ஞாயிறு, 30 ஜூன், 2013

பேட்டை தாதாவும் வேட்டை நாயும்..!



தினந்தோறும் ஊடகங்களில் வெளிவரும் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னை பற்றிய செய்திகளை பார்க்கும்போது ,ஏதோ இஸ்ரேலும் பாலஸ்தீனும் பக்கதுபக்கதது நாடுகள் நாடுகள் என்றும் அவைகளுக்கிடையே ஏதோ எல்லை பிரச்னை என்றோ அரசியல் பிரச்னை என்றோ நம்மில் இன்னும் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம் .அனால் இதில் ஒளிந்துள்ள உண்மைகளை வரலாற்று பின்னணியில் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் . 


உண்மையில் இது அரசியல் பிரச்னை இல்லை ,இருப்பியல் பிரச்னை. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ,இரண்ண்டாம் உலக்காகப்போருக்கு பின் பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்த நாடுகள் ஒவ்வொன்றாக விடுதலை அடைந்த பிறகும் 21 ஆம் நூற்றாண்டில் இன்று வரை பாலஸ்தீன் மக்கள் அடிமை வாழ்வை வாழ்கிறார்கள் .இதை விட பெரிய கொடுமை என்னவென்றால் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கின்றனர் . 

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஹிட்லரின் நாஜிப்படைகள் நிகழ்த்திய யூத ஒழிப்பை நாம் அறிவோம் .அதற்கெல்லாம் வெகு காலம் முன்னமே , 15 ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே ஸ்பெயின், போர்சுகல் ,மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் யூதர்களை களை எடுக்கும் அல்லது அப்புறப்படுத்தும் வேலை மும்மரமாக நடந்தது , இது ஹிட்லர் காலம் வரை தொடர்ந்தது . 

எல்லா தேசங்களும் யூதர்களை வெறுக்க காரணம் என்ன ?யூதர்களின் இன உணர்வுதான் .யூத மதம் தான் உலகிலேயே சிறந்த மதம் ,யூத இனம் மட்டுமே மற்ற எல்லா இனங்களையும் விட மேண்மையானது என்று அவர்கள் கொண்டிருந்த வீண் ஆணவமும் வெட்டி செருக்குமே காரணம் . 

அடுத்ததாக அவர்களின் குயுக்தி எண்ணங்கள் ,தமது தொழில், வியாபாரம் ,மேன்மையடைய எந்த கெட்ட காரியம் செய்வதற்கும் தயாராக இருந்தார்கள் .அகதிகளாக செல்கிற தேசத்தில் உள்ள சுதேசி தொழில்களை நசுக்கி, இவர்களது தொழில் மேம்பட வேண்டி அரசு அதிகாரி முதல் நீதிபதிகள் வரை லஞ்சம் கொடுத்து காரியங்களை சாதித்து கொண்டனர் . பல நாடுகளில் பல 'கேதான் தேசாய் 'களை உருவாகினார்கள் . 

எந்த வகையிலாவது தகிடுதத்தம் செய்து தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொண்டு மற்ற சுதேசி மக்களை ஏளனம் செய்ததோடு மற்றவர்கள் தங்களுக்கு கீழானவர்கள் என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள் ,எனவே எல்லா நாடுகளிலும் சுதேசி மக்களின் வெறுப்புக்குள்ளாகி அங்கிருந்து விரட்டப்பட்டனர் . 

வாழ வழியில்லாமல் தமக்கென சொந்தமாக ஒரு தேசம் இல்லாமல் உலகம் முழுவதும் நாடோடிகளாய் ஓடிக்கொண்டிருந்த யூதகூட்டதை அரவணைத்து வாழ இடம் கொடுத்து பாதுகாத்தது பாலஸ்தீன் மக்கள் தான் .அந்த பாலஸ்தீன் மக்களை ஏமாற்றி, அராபியர்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகத்தின் மூலம் உருவானதுதான் இஸ்ரேல் . 

1948 ஆம் ஆண்டுவரையில் இஸ்ரேல் என்ற ஒரு தேசமே கிடையாது .பாலஸ்தீன் என்ற பரந்த தேசமே இருந்தது . 

1875 ஆம் ஆண்டுவாகில் பாலஸ்தீனில் அகதிகளாக குடியேறிய யூதர்கள் உலகமெங்கும் தம்மக்கள் படும் துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு காண எண்ணினர்,அப்போது அவர்கள் ஏற்ப்படுத்திய கொள்கையே ஜியோனிசம் ஆகும் .அதற்காக உலகம் முழுதும் உள்ள யூதர்களிடம் நிதியுதவி பெற்று பாலஸ்தீனில் நில வங்கி உருவாக்கப் பட்டது .இதன் வேலை என்னவெனில் பாலஸ்தீனில் உள்ள விவசாய நிலங்களை விலைக்கு வாங்குவதும் அந்த இடத்தில மும்மரமாக யூத குடியிருப்புகளை நிறுவுதலும் ஆகும் ,இதே வேலையை தான் இலங்கையில் சிங்களனும் செய்தான் என்பது நினைவிருக்கிறதா ? 

மேலும் நில வங்கிகள் மூலம் கடன் கொடுக்கப்பட்டது .படிப்பறிவில்லாத அராபியர்களிடம் பல்வேறு ஏமாற்று நிபந்தனைகளுடன் கூடிய பத்திரங்களில் எழுதி வாங்கி அதிக வட்டிக்கு கடன் கொடுத்தது .நாட்கள் செல்லசெல்ல அதன் சுயரூபம் தெரிய வந்தது .ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதிக வட்டி அபராத வட்டி என்று சொல்லி அராபியர்களின் நிலங்களை பறிமுதல் செய்தனர் .இடை எதிர்த்து பொங்கிய அராபியர்கள் குண்டர்களை கொண்டு அடக்கப்பட்டனர்.கொஞ்சம்கொஞ்சம்காக பாமர மக்களின் வயிற்றில் அடித்து நில வங்கி செழித்து வளர்ந்தது .பிறகு கடன் வாங்காத அராபியர்களில் சிலருடைய நிலமும் கட்டாயமாக பறிமுதல் செயப்பட்டது .அரசாங்கமும் நீதித்துறையும் லஞ்சத்தில் மூழ்கி அநீதித்துறையாக மாறி நில வங்கிக்கு துணை போயின . 

இதற்கிடையில் முதல் உலகப்போரின் முடிவில் பாலஸ்தீனை பிரிட்டன் கைப்பற்றி அதன் காலனியாககிகொண்டது ,அப்போது அதன் வெளிஉறவு துறை அமைச்சர் ஆர்தர் பால்பர் என்பவர் மகா நயவஞ்சக பிரகடனம் ஒன்றை வெளியிட்டார் அதன் சாரம் "பாலஸ்தீனில் யூதர்களுக்கு தனி நிலப்பரப்பு அமைக்கப்படுகிறது , இப்போது அங்கு வசிக்கும் யூதர்கள் அல்லாதவர்களின் பொது உரிமை , மத உரிமைகள் பாதுகாக்கப்படும் " 

அதாவதுபூர்வீகமாக அங்கு வாழும்அராபியர்களை, யூதர்கள் அல்லாதவர்கள் என்று குறிப்பதன் மூலம் நிராகரித்து வந்தேறிகளான யூதர்களை மண்ணின் மைந்தர்களாக திரித்து கூறியது ,எனவே தான் வரலாற்று ஆசிரியர்கள் பால்பர் பிரகடனத்தை "வடிகட்டிய அயோகியத்தனம் "என்று வர்ணிக்கிறார்கள். 

பிறகு ஜியோனிசம் சார்பாக ஒரு அழைப்பு வெளியிடப்பட்டது "உலக யூதர்களே பாலஸ்தீன் வாருங்கள் நமக்கான ஒரு தேசத்தை அமைப்போம் " அவ்வளவுதான் உலகெங்கிலும் இருந்து யூதர்கள் அலைஅலைஎன வந்து குடியேறினர் .POSPORT ,விசா , எதுவும் தேவையில்லை நீ யூதனா உள்ளே வரலாம் என்கிற நிலை .இந்த அராஜக குடியேற்றங்களுக்கு பிரிட்டன் முழு ஆதரவு கொடுத்தது ,அப்போதைய பிரிட்டன் பிரதமர் பெஞ்சமின் T இஸ்ரேலி ஒரு யூதர். 

பிறகு பிரிட்டன் பாலஸ்தீனுக்கு சுதந்திரம் கொடுத்து போனபோது தன குள்ளநரி வேலையை செய்து பிரிவினை செய்து ஒரு நிரந்தர பதட்டம் அங்கு ஏற்ப்படுத்தியது . 


1948 மே 14 அன்று இஸ்ரேல் உருவானதாக யூதர்கள் அறிவித்தார்கள் .அடுத்த நிமிடமே பாலஸ்தீன போராளிகளும் , இராக் ,எகிப்து, ஜோர்டான் .சிரியா ,லெபனான் ,போன்ற அண்டை நாடுகளும் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன .அப்போது உலக நாடுகளின் நாட்டாமை அமெரிக்க தலையீட்டால் ஐய் நா சபை போர் நிறுத்தம் கொண்டுவர சொன்னது .ஐ நா வாக்குப்படி எந்த நாடுகள் எங்கு நிலை கொண்டுள்ளதோ அது வரை அந்த நாடுகளுக்கு சொந்தம் . 

எகிப்து காசா வரை முன்னேறியிருந்தது ,ஜோர்டானுக்கு மேற்கு கரை சொந்தமானது, மீதமிருந்த நிலப்பரப்புகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்திருந்தது , சரி இப்போது பாலஸ்தீன் எங்கே ? பாலஸ்தீன் மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாறிப்போனது இப்படி தான் . 

சரி உலகங்களின் போலீஸ்காரன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பக்கா திருடனான அமெரிக்க இஸ்ரேலை ஆதரிக்க என்ன காரணம்? காரணம் எண்ணெய்,இஸ்ரேலில் பெரிதாக எண்ணெய் வளம் இல்லையென்றாலும் அதை சுற்றியுள்ள நாடுகள் எண்ணெய் வளம் மிக்கவை ,அவற்றோடு ஒப்பந்தம் செய்து கொண்டு என்னையையும் அந்த மக்களின் வாழ்வாதாரத்தையும் உறிஞ்சும் பகாசுர திட்டம். அதற்க்கு ஒரு தளம் தேவை ,தன வழிக்கு வராத தேசங்களை மிரட்டி பணியவைக்க தன ராணுவ தளம் ஒன்று மதிய கிழக்கில் தேவை , எனவே தான் இஸ்ரேலை தன வேட்டை நாயாக ஆக்கிக்கொண்டது ,இஸ்ரேல் ராணுவ உதவி, நிதி உதவி போன்ற எலும்புதுன்ன்டுகளை பெற்றுக்கொண்டது ...

- தோழர் ஹீரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக