திங்கள், 20 செப்டம்பர், 2010

காலை மணி எட்டு கண்டபடி திட்டு .

இன்று காலை சுமார் எட்டு மணி இருக்கும்
வீட்டு வாசலில் வண்டி துடைத்துக்கொண்டிருந்தேன் ஒரு தாய்? தன் ஐந்து வயது மகனை பள்ளிக்கு கூட்டி இல்லை இல்லை அடித்து இழுத்து சென்றுகொண்டிருந்தார்
(அடின சாதாரண அடி இல்லேங்க தர்மடி) தெருவெல்லாம் அடித்துக்கொண்டே வந்தார்
அந்த ஒரு கட்டத்துல எனக்கே வலிக்க ஆரம்பித்துவிட்டது. பொறுக்க முடியாமல் அந்த அம்மாவை அதட்டி விட்டேன் அவ்வளவுதான் இதுதான்னு இல்லாதளவுக்கு எனை வருத்தெடுத்துவிட்டார். அந்த அம்மா அங்கிருந்து சென்றபின் நிலவிய அமைதிக்குப்பின் என் அருகில் வந்த அண்டை வீட்டாரும் எனதருமை தாயாரும் எனையே குறை சொல்லி
அறிவு புகட்டினர் எனக்கு தேவையில்லாத வேலையாம். (அதுல ஒருத்தரின் அபார கண்டுபிடிப்பு எனக்கு மனதில் ரஜினின்னு நினைப்பாம் பெரிய மனோதத்துவ மருத்துவறு) எல்லாம் முடிந்த்த மூட் அவுட்டில் நண்பனை பிக்கப் செய்ய போனால்  அவன் வீட்டு  தொலைக்காட்சியில் எங்க போயிட்டு இருக்கு என் சமூகம் என வருந்திக்கொண்டிருந்தார் தம்பி பட மாதவன் 
ஆம் எங்க போயிட்டிருக்கோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக