களில் ஒருவனிடம் இயக்குனர் ஏன் கல் எறிந்தீர்கள் எனும்போது அவன் அவர்கள் எங்களை ஏமாற்றி அடிமைபடுத்திவைத்துள்ளனர் அதற்கெதிராகவே கல் எறிந்தோம் என்று கூறிவிட்டு சைக்கிளிலில் ஏறி சென்றுவிடுவான்
இதிலிருந்து தெரிவது ஒன்றுதான் மதம் எனும் அடிப்படையிலோ அல்லது மத வெறியின் அடிப்படையிலோ அங்கெல்லாம் போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை மாறாக சுதந்திரம் வேண்டியும் அடிமை தலைகளை எதிர்த்துமே முன்னெடுக்கப்படுகிறது
போராட்டம் நடக்கும் பலஸ்தீனில் போராடுவது முஸ்லீம்கள் என்பதாலேயே அவ்வாறு பார்க்கப்படுகிறது
காஷ்மீரின் நிலையும் இதுவே பார்க்க ஜூ வியில் இந்த வார(13/10/2010)ம் மனித உரிமைப்போராளி சுகுமாரனின் கட்டுரை
இனியேனும் தமிழக முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் பாலஸ்தீனையும் காஷ்மீரையும் இங்குள்ள தலைவர்களையும்
இனியும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் அது காவி பயங்கரவாதிகளுக்கே சாதகமாகும்

2 கருத்துகள்:

  1. அப்போ காஷ்மீர் இந்துக்களை அடித்து விரட்டிவிட்டார்களே அவர்கள் எல்லாம் முதலாளிகளா?
    அல்லது அங்குள்ளவர்களை அடிமைகளாக வைத்திருந்தார்களா?

    பதிலளிநீக்கு
  2. உங்க கேள்வியே புரியலையே காஷ்மீர் இந்துக்களை யார் எப்பொழுது அடித்து விரட்டினர்

    பதிலளிநீக்கு