புதன், 25 ஆகஸ்ட், 2010

தேச பக்தர்கள் கவனத்திற்கு


மூன்று நாட்களுக்கு ஒரு இந்திய ராணுவ வீரன் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு இறக்கிரானாம் .

கார்கில் போரின் போது குத்தாட்டம் போட்டு நிதி வசூலித்த தேசபக்தத நடிகர்களே  கலைஞர்களே .
கார்கிலுக்காக மேடை போட்டு கண்ணீர் சிந்திய மேட்டுக்குடி அப்பார்ட்ட்மென்ட் தேச பக்தர்களே
மக்களிடம் போர் பிரசாரத்தை எடுத்து சொல்லி உண்டியலில் காசு வாங்க மாணவர்களை மோட்டிவேட் செய்த மரியாதைக்குரிய தேசபக்தி ஆசிரியபெருமக்களே
உண்டியலில் தேசபக்தி வழிய வழிய காசு போட்ட வர்த்தகர்களே
எல்லாத்துக்கும் மேலாக தேசபக்தியின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்கலான சுயம் சேவகர்களே வாருங்கள் உங்களுக்கான தேவையும் வேலையும் வந்திருக்கிறது மீண்டும்.................................. . வருவீர்கள பக்தர்களே
முன்பு தெருவெங்கும் நீங்கள் துண்டேந்தி வந்த பொழுது நீங்கள் கூறினீர்களே அதே அதே காரணத்திர்க்காகதான் இப்பொழுதும் அழைக்கிறோம் வாருங்கள் நம் தேசத்தின் எதிரிகளால்  கொல்லப்பட்டவர்கள் இன்று தங்களை தாங்களே கொன்று கொண்டிருக்கிறார்களாம் . வாருங்கள் கார்கிலை பிரசாரம் செய்தது போலவே இதையும் பிரசாரம் செய்வோம்.  இந்தக்கொலைகளுக்கு யார் கரணம் அல்லது எது காரணம் என கண்டறிவோம் .
வருவீர்களா................. வரமாட்டீர் ..............
காரணம்  இவன் இறந்தால் எதிரிகள் உள்ளே நுழைந்து விடுவார்கள் அவ்வாறு நுழைந்தால் தங்கள் உடமைகள் இழந்துவிட நேரிடும் என்ற அச்சத்தால் எழுந்த அக்கரயும் பக்தியும் தான் கார்கிலில் உங்களை உந்தித்தள்ளியது .
மாறாக இப்பொழுது அவன் இறந்ததால் அதனால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை உங்களுக்கு..................................................அதனால் வரமாட்டீர்  தேசபக்தர்களே.
சிலது அழிந்துதான் சிலதுக்கு உரமாகின்றன எனும் பாரசீக பழமொழியின் அர்த்தம் புரிகிறது இப்போது ....................................................................................

1 கருத்து: