செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

நிழற்ப்படம் !






செல் போன் கேமராக்களின் உபயத்தில் நினைத்த நேரத்தில் நமது புகைப்படத்தை எடுத்து நிமிட நேரத்தில் இணையம் மூலம் உலகெங்கும் பதிவேற்றுகிறோம்.புகைப்படம் எடுக்க ஸ்டுடியோக்களை விட்டால் வேறு வழியே இல்லை என்ற நிலை இருந்த காலத்தில் அப்பாவி எழுத்தாளர் ஒருவருக்கும்,சர்வாதிகார புகைப்படக்காரர் ஒருவருக்கும் இடையே நிகழும் சில நிமிட நிகழ்வுகளை விவரிக்கும் புகழ் பெற்ற சிறுகதை "WITH THE PHOTOGRAPHER".1902 இல் எழுதப்பட்டது.STEPHEN LEACOCKஎழுதியது.மிகச் சிறிய கதை.கதையின் கடைசி பத்தி வரை நகைச்சுவை நிரம்பி வழிய,கடைசி பத்தி உருக வைக்கிறது.கதைக் கருவின் மிக மிக சுருக்கமான மொழியாக்கம் :

தனது புகைப்படம் எடுக்க வேண்டி கதையின் எழுத்தாளர் ஸ்டூடியோ ஒன்றிற்கு செல்கிறார்.அவரை ஒரு மணி நேரம் காக்க வைக்கும் புகைப்பட "நிபுணர்" பின்பு அவரை அதிகார தோரணையில் உள்ளே அழைக்கிறார்.அமர்ந்ததும் போடோக்ராபர் சொல்லும் முதல் வார்த்தை,

"உங்க மூஞ்சியே சரி இல்லையே " ;

பின்பு எழுத்தாளரை நெருங்கும் புகைப்படக்காரர் அவரது முகத்தை தனது இரு கரங்களுக்கு நடுவே பற்றுகிறார்.முத்தமிடப் போகிறாரோ என அஞ்சும் எழுத்தாளர் கண்களை மூடிக் கொள்ள,புகைப்படக்காரர் அவரது தலையை இந்த புறமும்,அந்தப் புறமுமாக சுழற்றுகிறார்.பின்பு கட்டளைகள் பறக்கின்றன :

உங்க தலை எனக்கு பிடிக்கல,
வாயை திறங்க கொஞ்சம்....சரி சரி வேணாம் வாயை மூடிக்கோங்க,
காது ஏன் இவ்ளோ மோசமா நீண்டுட்டு இருக்கு,கொஞ்சம் தலையை தொங்க விடுங்க,காதுங்க கீழ வர மாதிரி,
இப்ப கண்ண கொஞ்சம் உருட்டி பாருங்க...கையை முழங்காலுல வையுங்க,நல்லா இழுத்து மூச்சு விடனும்........ETC ETC ETC

ஆத்திரம் அடைந்த எழுத்தாளர் ஆவேசத்துடன் இது என் முகரை,இதோட தான் நான் நாற்ப்பது வருசமா வாழுறேன் என்று எல்லாம் கூறிக் கொண்டே எழ முயல

"க்ளிக்" .....புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டது.அடுத்த வாரம் தரப்படும்.

அடுத்த வாரம் புகைப்படத்தை வாங்கச் செல்கிறார் எழுத்தாளர்.புகைப்படம் மிக அழகாக எடுக்கப்பட்டு இருந்தது.ஆனால் புருவங்கள்,கண்,காது,உதடுகள் எல்லாம் ரீ டச் செய்யப்பட்டு அழகாக்கப்பட்டு இருந்தது.தனது திறமையை எழுத்தாளர் மெச்சப் போகிறார் என எதிர்ப்பார்க்கிறார் புகைப்பட நிபுணர்.எழுத்தாளர் பேச ஆரம்பிக்கிறார் :

"நான் எதிர்ப்பார்த்து வந்தது எனது புகைப்படத்தை.நான் இறந்த பின் என் குடும்பத்தினரும்,நண்பர்களும் நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை நினைவு கூறும் விதமாக என்னை அசலாக காட்டும் என் புகைப்படத்தை. இந்த படத்தில் உள்ளது நான் அல்ல.என்ன தான் உங்கள் நிபுணத்துவம் வெளிப்பட்டு இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை இது பயன் இல்லாத குப்பைக் காகிதம் என்று சொல்லி விட்டு கண்ணீருடன் வெளியேறுகிறார்"


# என் பேஸ்புக் தோழி விஜய லட்சுமியின் பேஸ்புக் பக்கத்திலிருந்து

ஞாயிறு, 1 ஜூலை, 2012

ஜனநாயகம் இது முதலாளித்துவ ஜனநாயகம்…







இது முதலாளிகளின் இலாப நலனுக்காக முதலாளிகளுக்காக இருக்கும் ஜனநாயகம் என்பதை நீரூபித்து இருக்கிரது சமீபத்தில் கல்வி தனியார்மயம் ஆவதை எதிர்த்து டிபிஐ அலுவலகத்தை முற்றுகை இட்ட மாணவர்களின் மீதான காவல்துறையின் தாக்குதல். அதிலும் தற்ப்போது நடப்பது பாசிச காட்டாச்சி தடியையும் அடக்குமுறையும் அன்றி வேற்றென்ன எதிர்பார்க்க முடியும்.

அடக்குமுறைகளும் வரலாற்று தேவையே..

எனது கடந்தகால அனுபவங்கள் எனக்கு சொல்லிக்கொடுத்து இருக்கின்றன எப்போதும் போராட்ட காலங்களில் களங்களில் இதுபோன்ற அடக்கும்றைகள் மட்டுமே தாவரங்களுக்கு இடயே தாவரம் போலவே வளர்ந்திருக்கும் கலைகளை கலைய உதவும். ஆம் சமாதானக்காலங்களில் வாய் சொல்லில் வீரர்களாக இருந்த பலர் ஒடுக்குமுறை காலங்களில் அட்ரஸ்ஸே இல்லாமல் போனதையும் அடிபனிந்த கைப்பிள்ளைகளாக மாறியதையும் பார்த்துள்ளேன் எனவே போராளிகளையும் போராளிகளைப்போல காட்சியளித்து பொழுதை போக்குவோரயும் பிரித்தறிய அடக்குமுறைகள் எப்போதும் பயன்பட்டே வந்துள்ளது

வரலாறு எப்போதும் ஒரே திசையில் பயணிப்பது இல்லை.

’’பண்டைய கால வரலாற்றில் வல்லரசுகளாக விளங்கிய ஏமன் மற்றும் சிரியாவுக்கு இடையே இருந்த ஒரு சிறு நாடோடிக்கூட்டத்தின் தலைவன் இந்த இரு நாடுகளையும் நாம் ஒரு நாள் ஆளுவோம் என் றார் அதை எளனமாக பார்த்த கூட்டம் அப்படி அவர்கள் ஆண்டதையும் பார்க்க நேர்ந்தது என்பதே அரேபிய வரலாறு’’ சின்ன வயதில் அன்னை சொல்லிக்கொடுத்து வளர்த்த கதைகளில் கேட்டது
பதின் வய்துகளில் ஏரியாவில் இருந்த தோழர் அண்ணன் என ஏரியா பசங்களால் செல்லமாக அழைக்கப்பட்ட DYFI தோழர் நஸீர் சொல்லிய கதைகள்ளின் ஊடாக சொல்லித்தந்தார் அடிமை விலங்குகளை அடிமைகளே உடைத்தெரிந்ததன் குறிஉயீடே ஸ்பார்ட்டகாஸ் என்று
அதன் பிறகு விரும்பிப்படித்த ருஷ்ய வரலாறு காட்டியது கஞ்சிக்கு கஷ்ட்டப்படும் தொழிலாளி வர்கம் போராடி வென்றதே மக்கள் ஜனநாயகம் என்பதை.
எனவே வரலாறு தோறும் ஒடுக்கப்பட்ட மக்கள் வென்றுள்ளதே நிதர்சனம்.
விதைக்கும்  காலம் ஒன்று உண்டெண்றால் அறுவடைக்காலமும் இருந்தே தீரும் இப்போது விதைத்திருக்கும் அடக்குமுறையாளர்களும் அறுவடை காலத்தை எதிர்பார்த்தே ஆகவேண்டும்…

சனி, 12 மே, 2012

தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி.


செத்தும் கொடுத்தான் சீதக்காதி என சிறு வயதிலிருந்து செவியுற்றதுண்டு. உண்மையில் இறந்த பிறகும் இனிய தோழமைகளை எமக்களித்து சென்றார் தோழர் சீனிவாசன். ஆம் தோழரின் மரண செய்தி கேள்விப்பட்டு அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள கோவையிலிருந்து நாங்கள் ரயிலில் சென்றுகொண்டு இருந்தோம். சில புதிய இளம் தோழர்களுக்கு தோழர் சீனிவாசனைப்பற்றியும் அவரது வாழ்க்கையையும் மூத்த தோழர்கள் சொல்லிக்கொண்டு வந்தனர். அதை செவியுற்ற சில இளைஞர்கள் அவர்களாகவே முன்வந்து எங்களோடு உரையாடத்துவங்கி உலக அரசியல் முதல் உள்ளோர் அரசியல் வரை விவாதித்து எங்கள் அலைபேசி எங்களை பெற்றுக்கொண்டு அவர்களதும் தந்துவிட்டு சென்றார்கள் அதில் இரண்டுபேர் மென்பொருள் பொறியாளர்கள்.
தோழர் சீனிவாசன் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொருளாளராக இருந்தவர். மின்வாரியத்தில் அதிகாரியாக இருந்தவர் தான் கொண்ட கொள்கைக்காக அந்த பணியை விருப்ப ஓய்வின் மூலம் விடைகொடுத்து கொள்கைக்காக உழைத்தவர்.
மரணம் மட்டுமே ஒருவரின் நேர்மையை எடைபோடும் மகா சக்தி. அது தோழர் சீனிவாசனுக்கும் அங்கீகாரத்தை தந்துவிட்டது.
நம் நினைவுகளோடு கலந்துவிட்ட தோழர் பற்றி சில நினைவுகள். தோழரை சுமார் ஒரு நான்கு  ஆண்டுகளுக்கு முன்னர்தான் முதன்முறையாக பார்த்தேன் அப்போது அவரை சந்தித்த தோழர்களிலேயே இளையவன் நான் என்பதாலோ என்னவோ என்னிடம் சில விசயங்களை இன்னும் கூடுதல் நேரமெடுத்து விளக்கினார். அதன் பிறகு தோழர்கள் அவரைப்பற்றி சொல்லும்போது வெகு சிறப்பான பேச்சாளர் என்று கூறி அதற்கொரு உதாரணமும் கூறினார். 98 இல் கோவையில் ஒருமுறை திக பொதுக்கூட்டத்தை இந்துமுன்னணி காலிகள் பிரச்சனை செய்து கலைத்துவிட்டார்கலாம். மறுநாள் ம.க.இ.க கூட்டம் அதே இடத்தில் நடந்தபொழுது தோழர் சீனிவாசன் சிறப்புரையாற்றிப் பேசும்போது ''நேற்றைக்கு வந்தவனுக எல்லாம் எங்கே டா போயிட்டீங்க இப்ப வாங்கடா வந்தீங்கன்ன ஒவ்வொருத்தனையும் பாலமலையில் தலைகீழ தொங்கவிட்டுருவேன்'' என்றாராம். அப்போதுமுதல் அவரை மாபெரும் பிம்பமாகவே பார்க்க ஆரம்பித்தேன்.
அதன் பிறகு ஒருமுறை அவரது தாயார் இறந்த போது கோவையில் எரியூட்டல் நிகழ்வு முடிந்து இரங்கல் உரை ஆற்றிய போதுதான் தோழரின் பேச்சாற்றலை காணமுடிந்தது. போராடும் அனைவருக்கும் இருக்கும் சிக்கல் குடும்ப உறவுகளில் அந்த காலகட்டத்தில் எனக்கும் அதிகமாக இருந்தது இரங்கல் செய்தியில் அவர் பேசிய பேச்சு அதற்க்கான வழிகாட்டுதலை எனக்கு வழங்கியது காரணம் குடும்ப உறவுகளில் சிக்கல் அவருக்கும் இருந்துள்ளது. அன்றைய இரங்கல் செய்தியில் அவர் அதை பற்றியும் அது போன்ற சந்தர்பங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பற்றியுமே பேசினார்.
பிறகு நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தோழரை கடந்த நவம்பர் புரட்சிநாள் விழாவில் கோவையில் பார்த்தேன் முதலில் அடையாளம் தெரியவில்லை அவ்வளவு மாற்றம் கண்டிருந்தது அவரது உடம்பு. பிறகு தோழரை அடையாளம் தெரியவில்லையா என தோழர்கள் கேட்டபோதுதான் தோழர்தான் இது என்பதே புரிந்துகொள்ளவே முடிந்தது.
ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட பழனிபாபா இருந்தபொழுது தோழர் ஒருமுறை பேருந்து நிறுத்தம் ஒன்றில் தனியாக நின்றுகொண்டு இருந்தாராம் தோழரைப் பார்த்த பாபா காரிலிருந்து இறங்கி வந்து கேட்டாராம் என்னைவிட நீங்கதான் பார்ப்பனியம் பற்றி அதிகமாக மேடைகளில் பெசுகிரீர்கள் அப்படி இருக்க ஏன்? இங்கே தனியாக பாதுகாப்பு இல்லாமல் நிற்கிறீர்கள் என்று அதற்க்கு தோழர் பதிலளித்தாராம் மக்கள்தான் எங்கள் பாதுகாப்பு என்று. அதை தோழரின் இறுதி ஊர்வலத்தின் முதல்நாள் இரவு உணர முடிந்தது. தோழரின் இறுதி அஞ்சலிக்காக முதல்நாள் சென்ற நாங்கள் இரவு அம்பேத்க்கார் திடலின் சுற்றுவட்டாரங்களில் நடந்துகொண்டு இருந்தோம் அப்போது ஒரு இடத்தில் சில இளைஞர்கள் எம்மை வழியில் கண்டு அருகே வந்தனர் வந்தவர்கள் எம்மை நெருங்கி வந்ததும் நாங்கள் கருப்பு ரிப்பனை எங்கள் சட்டைகளில் குத்தியிருப்பதை கண்டு ''நீகள் தோழர்களா அப்போ போங்க அவருக்காக நாங்க என்னவென செய்வோம்'' போங்க போங்க என்றார்கள். பிறகு அவர்களிடம் பேச்சு கொடுத்த போதுதான் தெரிந்தது எந்த விதமான தாக்கத்தை அவர் அம்மக்கள் மீது விதைத்துள்ளார் என்பது.
தோழர் அபுதாகிர் அவர்கள் இருவது நாட்களுக்கு முன் தோழரை சந்தித்த போது தனது மகள் வழக்கறிஞர் போர்க்கொடியை அறிமுகப்படுத்தி அவரின் போராட்டங்களி கூறி மகளின் மீது மிகவும் பெருமை கொண்டு இருந்தாராம் மேலும்  நிறைய விஷயங்களை பேசிக்கொண்டே இருந்தாராம் அப்போது சென்றவர்கள் அதிகமாக பேசவேண்டாம் என்றபோது. எப்படியும் நான் சாவேன் அதுதான் இயங்கியல் ஆனால் நீங்கள் எனது பிள்ளைகள் உங்களோடு இப்போதுதானே பேசமுடியும் என்றவாறே நிறைய பேசினார் எங்களிலும் நம்பிக்கையை விதைத்தார் என்றார் அபுதாகிர்.மரணத்தை எதிர்கொள்ள மிகப்பெரிய தைரியம் வேண்டும் அதை அவருக்கு வழக்கி இருந்தது அவரது அரசியல். வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என சொல்லிக்கொடுக்க ஏராளமான புத்தகங்கள் உண்டு சாவை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுக்கொடுத்தவர் தோழர் சீனிவாசன்.
எப்படியெல்லாம் ஒரு மனித வாழக்கூடாது என்பதற்கு நாறவாயன் நாராயணசாமி போன்றோர் ஏராளமான பேர் உண்டு. ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக தோழர் சீனிவாசனை போன்றோர் குறைவாகவே உள்ளனர்.
அதில் ஒருவரை
இழந்து நிக்கிறோம்.
இறுதி ஊர்வலம் சென்ற பொழுது இரு புறமும் வீதியில் கூடியிருந்த மக்களின் உதடுகளின் உச்சரிப்பில் புரிந்தது மக்களுக்காக மடிவது மலையினும் வலியது எனும் உண்மை.
இறுதியாக கவலைகொண்டு கண்ணீர் துளிகளை சிந்தி புலம்புவது  உங்களுக்கும் பிடிக்காது
எனவே கடமை கொண்டு வியர்வை துளிகள் சிந்தி உழைப்போம் உங்களது இலட்சிய பாதையில்.....

வீரவணக்கம் 



மழை வரும்போதெல்லாம் உன் நினைவும் வந்துவிடுகிறது
 உன் நினைவிருக்கும் 
போதெல்லாம் மழையும் வருகிறது 
வேறுபாடு ஒன்றுதான் 
விட்டுத் தொடருது மழை 
விடாமல் தொடருது நினைவு

மகிழ்ச்சியில் என் புன்னகயாகவும் 
துயரத்தில் என் கண்ணீராகவும் நீ......

எனக்காக தீட்டப்பட்ட கத்தி..
எந்த இருளில் காத்திருக்கிறதோ
எவன் கை (அதை) தாங்கி இருக்கிறதோ....


உன்னிடம் ஒன்னு கேக்கவா? என்றாள்.
ஏதும் என்னால் இயலாதை கேட்டுவிட போகிறாளோ?
என்கிற அச்சத்துடனேயே ம்ம்ம் கேள் என்றேன்.
சட்டென குழந்தைகளின் குரலில் கூறினாள்
உனது புத்தகங்கள் முழுவதையும் கலைத்துப்போட்டு
அதில் படுத்துக்கொள்ள வேண்டும் என்றாள்
நிலவோடு
உன்னை ஒப்பிட்டேன்
அழகியலை பாடவோ
வெண்மையின் பெருமை போற்றவோ
அல்ல
காட்டுவேட்டைக்கு
எதிராக
களமாடும்
எங்கள்
நாயகர்களுக்கு
இருளில்
ஒளியாக
இருப்பதைப் போல
இருக்கிறாய்
என்பதை கூறவே...

புது மழையில்
நனைந்து கொண்டிருக்கிறேன்


ஒவ்வொரு துளிக்கும்
உன் பெயரிட்டே அழைக்கிறேன்

ஒவ்வொரு துளியாக
உன்னில்
பெய்துகொண்டே இருப்பேன்
இறுதியில்
நாம்
ஒரு மழையாகும் வரை


வியாழன், 5 ஏப்ரல், 2012

Gandhi country - Is it not contradictory ?


Few months ago a group of Nigerian students from t Sri Ramakrishna Advance Training Institute in Coimbatore, lodged a complaint with the Commissioner of Police, informing that they were discriminated against by their neighbours, on account of their race, and this news has been published in many newspapers country wide..Following news was also published " They avoided going to the UK & many other countries to pursue their studies, thinking that they would face discrimination in a white nation. However, they were shocked to realize that even in India- gandhi's Nation , they were discriminated against.

The students also said that they had made the trip to India through proper channels, with the required documents for travel, including VISA, that were provided by the Indian Embassy at Nigeria. They just wished to stay in India, long enough to complete their program. They told the commissioner that their neighbours often called them with derogatory names and were rude towards them.

WHAT IS THE REAL REASON BEHIND THEIR TEARS?.

The image India has portrayed to the outside world is the main reason. A nation where saints, holy people , & temples has made it a holy nation without any discrimination was forced to be believed by brahminical egoistics through scriptures, stories and legends for centuries..

Also Gandhi's one side life only has been exaggerated.. India was in the hands of brahminical fascism and this was manifested by the glorification of fascism in the traditional Brahminical value system espoused by high-caste Hindus which Gandhi also supported. The minority Brahmin in-order to preserve self interests, they portrayed themselves as priests and used religion to gain political and economic control , resorted to deceptive ways..and devised the "Varnashrama/ Manu Dharma - caste system which taught inequality among men based on birth , family lineage and proclaimed it as will of God.. No doubt Brahmins were at the top of this hierarchy who established themselves as mediators between God and Man.

So Gandhi was supportive of these hierarchy which Dr.B.R. Ambedkar & Periyar have mentioned in detail in their writings.. Gandhi, threatened to starve himself unto death and strongly opposed the Poona pact an agreement between the Dalits led by Dr.B.R. Ambedkar and upper class Hindus led by Gandhi .
The three great Martyrs and most prominent freedom fighters of India Bhagat Singh, Rajguru and Sukhdev
were executed on the eve of the Karachi Congress while Gandhi saw to that the meeting was not disturbed by any protest for their hanging and so it was done before that..The Karachi Congress convened under the shadow of execution truly represented the temper of the country that time... Gandhi was greeted with black flags and shouts of "Down with Gandhism". During his time as Congress leader he never took steps to abolish caste system..
When Ginning factory employees and workers stood against capitalism Gandhi supported the employers only.. He was always supportive to the great Elites like TATA , BIRLA and no doubt he was God for them . So a lot of events can be told about Gandhi , how he supported caste system, capitalism , and promoted inequality while the picture painted to the outside world was not clear and why these students were fooled to believe India as a non-discriminative country. As with Dr.B.R. Ambedkar words , " The discrimination & abuse is equivalently same as Black people , by Brahmins in India to the Daliths , but Brahmanism cleverly hides to the outside world''- Ambedkar
Lets bring out all the dirty beliefs in Brahmanism which hasdone greater damage to most citizens as slavery for a very long period..

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

காந்தி தேசமாம்..... காமடி பண்றாங்கப்பா....


கடந்த சில தினங்களுக்கு முன்பு நைஜீரியா நாட்டு மாணவர்கள் கோவை நகர காவல்துறை ஆணையாளரை சந்தித்து கண்ணீர் கடிதத்தை தந்தனர். இச்செய்தி அனைத்து செய்திதாள்களிலும் வெளியாகி இருந்தது.
அக்கடிதத்தில் கீழ்க்கண்ட செய்திகள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தாங்கள் நைஜீரிய நாட்டு அரசின் உதவியுடன் தமிழகத்தில் தங்கி மேற்கல்வி கற்க வந்திருப்பதாகவும். வேறு வெளிநாடுகளை மேற்க்கல்விக்காக தேர்ந்தெடுக்காத காரணம் அங்கெல்லாம் கருப்பு-வெள்ளை இனவெறி நிலவுவதால் படிக்க இயலவில்லை எனவும், ஆனால் காந்தி பிறந்த இத்தேசத்தில் இனவெறி இருக்காதெனவும் நினைத்து இங்கே மேற்கல்வி படிக்க தேர்ந்தெடுத்தோம்.
நாங்கள் இங்கு படிக்கத்தொடங்கிய சிறிது காலத்திற்குள் வாடகைக்கு குடியிருந்த அறையின் சொந்தக்காரரும் அண்டைவீட்டு குடியிருப்பு வாசிகளும் எங்களை இனவெறி காரணமாக அறையை காலி செய்து வெளியேறுமாறு கூறுகின்றனர். எனவே நாங்கள் இன்னும் கல்வி பயின்று முடிக்க சில காலம் தேவை படுவதால் எங்களை வெளியேற்ற கூடாதெனவும் மேற்ப்படி கல்வி பயில உதவி புரியுமாறும் நைஜீரியா நாட்டு மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நைஜீரிய நாட்டு மாணவர்களின் கண்ணீருக்கு காரணம் என்ன?

இந்தியா பற்றிய தோற்றம் வெளிநாடுகளில் இப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதே நைஜீரிய நாட்டு மாணவர்களின் கண்ணீருக்கு காரணம்.
இது மகான்கள் வாழ்ந்த தேசம் என்றும் கோயில்களின் நாடு என்றும் பார்ப்பனிய நூல்களாலும், எழுத்துக்களாலும் பல நூற்றாண்டுகளாக நம்பவைக்கப்பட்டுள்ளது.
மேலும் காந்தியை பற்றிய ஒரு பக்க பார்வை மட்டுமே உலகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா பார்ப்பனிய தேசமாகும். காந்தி இந்த பார்ப்பனிய தேசத்தை சிறிதும் சீர்குலைந்து விடாமல் கட்டிகாப்பாற்ற கர்ம சிரத்தையுடன் போராடிய மனுதர்மவாதி. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட மக்கள் சாதி என்னும் அரக்கனால் சித்திரவதைக்குள்ளாகி மடிந்து கொண்டிருப்பதற்கு காரணமான பார்ப்பனிய மனுதர்மத்தை தன் வாழ்நாள் முழுவதும் போற்றி புகழ்ந்த, கடைபிடித்த சாதி வெறியாளர் தான் திரு.காந்தி.
புரச்சியாளர் அம்பேத்க்கரும், தந்தை பெரியாரும் தங்களது எழுத்துக்களால் பல்வேறு நூல்களில் இதை நிரூபித்துள்ளனர். தாழ்த்தப்பட்டோரின் நலனுக்கான இரட்டை வாக்குரிமை (பூனே ஒப்பந்தம்) தர கூடாது என சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து போராடிய தேசத்தந்தான் காந்தி.
பிச்சை கேட்டு பெறுவது சுதந்திரம் அல்ல. தாய்நாட்டை காக்க இதோ எங்கள் உயிர் என ஆங்கில ஆட்சிக்கு எதிராக போர் முழக்கமிட்டு தூக்கு தண்டனை பெற்ற இந்த நாட்டின் தவப்புதல்வர்கள் பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ்,ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்காமல் தான் நடத்த போகும் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு எந்தவித இடையூறும் வராமல் இருக்க வேண்டி மாநாட்டுக்கு முன்பே அவர்களை தூக்கில் போடுங்கள் என ஆங்கில (இர்வின் பிரபு!?) அரசுக்கு கோரிக்கை வைத்தவர்தான். அனைத்து உயிர்களையும் நேசிக்க வலியுறுத்திய நம் ''அஹிம்சா மூர்த்தி'' காந்தி. இந்திய வரலாற்றில் காந்திக்கு முதன் முதலாக கருப்பு கொடி காட்டப்பட்டதும் இச்சம்பவத்திர்காகத்தான்.
காந்தி அவர்கள் காங்கிரஸ் தலைவராக இருந்தவரை சாதி ஒழிப்பிற்காக ஒரு துரும்பையும் செய்யவிடாமல் தடுத்தவர்தான்.
பஞ்சாலை தொழிலாளர்களும்,உழைக்கும் மக்களும் முதலாளித்துவத்திற்கு எதிராக எழுந்து நின்ற பொழுது முதலாளித்துவத்திற்கு நண்பனாக நின்றவர்தான். இந்த டாட்டா,பிர்லா அவர்களின் தேசத்தந்தை காந்தி.
இப்படி பல குறிப்புகளை கூறிக்கொண்டே போகலாம் இந்த திரு.காந்தியையும், அவரின் மனுதர்ம தேசத்தையும் புரிந்துகொள்ள.
இறுதியாக நைஜீரியாவில் மட்டுமல்ல உலகின் பிற நாடுகளிலும் இந்தியா பற்றி இப்படி ஒரு பிரமை ஏன் ஏற்ப்பட்டது அது நீடிக்கின்றது எனபதை அம்பேத்க்கரின் மொழியிலிருந்தே நாம் புரிந்துகொள்ளமுடியும்.
''கறுப்பின மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு சற்றும் குறைவில்லாததுதான். இந்தியாவில் தலித்துக்கள் மீது நடைபெறும் வன்முறையும். ஆனால் அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்கிறது பார்ப்பனியம்'' - அம்பேத்க்கார்.
பார்ப்பனியத்தின் சதிகளை அம்பலப்படுத்துவோம்.உண்மையான நிலையை உலகுக்கு சொல்லுவோம்.

திங்கள், 12 மார்ச், 2012

சட்டக்கல்லூரியில் மகளிர் தின விழா


அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தின் எந்த ஒரு பகுதியில் அடக்குமுறை அரங்கேறினாலும். மனித உரிமைகள் மீறப்படும்போதும். அதை எதிர்த்து முதலில் பதியப்படும் எதிர்ப்பு குரல் உங்கள் குரல். கோவை சட்டக்கலூரி மாணவர்களின் குரல். எனவே நீங்கள் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் நானும் உங்களோடு கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இதற்க்கான வாய்ப்பை எனக்கு நல்கிய கல்லூரியின் முதல்வர், கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் மாணவர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
இங்கே உள்ளே வந்ததும் மனதுக்கு நிறைவான இன்னொன்றையும் கண்ணுற்றேன். எப்போதுமே பெண்கள் விடுதலை, சுதந்திரம் பற்றியெல்லாம் யாரு அதிகமாக பேசிக்கிட்டு இருப்போம்னா? ஆண்கள்தான் அதை பற்றி பேசிகிட்டு இருப்போம். நேற்றுகூட இன்றைய மகளிர்தின தின நிகழ்ச்சிக்காக என்னை மாணவர்கள் அழைக்க வந்தபொழுது அனைவரும் ஆண்களாகத்தான் இருந்தனர். ஒரு அரைமணிநேரம் கழித்து ஒரே ஒரு பெண் வந்தார். நதியா.
பொதுவாகவே விடுதலை, சுதந்திரம் என்பதன் பொருள். நீங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புவது அல்ல. நீங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவது ஆகும்.
அந்தவகையில் இங்கே ஆணுக்கு பெண் சரிநிகர் சமானமாக அமர்ந்திருப்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.
மகளிர் தினவிழா என்பது இன்றைக்கு முதலாளித்துவம் தனதாக்கி கொண்டது. முதலாளித்துவ சமூகத்தின் பெரு நிறுவனகள் இந்தநாளையும் தனது இலாப நோக்கிற்கு பயன்படுத்திக்கொண்டுள்ளன. அதற்க்கு தனது ஊடக பலத்தையும் பயன்படுத்தி முன்னேறுகிறது.
உழைக்கும் பெண்கள் சரியான நேர உழைப்பு, சரியான ஓய்வு வேண்டி முதலாளித்துவ இலாபவெறிக்கு எதிராக போராடிய நாளையே இன்று இலாப நோக்கிற்கு பயன்படுத்துகின்றது. இந்த முதலாளித்துவம். அதனால்தான் மார்க்ஸ் சொன்னார் ''இலாபம் கிடைக்கும் என்றால் தனக்கான சவப்பெட்டியை கூட தானே செய்துகொள்ளும் முதலாளித்துவம்'' என்று. fair & lovely யும் இன்ன பிற முகபூச்சு நிறுவனங்களும் தொலைக்காட்சியில் மகளிர்தின வாழ்த்துக்கள் சொல்கின்றன. பெண்ணையே விற்பனை பண்டமாக மாற்றி. ஒரு ஜவுளி நிறுவனம் பெண்கள் தின சிறப்பு போட்டிகள் என்ற பெயரில். மேட்டுக்குடி மகளிருக்கு ஒரு போட்டிவைத்து இருக்கிறது. ''புதையலை தேடி'' சொந்தமாக கார் வைத்திருக்கும் பெண்கள் அதில் கலந்துகொள்ளலாம். ஜவுளி நிறுவனம் வழங்கும் வரைப்படத்தை தொடர்ந்து சென்று யார் முதலில் அந்த புதையலை அடைகிறார்களோ அவர்களுக்கே முதல் பரிசு. உழைக்கும் மகளிர் தினம் எப்படி மகளிர் தினமாக மருவியது என்பதை கண்டறிவதே உண்மையாக நாம் தேடவேண்டிய புதையல் ஆகும்.
மகளிர் தினம் என்பது எப்படி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது என பார்த்தால் அது வெறும் fair & lovely யும் இன்னும் சில ஜவுளி நிறுவங்களும் கொண்டாடுவது போல சும்மா வாழ்த்து சொல்லி கொண்டாட ஆரம்பித்ததுவல்ல. மாறாக அது தியாகத்தின் வரலாறு போராட்டத்தின் வரலாறு.
18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பெண்கள் துணி உற்பத்திக்காக பஞ்சிலிருந்து நூலை பிரித்து கொடுக்கும் வேலைகளை தங்களது வீடுகளில் செய்துவந்தனர். 18 ஆம் நூற்றாண்டில் துணி உற்பத்தியில் நீராவி எஞ்சினின் வருகையால் உற்பத்தி வேகம் அதிகரிக்கிறது அதற்க்கு இணையாக பெண்களால் நூலை பிரிக்கமுடியாமல் அவர்கள் இரவுபகலாக வேலை பார்க்கின்றனர். இதனால் சில பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதில் கூட சிக்கலாகின்றது. bachelor என திருமணம் ஆகாத ஆண்களை ஆங்கிலத்திலே குறிப்பிடுவதுபோன்று பெண்களை குறிப்பிடும் வார்த்தை spinster என்பதுகூட இதிலிருந்து பிறந்ததுதானாம். அப்படி குறைவான கூலிக்கு நேரம்காலம் இல்லாமல் சுரண்டப்பட்டுவந்த பெண்கள் தங்களுக்கு சம உரிமை வேண்டும் எனவும். பத்து மணிநேர வேலை நேர உரிமை வேண்டும் எனவும் 1857 இல் மார்ச் 18 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மறியல் நடத்தினர். வழக்கம்போல காவல்துறை தடியடி நடத்தி அப்போராட்டத்தை ஒடுக்கினர். அதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கு பின்னர் அதே மாதத்தில் அந்த பெண்கள் முதல் தொழிற்சங்கத்தை கட்டினர். 51 ஆண்டுகளுக்கு பிறகு 1908 அன்று தையல் துறையை சார்ந்த வாரி சகோதரிகள் 1857 போராட்டத்தை கவுரவித்தும். வாக்குரிமை வேண்டியும் , குழந்தைகள் உழைப்பை சுரண்டுவது ஒழியவேண்டும் என வலியுறுத்தியும், பேரணி நடத்தினர். இதே போல நியூயார்க் டிராயாங்கிள் தொழிற்சங்க போராட்டத்தில் 146 பெண்கள் தாங்களே தியாகம் தந்தனர்."பெண்களின் இடம்" எனும் அற்ப சித்தாந்தங்கலையே வெட்க்கப்படவைத்த பெண்கள் அவர்கள். 1910 மே மாதத்தில் நடந்த சோசலிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரஸ்சில் பிப்பிரவரி இறுதி ஞாயிற்றுக்கிழமையை சர்வதேச பெண்கள் தினமாக அறிவிக்க வேண்டுமென்று பெண்கள் தேசிய குழு பரிந்துரைத்தது. அதற்குப்பிறகு பெண்கள் தினத்தை சர்வதேச நிகழ்ச்சியாக அடையாளப்படுத்த வேண்டுமென்ற கருத்துடன் அதே வருடம் கொபன்ஹெகனில் நடந்த 2 வது சர்வதேச சோஷலிச பெண்கள் மாநாட்டில் பிரதிநிதிகளாக அவர்கள் கலந்துகொண்டனர்.பின்னர் ''கிளாரா ஜெட்கின்'' என்ற புகழ்பெற்ற கம்யுனிஸ்ட் தலைவி சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாட்டில்பெண்களுக்கு உலகம் முழுதும் வாக்குரிமையை பெற உதவுவதற்கு ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். அது மார்ச் 19 ஐ மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது. பின்னர் சில சதிகார அரசுகளின் திட்டப்படி மகளிர்தின எதிர்ப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டது.இவ்வாறு மிக நீண்ட போராட்டம் மற்றும் பெண்களை திரட்டி பெண்களுக்கு எதிராகவே துரோகம் இளைத்தல் போன்ற அரசின் சதிச்செயல் ஆகிய எண்ணற்ற இன்னல்களையும் தாண்டிதான் இறுதியாக இன்றைய சர்வதேசிய மகளிர் தினம் மார்ச் 8 ல் உலகும் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மார்ச் 8 இதுவெறும் வார்த்தையல்ல பெண்கள் போராடிப்பெற்ற வெகுமதி.
அன்றைக்கு போராடவேண்டிய தேவை இருந்தது அதற்க்கு இன்றைக்கு என்ன எனும் கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுவதை காணமுடிகிறது. ஆனால் இன்றைக்கும் பெண்கள் வெறும் அலங்காரப் பொருளாகவும் நுகர்வு மற்றும் விற்பனை பண்டமாகவே இன்றைய சமூகத்தில் இருக்கிறாள் என்பதுவே உண்மை. குடும்ப அமைப்பு துவங்கி சமூகத்தின் எந்த இடத்திலும் பெண் சுதந்திரமானவளாக இல்லை. ஆணாதிக்கம் மொழிவழியும் மதம் வழியேயும் பெண்களை ஆளுமை செலுத்திக்கொண்டுதான் இருக்கின்றது. திரைப்படம் போன்ற ஊடகங்களின் வழி விர்ப்பனைக்காக மட்டுமல்ல பிடிக்காதவனை ஏசுவதற்கும் பெண்களின் அங்க அவயங்கலையே நமது மொழியில் பயன்படுத்துகிறோம். ஒருவனை இகழ்வதற்கும் அவனது தாயே பலிக்கிறது மொழி. ஓடுகாலி,வாயாடி,விதவை,விபச்சாரி போன்ற சொல்லாடல்களில் கூட ஆணாதிக்க சொல்லாடல்களே.அனைத்து மதங்களும் பெண்களை ஆணுக்கு கீழானவனாகவே பாவிக்கிறது மேலும் அவை பெண்களை அலங்கார பொருளாகவே பாவிக்கிறது என்பதன் மிக சிறந்த உதாரணம் சுவர்க்கம் எனும் கான்செப்ட் எந்த மதங்களின் சுவர்கங்களும் பெண்ணின்றி முழுமை அடைவதில்லை.
ஊடகங்களில் பெண். ஊடகங்களில் இன்றைய பெண்ணின் நிலையென்ன. அண்ணாச்சியின் ஆசை நாயகி ஜீவஜோதி இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்?. நித்தியானதா ரஞ்சிதா கஜகஜ. கஞ்சா சரினா என்ன ஆனார். ஜெயலட்சுமி இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார்? போன்ற செய்திகளை இரண்டு பக்கத்துக்கு மாஞ்சு மாஞ்சு எழுதும் எந்த பத்திரிக்கையும். சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் பெண்களைப்பற்றி எழுதுவதில்லை. ஒடுக்கப்படும் பெண்கள் அமைப்பாக திரலவேண்டிய அவசியத்தை பற்றி ஒரு வரி கூட எழுதுவது இல்லை. ஜீவஜோதியையும், ரஞ்சிதாவையும்,சரினாவையும் தெரிந்த எத்தனை பேருக்கு ஓசூர் தேவியை தெரியும். தேவி ஓசூர் சிப்காட்-2ல் எலக்ட்ரானிக் சர்க்கியூட் போர்டுகளை உற்பத்தி செய்யும் ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அந்நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக திறத்துடன் போராடிய பெண்.நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராக தீரத்துடன் போராடிய தேவியை முன்னுதாரணமாக எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை. செய்தி ஊடகங்களை இப்படி என்றால் தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது. 75 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ்சினிமாவில் பெண்களின் பணி என்பதே கதாநாயகனுக்கு சமூகப்பணிகள் இல்லாதபோது அவரை என்டர்டிரைன் பண்ணுவதும் அவனுடன் ஆடிப்பாடுவதுமே. 75 ஆண்டுகளில் இதுவரை வந்துள்ள எந்த திரைப்படத்திலும் ஆண்(அதாவது நாயகன்) பெண்ணை ஏமாற்றுவதாகவும். அதற்காக அப்பெண் ஆண் வர்கத்தையே குறைகூறி பாடுவதுபோலவும் வந்ததாக நினைவிலில்லை. ஆனால் நேற்று வந்த 7 ஆம் அறிவு யம்மா யம்மா காதல் பொன்னம்மா முதல் நாளை வரவிருக்கும் 3 படத்தின் கொலைவெறி வரைக்கும் எல்லாமே பெண்ணினத்தை கொச்சைப்படுத்தும் வரிகளே. இதுல கொடுமை என்னவென்றால் சில பெண் பாடலாசிரியர்களே இதுபோன்ற பாடல் இயற்றுவதே. அவங்களை சொல்லி என்ன பண்ண நாயகன் எனும் ஆணுக்கான பாடலைத்தானே அவரும் இயற்றுகிறார்.இப்படி இழிவு படுத்துவதோடுமட்டுமல்லாது திரைப்படங்கள் செய்யும் இன்னொரு முக்கியமான விஷயம். பெண்களை விற்பனை பண்டமாக பார்ப்பது. பெண்களை பண்டமாக பாவிக்கும் இந்த ஆணாதிக்க முதலாளித்துவ சமூகம் மார்க்ஸை நோக்கி கேட்டது. ''பொது உடமை பொது உடமை என பேசுறிய உனது மனைவி ஜென்னியையும் பொது உடமை ஆக்கிவிடவேண்டியதுதானே''? என்று. ''தன்னைத்தவிர எல்லாத்தையும் பண்டமாகவே பார்த்து பழக்கப்பட்ட சமூகம் என்பதால்தான் ஜென்னியிடம் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள்'' என்றான் அந்த மாமேதை.
அன்றைக்கு மார்க்ஸ் சொன்ன வார்த்தைகள் இன்றும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது சினிமாவில் பெண் வெறும் பண்டமாகவே வந்துபோகிறாள். டிவி சீரியல்களும் டிவியில் வரும் விளம்பரங்களும் இதிலிருந்து எந்தவகையிலும் மாறுபடுவது இல்லை. சினிமாவில் மூன்று மணிநேரம் காட்டுவதை சீரியலில் 300 எப்பிசோடிலும் விளம்பரத்தில் 30 வினாடிகளிலும் காட்டுகின்றனர் என்பதைத்தாண்டி வேறுபாடு ஒன்றுமில்லை.
ஆண்மை என்பது எவ்வளவு பொய்யோ! பெண்மையும் அவ்வளவு பொய்யே!!
பெண் பற்றி நமது பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் அத்துனையும் உயிரியல் ரீதியானவை கிடையாது. எல்லாமே நமது பண்பாட்டு தொழிற்கூடங்களால் நமது மனதில் அழுத்தி ஊன்றப்பட்டவைகளே. ஆண் உண்டு ஆண்மை இல்லை பெண் உண்டு பெண்மை இல்லை என்பதற்கு மிக சிறந்த உதாரணம் நமது சமகாலத்தில் எகிப்த்தில் ஆட்சியே மாற்றிப்போட்ட கிளர்ச்சியை தோற்றுவித்த அஸ்மா மக்பூல் எனும் 26 வயது பெண்ணின் பேராண்மை.
ஹாஸ்னி முபாரக் என்ற ஆட்சியாளனின் கொடுமை தாங்கமுடியாமல் நான்கு இளைஞர்கள் தங்கள் உடலுக்கு தீ வைத்து எரிந்து போனார்கள் எகிப்த்தில்
அந்த நெருப்பின் அரசியல் வெப்பத்தை உள்வாங்கி அதை அந்த தேசம் முழுதும் விதைத்தால் அஸ்மா மக்பூல். தன் தேசம் மாற்றம் காண ஏதாவது செய்யவேண்டும் என நினைத்த அவள் தன் பேஸ் புக்கில் ஒரு ஸ்டேடஸ் போட்டால் "தீக்குளித்த நான்கு இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்த தஹ்ரீக் சதுக்கத்துக்கு நான் செல்ல இருக்கிறேன் என்னைப்போல சிந்தனையுடைய எவரும் வரலாம்" என்பதே அந்த ஸ்டேடஸ். இந்த ஸ்டேடஸ் பார்த்து மூன்று இளைஞர்கள்தான் வந்திருந்தனாறாம் கூடவே காவல்துறையும். காவல்துறை அவர்களை கைது செய்து விசாரணை நடத்திவிட்டு எச்சரித்து அனுப்பியது.
திரும்பி வந்த அஸ்மா அச்சமடையவில்லை.அமைதியாகிவிடவில்லை. இம்முறை பேஸ் புக்கில் அவளே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டாள். அதில் "தங்களுக்கு தன்னம்பிக்கை இருக்குமானால் இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால் ஜனவரி 25 ஆம் தேதி நாம் போராட்டத்தில் குதிக்கவேண்டும் அன்று யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் தனியாக செல்வேன். தீ குளிப்பதற்காக அல்ல என்னை சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை நீங்கள் உங்களை ஆணாக கருதினால் வாருங்கள்" என்று ஆவேசமாகவும் "அல்லாஹுவை தவிர வேறு எந்த சக்த்திக்கும் அஞ்சாதீர்கள்" என நம்பிக்கையூட்டும் விதமாகவும் பேசியிருந்தால் .
ஜனவரி 26 ல் தேசத்தின் எல்லா திசைகளிலிருந்தும் தஹ்ரீக் சதுக்கத்தை தேடிவந்தனர் மக்கள்.
மக்கள் ஆம் மக்கள் மக்கள் மட்டுமே மாற்றத்தின் உந்து சக்தி என்று மாவோ சொன்னதை நிறைவேற்றிவிட்டே கலைந்து சென்றது அந்த மக்கள் கூட்டம். எனவே அஸ்மாவின் பேராண்மை அந்த கொடுங்கோலனின் ஆட்சியே அகற்றியது. இன்னைக்கு மீசை முறிக்கி நான் ஆண் என சொல்லிக்கொள்ளும் எத்தனை பேருக்கு இருக்கிறது ஆட்சியாளரை எதிர்த்து கேள்விகேட்க்கும் ஆண்மை.
இறுதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் எந்த ஒரு சமூகமும் தானாக முன்வந்து போராடாதவரை விடுதலை அடையமுடியாது. ஆணாதிக்க சிந்தனையில் உதித்த பழமொழிகள், மத நம்பிக்கைகள், சினிமா, இன்னபிற விசயங்களை தூக்கி குப்பையில் வைப்போம். முன்னொரு காலத்தில் பெண்கள் அனைவரும் ஆண்களால் பராமரிக்கபடார்கள் எனும் வரலாற்றை நம் பிந்தைய தலைமுறையின் பாடதித்தில் வைப்போம்.ஆகவே ''ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே'' எனும் ஆணாதிக்க பழமொழிகளை தகர்த்தெறிவோம் ''சமூகவிடுதலை சாத்தியமாவதும் பெண்ணாலே ஆணாதிக்கம் ஒழிவதும் பெண்ணாலே'' எனும் புதுமொழி படைப்போம் வாருங்கள். நன்றி வணக்கம்

(8- 3 - 2012)அன்று சட்ட கல்லூரி மகளிர் தின விழாவில் பேசியது.