திங்கள், 23 ஆகஸ்ட், 2010

வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது

உழைக்கும் வர்கத்தின் குரலில் மேட்டுக்குடி வார்த்தைகளை வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார் நடிகர் வடிவேலு சுதந்திர தின சிறப்பு டீல நோ டீலாவில்
ஒரு தாய் மக்கள் நாம் என்போம் எனும் பாடலுடன் அறிமுக உரை நிகழ்த்தி அடித்தரே ஒரு லக்சர் அத மட்டும் உத்தமபுறம் ,பாப்பாபட்டி, கீறிப்பட்டி மக்கள் கேட்ட ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது உனக்கு .
பிறகு பெற்ற சுதந்திரத்தை? பேணி பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி ஒரு பாடல் (5 லட்சம் வீரகளை! நிறுத்தியும் 3க்கு2 அளவுள்ள தேசிய கொடி ஏத்தமுடியல சுதந்திர தினத்தன்று காஷ்மீர்ல)
ஆனா அவர்களை புகழ்ந்து கொண்டே வந்ததவர் தன்னையும் அறியாமலோ அறிந்தோ ஒரு உண்மையை சொன்னார். அதாவது காஷ்மீரின் எலும்புருக்கும் பனிமலையில் அவர்கள் காவல் இருக்கவில்லையென்றால் நாம் நிமமதியாக தூங்க முடியாதாம் .உண்மை தான் ஆனால் நாம் என்பதில் இந்த தேசத்தின் பெரும்பான்மையான உழைக்கும் வர்கமாகிய நாங்கள் இல்லை
நீங்கள் தான் தூங்க முடியாமல் துன்பப்படுவீர்கள் .
"அவர்கள் 18,000 அடி உயரத்தில் மட்டுமல்ல அவர்கள் உங்கள் வீட்டு வாசலிலும் தான் நிற்கிறார்கள் அவர்கள் முன்னாள் ராணுவவீரர்கள் நேற்று நாட்டு எல்லைக்கு காவல் இன்று உங்கள் வீட்டு எல்லைக்கு காவல் இரண்டும் ஒன்றுதான் எனும் ரகசியம் அந்த ஏமாளிகளுக்கு புரியும் வரை நீங்கள் நிம்மதியாக தூங்கலாம்"
எனும் மருதையனின் வரிகள் மனதில் ஓடியது

1 கருத்து:

  1. அந்த நிகழ்ச்சி நானும் பார்த்தேன்...சுதந்திர உணர்வை வெளிப்படுத்துகிறேன் என்று அவர் நடித்த நடிப்பு எரிச்சலையே தந்தது....

    பதிலளிநீக்கு