திங்கள், 23 ஆகஸ்ட், 2010

ஒரு புன்னகையும் பல இளிச்ச வாயன்களும்

ராஜ் டிவி யில் இரவு ஒரு நிகழ்ச்சி சினிமா சினிமா .
அதன் கான்செப்ட் இதுதான் நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு பிரபலத்தின் முகத்திலிருந்து ஏதாவது ஒரு பகுதி காட்டப்படுகிறது . பிரபலங்களின் பிரபலமான பகுதியே காட்டப்படுகிறது உதரணமாக மாதவனின் புன்னகை நாசரின் மூக்கு போல
நண்பர் ஒருவர் மாதவனின் புன்னகை டிவியில் காட்டப்பட்டதும் ஆர்வம் மேலிட தான் ஏதோ ஜேம்ஸ் பான்ட் ரேஞ்சில ஏதோ கண்டுபிடித்து விட்டது போலவும் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த்தார் . அப்பொழுது டிவியில் இந்த புன்னகை யாருடையது என்று கண்டுபிடித்து போன் செய்பவர்களுக்கு பத்தாயிரம் ரூவா பரிசு என்று அறிவ்துக்கொண்டிருன்தனர் ஓர் யுவனும் யுவதியும்
விடுவாரா நண்பர் தன் அலைபேசியிலிருந்து அழைத்தார் சிறிது மணித்துளிகளுக்கு பிறகு தன் காதிலிருந்து போனை எடுத்தவர் போனையே ஒரு சோக பார்வை பார்த்துக்கொண்டிருந்தார் . விஷயம் கேட்டபொழுது தன்னிடம் 50 ரூவா பாலன்ஸ் இருந்ததாகவும் 5 செக்கேண்டில் அது திவால் ஆகிவிட்டதாகவும் கூறினார்
முதலாளித்துவ சமூக அமைப்பில் இது போன்ற சிலந்தி வலைகள் எல்லா தளங்களிலும் பின்னப்பெட்டிருக்கும் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
டிவியில் சினிமா சினிமா போலவே மெயிலிலும் சில சமயம் பரிசு அறிவுப்புகள் வரும்
அப்புறம் ஷேர் மார்க்கெட் எல்லாம் இருக்கு. ஆறாவது அறிவும் நம்மகிட்டதான் இருக்கு

4 கருத்துகள்: