புதன், 15 செப்டம்பர், 2010

கழிவறைக்கும் உதவாதினி

கோவையில் 2010 செப்11 அன்று குனியமுத்தூர் எனும் பகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் இந்து முன்னணி வி ஹெச் பி அனுமன் சேனா போன்ற அமைப்புகளை சேர்ந்த ரௌடி கும்பல் ஒன்று விநாயகர் சிலை கொண்டுவந்து பள்ளிவாசலின் அருகில் வைத்தனர் (இந்த இடம் ஒரு முஸ்லிமுக்கு சொந்தமானது ) இந்த இடத்தில் இப்படி வைப்பது இது மூன்றாவது முறை ஒவ்வொரு முறையும் பிரச்சனை ஆகும் போலீஸ் வரும் ரௌடிகள் எடுத்து சென்று விடுவர்
அதே போலதான் அன்றும் எடுத்து சென்றுவிட்டனர் ஆனால் திடீரென நள்ளிரவு சுமார் 1 மணிக்கு மீண்டும் ஒரு ஒன்னரை அடி பிள்ளையாரை கொண்டுவந்து நட்டுவிட்டனர்
அதை தட்டிக்கேட்ட முஸ்லிம்களுக்கும் அந்த ரௌடிகளுக்கும் அடிதடியாகிவிட்டது மாலையே பதட்டம் இருந்தததால் தயாராக இருந்த காவல்துறை தலையிட்டு இரு தரப்பிலும் சிலரை கைது செய்து சிலையையும் அப்புறப்படுத்தியது அதை தொடர்ந்து மறுநாள் இரவு மதுக்கரை எனும் பகுதியில் உள்ள முஸ்லிம் காலனி எனும் பகுதியில் புகுந்தது பொதுமக்களை தாக்கியும் கடைகளை சூறையாடியும் சென்றது ஒரு கும்பல்
உண்மை இவ்வாறு இருக்க தின மல(ர்)ம் நாளிதளின் கோவை பதிப்பில் வெளியாகியுள்ள செய்தி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலவே உள்ளது
அந்த செய்தியில் பொது மக்கள் சிலை வைத்தது போலவும் அதற்க்கு இஸ்லாமியர்கள் ஏதிர்ப்பு தெரிவித்தது போலவும் பொய்யாய் புனைந்துள்ளனர் மேலும் விநாயகர் சதுர்த்தி விழ யாரால் எந்த ஆண்டுமுதல் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டு கொண்டாடப்படுகிறது என்பதை தின மலம் ஒன்றும் அறியாததில்லை இங்கே இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும் சென்னை எம் ஜி ஆர் நகரில் மக்கள் கலை இலக்கிய கழகம் நடத்திய இந்தியாவின் இதயத்தின் மீதான போர் எனும் தலைப்பில் பச்சை வேட்டைக்கு எதிரான கருத்தரங்கம் நடந்த மறுதினம் இதே நாளிதழில் வந்த செய்தியில் நக்சலைட்டுகள் தமிழகத்தில் ஊடுருவல் தமிழக உளவுத்துரைன் குறைபாடு என்றெல்லாம் கவலை பட்டுக்கொண்டது (அந்த கருத்தரங்கம் ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி தெருமுனை விளக்க கூட்டமெல்லாம் போட்டு நடந்தது அது தான் உளவுத்துறைக்கு தெரியாததாம் ) அது மக்கள் நடத்தியது அதை நக்சல்கள் என சித்தரிக்கும் தின மலத்துக்கு சதுர்த்தி நடத்துவது சில இந்து அமைப்புகள் என்பது தெரியாதுபோலும்
மேலும் அந்த செய்தியில் சிலையை அகற்ற சப் இன்ஸ்பெக்டருடன் வந்த இரு அப்பாவிகளை அங்கிருந்த முஸ்லிம்கள் தாக்கி விட்டார்கள் என்றும் ஒரு பொய்யை வாந்திஎடுத்துள்ளது தினமலம்
இறுதியாக மக்கள் புரிந்துகொள்ள இந்த புகைப்படங்களையும் இணைக்கிறேன்
இது கடைகள் சூறையாடப்பட்ட மதுக்கரையில் வி ஹெச் பி வைத்துள்ள பேனர்
பேனர் வாசகம் இதுதான் ; வந்தால் உங்களோடு
வராவிட்டால் நாங்களாக
ஏதிர்த்தால் உங்களையும் மீறி
V H P மதுக்கரை
இது போன்ற செயலில் ஈடுபடுவது பொதுமக்கள் அல்ல என்பதை காட்டும் தினதந்தி செய்தி இத பார்த்தாவே புரிஞ்சுக்கலாம் சதுர்த்தி எதற்குன்னு
இறுதியாக இதுபோன்ற பொய்களையே பரப்பி வரும் தினமலத்தை இனி நம் கழிவறை காகிதமாக கூட பயன்படுத்தாமல் புறக்கணிப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக