புதன், 18 ஆகஸ்ட், 2010

சு "தந்திரம்"


கல்வியின் பெயரால் தாங்கள் கொள்ளையடிப்பதை மறந்து கொடியேற்றி
மிட்டாய் தின்று இனிதே முடிகிறது மாணவ சுதந்திரம் .
வீதியோவியத்தில் சேவும் பகத்சிங்கும் சிரிக்க இனிதே
கழிகிறது கம்யூனிஸ்ட் கட்சிகளின் சுதந்திரம்.
மோடியும் அத்வானியும் சுதந்திர தின விழாக்களில் .
மதானியும் அன்சாரியும் தனிமைச்சிறையில்
அணிவகுப்பில் அரங்கேறுகிறது இஸ்லாமிய இயக்கங்களின் சுதந்திரம்.
அடிமை இந்தியாவில் ஜாலியன் வாலபாக் மண்ணை எடுத்தான்
பகத்சிங் கலகம் பிறந்தது.
சுதந்திர இந்தியாவில் போபால் மண்ணை எடுத்தான்
ஜெய் ராம் ரமேஷ் ஆணவம் பிறந்ததது .
மண்ணை தொட்டும் உயரோடு இருப்பதாக உளறினனாம் .
ஆம் உயிரோடுதான் இருக்கிறான் நம் உணர்வுகள் மரித்ததால்.
புரிந்து கொண்டோம் ச்சூ (சு) "தந்திரம்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக