திங்கள், 20 செப்டம்பர், 2010

இன்னும் ஓர் (அ)நீதி

சுதந்திர ? இந்தியாவின் அகப்பெரும்பான்மையான வன்முறையில்  இரண்டாவது பாபர் மசூதி இடிப்பு (முதலாவது முஸ்லீம் வேடமிட்ட ஒரு காவி பயங்கரவாதி கோட்சேவால் காவி மிதவாதி காந்தி படுகொலை செய்யப்பட்டது )இப்போது நாடே ஒரு வித பதட்டத்துடன் (கோவையில் சில கல்லூரிகளில் i v போவது கூட ஒத்தி வைத்துள்ளனர் தீர்ப்புக்காக )இந்த இடிப்புக்கான தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளது . ஆனால் உண்மை என்ன   
மசூதி இடித்த அன்றே எழுதியாகிவிட்டது தீர்ப்பு இப்போது நடப்பதெல்லாம் நாடகமே தாமதமாக வழங்கப்படும் நீதியும் அநீதியே. இந்த அநீதிக்கு பின்னும் நடக்கிறது காமெடி.  சாதா   காமெடி  அல்ல உலகமாக ஜனநாய காமெடி. பிரதமர் உதிர்த்த காமெடி தீர்ப்பு இத்தோடு தீர்ந்து விடாது இதை மேலும் மேல் முறையீடு செய்யலாம் என்று .
ஆம் இவர்கள் மனித படுகொலையே மலுங்கடிதவர்கள் போபாலில். இவர்களுக்கு  இந்த மசூதி படுகொலை எல்லாம் எம்மாத்திரம்

காலை மணி எட்டு கண்டபடி திட்டு .

இன்று காலை சுமார் எட்டு மணி இருக்கும்
வீட்டு வாசலில் வண்டி துடைத்துக்கொண்டிருந்தேன் ஒரு தாய்? தன் ஐந்து வயது மகனை பள்ளிக்கு கூட்டி இல்லை இல்லை அடித்து இழுத்து சென்றுகொண்டிருந்தார்
(அடின சாதாரண அடி இல்லேங்க தர்மடி) தெருவெல்லாம் அடித்துக்கொண்டே வந்தார்
அந்த ஒரு கட்டத்துல எனக்கே வலிக்க ஆரம்பித்துவிட்டது. பொறுக்க முடியாமல் அந்த அம்மாவை அதட்டி விட்டேன் அவ்வளவுதான் இதுதான்னு இல்லாதளவுக்கு எனை வருத்தெடுத்துவிட்டார். அந்த அம்மா அங்கிருந்து சென்றபின் நிலவிய அமைதிக்குப்பின் என் அருகில் வந்த அண்டை வீட்டாரும் எனதருமை தாயாரும் எனையே குறை சொல்லி
அறிவு புகட்டினர் எனக்கு தேவையில்லாத வேலையாம். (அதுல ஒருத்தரின் அபார கண்டுபிடிப்பு எனக்கு மனதில் ரஜினின்னு நினைப்பாம் பெரிய மனோதத்துவ மருத்துவறு) எல்லாம் முடிந்த்த மூட் அவுட்டில் நண்பனை பிக்கப் செய்ய போனால்  அவன் வீட்டு  தொலைக்காட்சியில் எங்க போயிட்டு இருக்கு என் சமூகம் என வருந்திக்கொண்டிருந்தார் தம்பி பட மாதவன் 
ஆம் எங்க போயிட்டிருக்கோம்

புதன், 15 செப்டம்பர், 2010

விளம்பரம் எனும் விபரீதம்

கடந்த 10 09  2010 அன்று கைரளி (மலையாளம்) டிவியில் ஒரு விவாத நிகழ்ச்சி (நம்ம விஜய் டிவி நியா நானா மாதிரி)  நிகழ்ச்சியின் பெயர் க்ராஸ் பையர் நிகழ்ச்சியின் அன்றைய விவாத தலைப்பு கேரளாவில் சமீபத்தில் புயல் கிளப்பிக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு ஊழல்
விவாதத்தின் ஒரு கட்டத்தில் லாட்டரி அனுமதிக்க வேண்டும் என்று அதன் விற்ப்பனையில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வந்த ஒருவர் தெரிவித்தார் அதற்க்கு ஆதரவு தெரிவித்து ஒருவர் பேசுகையில் லாட்டரிக்கு அனுமதி அளிக்கலாம் ஆனால் இதற்க்கு முன் நடிகர் ஜகதீஸ் தோன்றி லாட்டரி விற்ப்பனையை ஊக்குவித்தது போன்ற விளம்பரங்களை மறு பரிசீலனை செய்து (அப்ப கூட விளம்பரத்துக்கு தடை கோரவில்லை அவர்) விளம்பரங்கள் மக்கள் மனதில் அதீத ஆசைகளை விதைக்காவண்ணம் செய்ய வேண்டும் என்றார் அந்த இடத்தில்
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு சிறிய விளம்பர இடை வேளை விட்டார் 
அந்த இடை வேளையில் ஒரு விளம்பரத்தில் ஒரு பள்ளி மாணவன் ஒரு இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பு மாணவன் தன்னுடன் படிக்கும் சக மாணவியிடம் ஒரு பூவை பரிசளிக்கிறான் அவள் அதை தூக்கி எறிகிறாள் திரும்பவும் அவன் ஒரு கடிதம் குடுக்கிறான் அதையும் அவள் தூக்கி எறிகிறாள் பின் பள்ளிக்கூட வரண்டாவில் நிற்கும் அவன் அவள் வரும்போது ஒரு அழகிய நகை பெட்டியை திறந்து காட்டுகிறான் அதில் ஒரு மோதிரம் இருக்கிறது அதை பார்த்ததும் அவள் இம் முறை அவன் கரங்களை பற்றிக்கொண்டு பள்ளிக்கூட வராண்டாவில் நடக்கிறாள் அவர்கள் இருவரும் அவுட் ஓப் போகஸில் தெரிய திரையில்
சோன ஜுவல்லரி  என எழுத்துக்கள் விரிகின்றன
எங்கே போய் கொண்டிருக்கிறோம் எதை கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது இந்த ஊடகங்கள்
நமக்கு என யோசித்துக்கொண்டு இருக்கும்பொழுதே இன்னொரு விளம்பரம்
இந்த முறை நடிகர் மாதவன் ஒரு டேபிளில் தன் மனைவிக்கு தன் கையால் சமைத்த உணவை பரிமாறுகிறார் அதில் உள்ள அன்பை நுகராமல் அதன் சுவை குறைவாக உள்ளது  என அவள் அதை வெறுப்புடன் நிராகரிக்கிறாள் உடனே நடிகர் வேறொரு பாத்திரத்தை அவள் முன் வைக்கிறான் அவள் அதையும் மறுக்கவே அவன் அதை திறந்தது காட்டவே உள்ளே விலை உயர்ந்த்த நக்லஸ் அதை காணும் அவள் அவனை கட்டியனைக்கிறாள்  உறவுகள் அனைத்தும் பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மார்க்சின் வார்த்தைகள்
உயிர் பெற்றுக்கொண்டே இருக்கிறது ஒவ்வொரு முறையும்
  

கழிவறைக்கும் உதவாதினி

கோவையில் 2010 செப்11 அன்று குனியமுத்தூர் எனும் பகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் இந்து முன்னணி வி ஹெச் பி அனுமன் சேனா போன்ற அமைப்புகளை சேர்ந்த ரௌடி கும்பல் ஒன்று விநாயகர் சிலை கொண்டுவந்து பள்ளிவாசலின் அருகில் வைத்தனர் (இந்த இடம் ஒரு முஸ்லிமுக்கு சொந்தமானது ) இந்த இடத்தில் இப்படி வைப்பது இது மூன்றாவது முறை ஒவ்வொரு முறையும் பிரச்சனை ஆகும் போலீஸ் வரும் ரௌடிகள் எடுத்து சென்று விடுவர்
அதே போலதான் அன்றும் எடுத்து சென்றுவிட்டனர் ஆனால் திடீரென நள்ளிரவு சுமார் 1 மணிக்கு மீண்டும் ஒரு ஒன்னரை அடி பிள்ளையாரை கொண்டுவந்து நட்டுவிட்டனர்
அதை தட்டிக்கேட்ட முஸ்லிம்களுக்கும் அந்த ரௌடிகளுக்கும் அடிதடியாகிவிட்டது மாலையே பதட்டம் இருந்தததால் தயாராக இருந்த காவல்துறை தலையிட்டு இரு தரப்பிலும் சிலரை கைது செய்து சிலையையும் அப்புறப்படுத்தியது அதை தொடர்ந்து மறுநாள் இரவு மதுக்கரை எனும் பகுதியில் உள்ள முஸ்லிம் காலனி எனும் பகுதியில் புகுந்தது பொதுமக்களை தாக்கியும் கடைகளை சூறையாடியும் சென்றது ஒரு கும்பல்
உண்மை இவ்வாறு இருக்க தின மல(ர்)ம் நாளிதளின் கோவை பதிப்பில் வெளியாகியுள்ள செய்தி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலவே உள்ளது
அந்த செய்தியில் பொது மக்கள் சிலை வைத்தது போலவும் அதற்க்கு இஸ்லாமியர்கள் ஏதிர்ப்பு தெரிவித்தது போலவும் பொய்யாய் புனைந்துள்ளனர் மேலும் விநாயகர் சதுர்த்தி விழ யாரால் எந்த ஆண்டுமுதல் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டு கொண்டாடப்படுகிறது என்பதை தின மலம் ஒன்றும் அறியாததில்லை இங்கே இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும் சென்னை எம் ஜி ஆர் நகரில் மக்கள் கலை இலக்கிய கழகம் நடத்திய இந்தியாவின் இதயத்தின் மீதான போர் எனும் தலைப்பில் பச்சை வேட்டைக்கு எதிரான கருத்தரங்கம் நடந்த மறுதினம் இதே நாளிதழில் வந்த செய்தியில் நக்சலைட்டுகள் தமிழகத்தில் ஊடுருவல் தமிழக உளவுத்துரைன் குறைபாடு என்றெல்லாம் கவலை பட்டுக்கொண்டது (அந்த கருத்தரங்கம் ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி தெருமுனை விளக்க கூட்டமெல்லாம் போட்டு நடந்தது அது தான் உளவுத்துறைக்கு தெரியாததாம் ) அது மக்கள் நடத்தியது அதை நக்சல்கள் என சித்தரிக்கும் தின மலத்துக்கு சதுர்த்தி நடத்துவது சில இந்து அமைப்புகள் என்பது தெரியாதுபோலும்
மேலும் அந்த செய்தியில் சிலையை அகற்ற சப் இன்ஸ்பெக்டருடன் வந்த இரு அப்பாவிகளை அங்கிருந்த முஸ்லிம்கள் தாக்கி விட்டார்கள் என்றும் ஒரு பொய்யை வாந்திஎடுத்துள்ளது தினமலம்
இறுதியாக மக்கள் புரிந்துகொள்ள இந்த புகைப்படங்களையும் இணைக்கிறேன்
இது கடைகள் சூறையாடப்பட்ட மதுக்கரையில் வி ஹெச் பி வைத்துள்ள பேனர்
பேனர் வாசகம் இதுதான் ; வந்தால் உங்களோடு
வராவிட்டால் நாங்களாக
ஏதிர்த்தால் உங்களையும் மீறி
V H P மதுக்கரை
இது போன்ற செயலில் ஈடுபடுவது பொதுமக்கள் அல்ல என்பதை காட்டும் தினதந்தி செய்தி இத பார்த்தாவே புரிஞ்சுக்கலாம் சதுர்த்தி எதற்குன்னு
இறுதியாக இதுபோன்ற பொய்களையே பரப்பி வரும் தினமலத்தை இனி நம் கழிவறை காகிதமாக கூட பயன்படுத்தாமல் புறக்கணிப்போம்

திங்கள், 6 செப்டம்பர், 2010

கிரிக்கெட்டும் விக்கெட்டும்

மீண்டும் ஊடகங்களில் கிரிக்கெட் சூதாட்ட செய்திகள் இம் முறை அடிபடும் பெயர்கள் பாகிஸ்தானியர்களாது என்பதால் கொஞ்சம் சந்தோசம் கொள்ளலாம் நம் தேச பக்தர்கள்
இருந்தாலும் ரயிலிலும் பஸ்சிலும் திரையரங்குகளிலும் டீ கடைகளிலும் எல்லாம் மிகுந்த வருத்ததுடனும் கிரிக்கெட்டின் வரலாற்று?!...  ஆதாரத்துடனும் அலசப்படுகிறது 
அவ்வாறு என்னிடம்  வருத்தப்பட்ட ஒரு உழைப்பாளி (கலாசி தொழிலாளி )நான் எவ்வித ரீயாக்சனும் காட்டாதது கண்டு என்னிடம் போதுமான அளவு பொது அறிவு இல்லை என்று வருத்தப்பட்டார்  கிரிக்கெட்டை தெரிந்துகொள்ள சொன்னார் தெரிந்து  கொண்டால் ஒரு மேச்சை கூட விடாமல் பார்ப்பாய் என்றார்
94 முதல் 96 ஆம் ஆண்டுவரை கோவை சபர்பன் மேனிலைப்பள்ளியில் கிரிக்கெட் டீமில் நான் வேகப்பந்து வீச்சாளன் மேலும் பள்ளியில் ஆனந்தா ஹோவ்சின் கேப்டன் அப்பொழுதெல்லாம் வீட்டில் இருப்பதே இல்லை என்று என் தந்தையின் கையிலிருந்து வாங்கிய அடிகளின் தழும்புகள் இன்னும் இருக்கிறது என் முதுகிலும் முழங்காலிலும்
(அதுல பாதி அடி வாங்கிருந்தா கூட திருந்திருப்பாணுக இந்த கிரிக்கெட் சூதாடிகள் ) 
சில சமயம் கூட விளையாட பசங்க வரமாட்டாங்க காரணம் அவங்க போய் வேர ஆளுக (அத இந்த கிரிக்கெட் வீரனுக )வெளையடரத பார்க்க போயிருவானுக அப்பொழுதெல்லாம் ஒத்த ஸ்டம்ப நட்டு வச்சு தனியவே பந்து வீசீட்டு இருப்பேன் (இப்போ புரிஞ்சாத நான் வேக பந்து வீச்சாலனாதன் ரகசியம் ) ஒரு கட்டத்துல டிவில கிரிக்கெட் போட்டங்கன்ன மறுநாள் பள்ளிக்கூடம் பூரா  முதல் நாள் பார்த்த மேச்ச பத்திதான் பேசிகிட்டு இருப்பானுக வாத்தியார் உட்பட. எங்க இனிமேலும் கிரிக்கெட்ட பார்க்காம இருந்த்தொமுன்னா நம்மள கிறுக்கனுக லிஸ்ட்ல சேர்த்து ஆஸ்பிடலுக்கு அனுப்பிருவாங்கலோனு பயம் வந்துருச்சு அதனால நானும் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிச்சிட்டேன் நம்ம ஏறிய ஆட்டோ ஸ்டாண்டுல அதுக்கப்புறம் நாமதான் ஹீரோ இத்தன நாள் கிரிக்கெட் பாக்கலயேனு வருத்தப்பட்ட தருணங்கள் அவை
இப்படியாக கழிந்து கொண்டிருந்தது வாழ்க்கை. அப்போதான் வந்தது அந்த சந்தோஷ செய்தி டிஸ்ட்ரிக் டீமுக்கு ஆள் செலக்ட் பண்றாங்களாம் சரின்னு போய் கலந்துகிட்டா
 உள்ளுக்குள்ள ஒரே படபடப்பு அப்புறம் பார்த்தா பள்ளிக்கூடத்துல நம்மளவிட சுமாரா விளையாடற பயபுள்ளைகளா நிக்கறாங்க நிம்மதியும் தைரியமும் ஒரு சேர உள்ள வந்துருச்சு ஒருவழியா பவ்லிங் டெஸ்ட் வெச்சாங்க நல்லா பண்ணுனதா எல்லாரும் பாராட்டுனாங்க எனக்கு அடுத்ததா ஸ்ரீராமும் ஓரளவிற்கு பண்ணுனதா சொன்னாங்க எல்லாம் முடிந்தது எங்களை லைனா நிக்க வெச்சாங்க ஒவ்வொருத்தர் கிட்டேயும் அப்பா என்னவா இருக்காருன்னு கேட்டுட்டு இருந்தாங்க ஸ்ரீராமின் பதில் பேங்க் மேனேஜர் எனது பதில் கூலி தொழிலாளி ஸ்ரீராம் செலக்ட் நான் ரிஜெக்ட் காரணமும் புரியவில்லை கிரிக்கெட்டும் புரியவில்லை உண்மைதான் மேலே கலாசி தொழிலாளி சொல்லியது போல கிரிக்கெட் புரியவில்லை தான் எனக்கு.
நான் சின்ன பையனா  இருக்கும் போது டென்னிஸ் விளையாடறவங்கள பாத்து சொல்லுவாங்க அதெல்லாம் பணக்கார வெளையாட்டுன்னு.
இப்போது கிரிக்கெட்டும் பணக்கார வெளையாட்டு தான். இவ்வளவு ஊழலுக்கு பிறகும் இப்போது tvல தலைக்கு (தோனிக்கு) விசில் அடிங்கன்னு iplக்காக ஒளிபரப்பாயிட்டு இருக்கு ஒரு விளம்பரம்.
  நல்ல அடிங்க விசில்லு விசிலின் அளவு கூடினால் வீரர்கள் ஆடை மறுவடிவமைப்பு செய்து (சூப்பர்மேன் போல்) உள்ளாடையிலும் பன்னாட்டு குளிர்பானத்தின் விளம்பரத்தில்  பணம் பார்க்கலாம்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

கல்லறையிலிருந்து ஒரு கதறல்.......

கடந்த ஞாயிறு 29 / 08 /10 சன் டிவியில் திரை விமர்சனத்தில் முதலாம் இடம் பிடித்தன இரு படங்கள்
ஒன்று முதல்வரின் பேரன் தயாரிப்பில் வெளி வந்தது வெற்றிகரமாக!!!????? ஓடிக்கொண்டிருக்கும் தில்லாலங்கடி (சரியான தலைப்புதான்)
இன்னொன்று இன்னொரு பேரன் நடிப்பில் தமிழ் நாட்டையே கலக்கிக்கொண்டிருக்கும்
வம்சம் (அட அந்த வம்சமில்லீங்க இது படத்தோட தலைப்பு )
இந்த முறை தப்பித்துக்கொண்டார்கள் சன் குழுமத்தின் காவலாளிகள்
எனினும் காவலர்களே உசாராக இருங்கள் ஒவ்வொரு ஞாயிறும்
இந் நிகழ்ச்சியை பார்த்து விட்டு வேலைக்கு செல்லுங்கள்
காரணம் கலைஞர் குடும்பம் அடித்த கூட்டுக்கொள்ளை பங்கு வைப்பதில் குடும்பங்களுக்குள் பிரச்ச்னை வரலாம் அப்பொழுது எழும் சந்தை போட்டில் ஏதேனும் ஒரு பேரனின் படம் இரண்டாம் இடம் தள்ளப்படலாம் நீங்களும் தாக்கப்படலாம்
அட்டாக் பாண்டியின் அடுத்த வர்சன் ரௌடிகளால்
இறுதியில் நமக்கும் கிடைக்கலாம் இன்னொரு சேனலும் இலவச கலர் டிவியும்
அவ்வாறு நிகழக்கூடாது என எச்சரிக்கை செய்து கதறுகின்றன தினகரனில் உயரிழந்த
அப்பாவி காவலர்களின் கல்லறைகள்