வியாழன், 5 ஏப்ரல், 2012

Gandhi country - Is it not contradictory ?


Few months ago a group of Nigerian students from t Sri Ramakrishna Advance Training Institute in Coimbatore, lodged a complaint with the Commissioner of Police, informing that they were discriminated against by their neighbours, on account of their race, and this news has been published in many newspapers country wide..Following news was also published " They avoided going to the UK & many other countries to pursue their studies, thinking that they would face discrimination in a white nation. However, they were shocked to realize that even in India- gandhi's Nation , they were discriminated against.

The students also said that they had made the trip to India through proper channels, with the required documents for travel, including VISA, that were provided by the Indian Embassy at Nigeria. They just wished to stay in India, long enough to complete their program. They told the commissioner that their neighbours often called them with derogatory names and were rude towards them.

WHAT IS THE REAL REASON BEHIND THEIR TEARS?.

The image India has portrayed to the outside world is the main reason. A nation where saints, holy people , & temples has made it a holy nation without any discrimination was forced to be believed by brahminical egoistics through scriptures, stories and legends for centuries..

Also Gandhi's one side life only has been exaggerated.. India was in the hands of brahminical fascism and this was manifested by the glorification of fascism in the traditional Brahminical value system espoused by high-caste Hindus which Gandhi also supported. The minority Brahmin in-order to preserve self interests, they portrayed themselves as priests and used religion to gain political and economic control , resorted to deceptive ways..and devised the "Varnashrama/ Manu Dharma - caste system which taught inequality among men based on birth , family lineage and proclaimed it as will of God.. No doubt Brahmins were at the top of this hierarchy who established themselves as mediators between God and Man.

So Gandhi was supportive of these hierarchy which Dr.B.R. Ambedkar & Periyar have mentioned in detail in their writings.. Gandhi, threatened to starve himself unto death and strongly opposed the Poona pact an agreement between the Dalits led by Dr.B.R. Ambedkar and upper class Hindus led by Gandhi .
The three great Martyrs and most prominent freedom fighters of India Bhagat Singh, Rajguru and Sukhdev
were executed on the eve of the Karachi Congress while Gandhi saw to that the meeting was not disturbed by any protest for their hanging and so it was done before that..The Karachi Congress convened under the shadow of execution truly represented the temper of the country that time... Gandhi was greeted with black flags and shouts of "Down with Gandhism". During his time as Congress leader he never took steps to abolish caste system..
When Ginning factory employees and workers stood against capitalism Gandhi supported the employers only.. He was always supportive to the great Elites like TATA , BIRLA and no doubt he was God for them . So a lot of events can be told about Gandhi , how he supported caste system, capitalism , and promoted inequality while the picture painted to the outside world was not clear and why these students were fooled to believe India as a non-discriminative country. As with Dr.B.R. Ambedkar words , " The discrimination & abuse is equivalently same as Black people , by Brahmins in India to the Daliths , but Brahmanism cleverly hides to the outside world''- Ambedkar
Lets bring out all the dirty beliefs in Brahmanism which hasdone greater damage to most citizens as slavery for a very long period..

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

காந்தி தேசமாம்..... காமடி பண்றாங்கப்பா....


கடந்த சில தினங்களுக்கு முன்பு நைஜீரியா நாட்டு மாணவர்கள் கோவை நகர காவல்துறை ஆணையாளரை சந்தித்து கண்ணீர் கடிதத்தை தந்தனர். இச்செய்தி அனைத்து செய்திதாள்களிலும் வெளியாகி இருந்தது.
அக்கடிதத்தில் கீழ்க்கண்ட செய்திகள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தாங்கள் நைஜீரிய நாட்டு அரசின் உதவியுடன் தமிழகத்தில் தங்கி மேற்கல்வி கற்க வந்திருப்பதாகவும். வேறு வெளிநாடுகளை மேற்க்கல்விக்காக தேர்ந்தெடுக்காத காரணம் அங்கெல்லாம் கருப்பு-வெள்ளை இனவெறி நிலவுவதால் படிக்க இயலவில்லை எனவும், ஆனால் காந்தி பிறந்த இத்தேசத்தில் இனவெறி இருக்காதெனவும் நினைத்து இங்கே மேற்கல்வி படிக்க தேர்ந்தெடுத்தோம்.
நாங்கள் இங்கு படிக்கத்தொடங்கிய சிறிது காலத்திற்குள் வாடகைக்கு குடியிருந்த அறையின் சொந்தக்காரரும் அண்டைவீட்டு குடியிருப்பு வாசிகளும் எங்களை இனவெறி காரணமாக அறையை காலி செய்து வெளியேறுமாறு கூறுகின்றனர். எனவே நாங்கள் இன்னும் கல்வி பயின்று முடிக்க சில காலம் தேவை படுவதால் எங்களை வெளியேற்ற கூடாதெனவும் மேற்ப்படி கல்வி பயில உதவி புரியுமாறும் நைஜீரியா நாட்டு மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நைஜீரிய நாட்டு மாணவர்களின் கண்ணீருக்கு காரணம் என்ன?

இந்தியா பற்றிய தோற்றம் வெளிநாடுகளில் இப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதே நைஜீரிய நாட்டு மாணவர்களின் கண்ணீருக்கு காரணம்.
இது மகான்கள் வாழ்ந்த தேசம் என்றும் கோயில்களின் நாடு என்றும் பார்ப்பனிய நூல்களாலும், எழுத்துக்களாலும் பல நூற்றாண்டுகளாக நம்பவைக்கப்பட்டுள்ளது.
மேலும் காந்தியை பற்றிய ஒரு பக்க பார்வை மட்டுமே உலகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா பார்ப்பனிய தேசமாகும். காந்தி இந்த பார்ப்பனிய தேசத்தை சிறிதும் சீர்குலைந்து விடாமல் கட்டிகாப்பாற்ற கர்ம சிரத்தையுடன் போராடிய மனுதர்மவாதி. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட மக்கள் சாதி என்னும் அரக்கனால் சித்திரவதைக்குள்ளாகி மடிந்து கொண்டிருப்பதற்கு காரணமான பார்ப்பனிய மனுதர்மத்தை தன் வாழ்நாள் முழுவதும் போற்றி புகழ்ந்த, கடைபிடித்த சாதி வெறியாளர் தான் திரு.காந்தி.
புரச்சியாளர் அம்பேத்க்கரும், தந்தை பெரியாரும் தங்களது எழுத்துக்களால் பல்வேறு நூல்களில் இதை நிரூபித்துள்ளனர். தாழ்த்தப்பட்டோரின் நலனுக்கான இரட்டை வாக்குரிமை (பூனே ஒப்பந்தம்) தர கூடாது என சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து போராடிய தேசத்தந்தான் காந்தி.
பிச்சை கேட்டு பெறுவது சுதந்திரம் அல்ல. தாய்நாட்டை காக்க இதோ எங்கள் உயிர் என ஆங்கில ஆட்சிக்கு எதிராக போர் முழக்கமிட்டு தூக்கு தண்டனை பெற்ற இந்த நாட்டின் தவப்புதல்வர்கள் பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ்,ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்காமல் தான் நடத்த போகும் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு எந்தவித இடையூறும் வராமல் இருக்க வேண்டி மாநாட்டுக்கு முன்பே அவர்களை தூக்கில் போடுங்கள் என ஆங்கில (இர்வின் பிரபு!?) அரசுக்கு கோரிக்கை வைத்தவர்தான். அனைத்து உயிர்களையும் நேசிக்க வலியுறுத்திய நம் ''அஹிம்சா மூர்த்தி'' காந்தி. இந்திய வரலாற்றில் காந்திக்கு முதன் முதலாக கருப்பு கொடி காட்டப்பட்டதும் இச்சம்பவத்திர்காகத்தான்.
காந்தி அவர்கள் காங்கிரஸ் தலைவராக இருந்தவரை சாதி ஒழிப்பிற்காக ஒரு துரும்பையும் செய்யவிடாமல் தடுத்தவர்தான்.
பஞ்சாலை தொழிலாளர்களும்,உழைக்கும் மக்களும் முதலாளித்துவத்திற்கு எதிராக எழுந்து நின்ற பொழுது முதலாளித்துவத்திற்கு நண்பனாக நின்றவர்தான். இந்த டாட்டா,பிர்லா அவர்களின் தேசத்தந்தை காந்தி.
இப்படி பல குறிப்புகளை கூறிக்கொண்டே போகலாம் இந்த திரு.காந்தியையும், அவரின் மனுதர்ம தேசத்தையும் புரிந்துகொள்ள.
இறுதியாக நைஜீரியாவில் மட்டுமல்ல உலகின் பிற நாடுகளிலும் இந்தியா பற்றி இப்படி ஒரு பிரமை ஏன் ஏற்ப்பட்டது அது நீடிக்கின்றது எனபதை அம்பேத்க்கரின் மொழியிலிருந்தே நாம் புரிந்துகொள்ளமுடியும்.
''கறுப்பின மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு சற்றும் குறைவில்லாததுதான். இந்தியாவில் தலித்துக்கள் மீது நடைபெறும் வன்முறையும். ஆனால் அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்கிறது பார்ப்பனியம்'' - அம்பேத்க்கார்.
பார்ப்பனியத்தின் சதிகளை அம்பலப்படுத்துவோம்.உண்மையான நிலையை உலகுக்கு சொல்லுவோம்.

திங்கள், 12 மார்ச், 2012

சட்டக்கல்லூரியில் மகளிர் தின விழா


அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தின் எந்த ஒரு பகுதியில் அடக்குமுறை அரங்கேறினாலும். மனித உரிமைகள் மீறப்படும்போதும். அதை எதிர்த்து முதலில் பதியப்படும் எதிர்ப்பு குரல் உங்கள் குரல். கோவை சட்டக்கலூரி மாணவர்களின் குரல். எனவே நீங்கள் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் நானும் உங்களோடு கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இதற்க்கான வாய்ப்பை எனக்கு நல்கிய கல்லூரியின் முதல்வர், கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் மாணவர்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
இங்கே உள்ளே வந்ததும் மனதுக்கு நிறைவான இன்னொன்றையும் கண்ணுற்றேன். எப்போதுமே பெண்கள் விடுதலை, சுதந்திரம் பற்றியெல்லாம் யாரு அதிகமாக பேசிக்கிட்டு இருப்போம்னா? ஆண்கள்தான் அதை பற்றி பேசிகிட்டு இருப்போம். நேற்றுகூட இன்றைய மகளிர்தின தின நிகழ்ச்சிக்காக என்னை மாணவர்கள் அழைக்க வந்தபொழுது அனைவரும் ஆண்களாகத்தான் இருந்தனர். ஒரு அரைமணிநேரம் கழித்து ஒரே ஒரு பெண் வந்தார். நதியா.
பொதுவாகவே விடுதலை, சுதந்திரம் என்பதன் பொருள். நீங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புவது அல்ல. நீங்கள் எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவது ஆகும்.
அந்தவகையில் இங்கே ஆணுக்கு பெண் சரிநிகர் சமானமாக அமர்ந்திருப்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.
மகளிர் தினவிழா என்பது இன்றைக்கு முதலாளித்துவம் தனதாக்கி கொண்டது. முதலாளித்துவ சமூகத்தின் பெரு நிறுவனகள் இந்தநாளையும் தனது இலாப நோக்கிற்கு பயன்படுத்திக்கொண்டுள்ளன. அதற்க்கு தனது ஊடக பலத்தையும் பயன்படுத்தி முன்னேறுகிறது.
உழைக்கும் பெண்கள் சரியான நேர உழைப்பு, சரியான ஓய்வு வேண்டி முதலாளித்துவ இலாபவெறிக்கு எதிராக போராடிய நாளையே இன்று இலாப நோக்கிற்கு பயன்படுத்துகின்றது. இந்த முதலாளித்துவம். அதனால்தான் மார்க்ஸ் சொன்னார் ''இலாபம் கிடைக்கும் என்றால் தனக்கான சவப்பெட்டியை கூட தானே செய்துகொள்ளும் முதலாளித்துவம்'' என்று. fair & lovely யும் இன்ன பிற முகபூச்சு நிறுவனங்களும் தொலைக்காட்சியில் மகளிர்தின வாழ்த்துக்கள் சொல்கின்றன. பெண்ணையே விற்பனை பண்டமாக மாற்றி. ஒரு ஜவுளி நிறுவனம் பெண்கள் தின சிறப்பு போட்டிகள் என்ற பெயரில். மேட்டுக்குடி மகளிருக்கு ஒரு போட்டிவைத்து இருக்கிறது. ''புதையலை தேடி'' சொந்தமாக கார் வைத்திருக்கும் பெண்கள் அதில் கலந்துகொள்ளலாம். ஜவுளி நிறுவனம் வழங்கும் வரைப்படத்தை தொடர்ந்து சென்று யார் முதலில் அந்த புதையலை அடைகிறார்களோ அவர்களுக்கே முதல் பரிசு. உழைக்கும் மகளிர் தினம் எப்படி மகளிர் தினமாக மருவியது என்பதை கண்டறிவதே உண்மையாக நாம் தேடவேண்டிய புதையல் ஆகும்.
மகளிர் தினம் என்பது எப்படி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது என பார்த்தால் அது வெறும் fair & lovely யும் இன்னும் சில ஜவுளி நிறுவங்களும் கொண்டாடுவது போல சும்மா வாழ்த்து சொல்லி கொண்டாட ஆரம்பித்ததுவல்ல. மாறாக அது தியாகத்தின் வரலாறு போராட்டத்தின் வரலாறு.
18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பெண்கள் துணி உற்பத்திக்காக பஞ்சிலிருந்து நூலை பிரித்து கொடுக்கும் வேலைகளை தங்களது வீடுகளில் செய்துவந்தனர். 18 ஆம் நூற்றாண்டில் துணி உற்பத்தியில் நீராவி எஞ்சினின் வருகையால் உற்பத்தி வேகம் அதிகரிக்கிறது அதற்க்கு இணையாக பெண்களால் நூலை பிரிக்கமுடியாமல் அவர்கள் இரவுபகலாக வேலை பார்க்கின்றனர். இதனால் சில பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதில் கூட சிக்கலாகின்றது. bachelor என திருமணம் ஆகாத ஆண்களை ஆங்கிலத்திலே குறிப்பிடுவதுபோன்று பெண்களை குறிப்பிடும் வார்த்தை spinster என்பதுகூட இதிலிருந்து பிறந்ததுதானாம். அப்படி குறைவான கூலிக்கு நேரம்காலம் இல்லாமல் சுரண்டப்பட்டுவந்த பெண்கள் தங்களுக்கு சம உரிமை வேண்டும் எனவும். பத்து மணிநேர வேலை நேர உரிமை வேண்டும் எனவும் 1857 இல் மார்ச் 18 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மறியல் நடத்தினர். வழக்கம்போல காவல்துறை தடியடி நடத்தி அப்போராட்டத்தை ஒடுக்கினர். அதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கு பின்னர் அதே மாதத்தில் அந்த பெண்கள் முதல் தொழிற்சங்கத்தை கட்டினர். 51 ஆண்டுகளுக்கு பிறகு 1908 அன்று தையல் துறையை சார்ந்த வாரி சகோதரிகள் 1857 போராட்டத்தை கவுரவித்தும். வாக்குரிமை வேண்டியும் , குழந்தைகள் உழைப்பை சுரண்டுவது ஒழியவேண்டும் என வலியுறுத்தியும், பேரணி நடத்தினர். இதே போல நியூயார்க் டிராயாங்கிள் தொழிற்சங்க போராட்டத்தில் 146 பெண்கள் தாங்களே தியாகம் தந்தனர்."பெண்களின் இடம்" எனும் அற்ப சித்தாந்தங்கலையே வெட்க்கப்படவைத்த பெண்கள் அவர்கள். 1910 மே மாதத்தில் நடந்த சோசலிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரஸ்சில் பிப்பிரவரி இறுதி ஞாயிற்றுக்கிழமையை சர்வதேச பெண்கள் தினமாக அறிவிக்க வேண்டுமென்று பெண்கள் தேசிய குழு பரிந்துரைத்தது. அதற்குப்பிறகு பெண்கள் தினத்தை சர்வதேச நிகழ்ச்சியாக அடையாளப்படுத்த வேண்டுமென்ற கருத்துடன் அதே வருடம் கொபன்ஹெகனில் நடந்த 2 வது சர்வதேச சோஷலிச பெண்கள் மாநாட்டில் பிரதிநிதிகளாக அவர்கள் கலந்துகொண்டனர்.பின்னர் ''கிளாரா ஜெட்கின்'' என்ற புகழ்பெற்ற கம்யுனிஸ்ட் தலைவி சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாட்டில்பெண்களுக்கு உலகம் முழுதும் வாக்குரிமையை பெற உதவுவதற்கு ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். அது மார்ச் 19 ஐ மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது. பின்னர் சில சதிகார அரசுகளின் திட்டப்படி மகளிர்தின எதிர்ப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டது.இவ்வாறு மிக நீண்ட போராட்டம் மற்றும் பெண்களை திரட்டி பெண்களுக்கு எதிராகவே துரோகம் இளைத்தல் போன்ற அரசின் சதிச்செயல் ஆகிய எண்ணற்ற இன்னல்களையும் தாண்டிதான் இறுதியாக இன்றைய சர்வதேசிய மகளிர் தினம் மார்ச் 8 ல் உலகும் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மார்ச் 8 இதுவெறும் வார்த்தையல்ல பெண்கள் போராடிப்பெற்ற வெகுமதி.
அன்றைக்கு போராடவேண்டிய தேவை இருந்தது அதற்க்கு இன்றைக்கு என்ன எனும் கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுவதை காணமுடிகிறது. ஆனால் இன்றைக்கும் பெண்கள் வெறும் அலங்காரப் பொருளாகவும் நுகர்வு மற்றும் விற்பனை பண்டமாகவே இன்றைய சமூகத்தில் இருக்கிறாள் என்பதுவே உண்மை. குடும்ப அமைப்பு துவங்கி சமூகத்தின் எந்த இடத்திலும் பெண் சுதந்திரமானவளாக இல்லை. ஆணாதிக்கம் மொழிவழியும் மதம் வழியேயும் பெண்களை ஆளுமை செலுத்திக்கொண்டுதான் இருக்கின்றது. திரைப்படம் போன்ற ஊடகங்களின் வழி விர்ப்பனைக்காக மட்டுமல்ல பிடிக்காதவனை ஏசுவதற்கும் பெண்களின் அங்க அவயங்கலையே நமது மொழியில் பயன்படுத்துகிறோம். ஒருவனை இகழ்வதற்கும் அவனது தாயே பலிக்கிறது மொழி. ஓடுகாலி,வாயாடி,விதவை,விபச்சாரி போன்ற சொல்லாடல்களில் கூட ஆணாதிக்க சொல்லாடல்களே.அனைத்து மதங்களும் பெண்களை ஆணுக்கு கீழானவனாகவே பாவிக்கிறது மேலும் அவை பெண்களை அலங்கார பொருளாகவே பாவிக்கிறது என்பதன் மிக சிறந்த உதாரணம் சுவர்க்கம் எனும் கான்செப்ட் எந்த மதங்களின் சுவர்கங்களும் பெண்ணின்றி முழுமை அடைவதில்லை.
ஊடகங்களில் பெண். ஊடகங்களில் இன்றைய பெண்ணின் நிலையென்ன. அண்ணாச்சியின் ஆசை நாயகி ஜீவஜோதி இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்?. நித்தியானதா ரஞ்சிதா கஜகஜ. கஞ்சா சரினா என்ன ஆனார். ஜெயலட்சுமி இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார்? போன்ற செய்திகளை இரண்டு பக்கத்துக்கு மாஞ்சு மாஞ்சு எழுதும் எந்த பத்திரிக்கையும். சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் பெண்களைப்பற்றி எழுதுவதில்லை. ஒடுக்கப்படும் பெண்கள் அமைப்பாக திரலவேண்டிய அவசியத்தை பற்றி ஒரு வரி கூட எழுதுவது இல்லை. ஜீவஜோதியையும், ரஞ்சிதாவையும்,சரினாவையும் தெரிந்த எத்தனை பேருக்கு ஓசூர் தேவியை தெரியும். தேவி ஓசூர் சிப்காட்-2ல் எலக்ட்ரானிக் சர்க்கியூட் போர்டுகளை உற்பத்தி செய்யும் ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அந்நிறுவனத்தின் சுரண்டலுக்கு எதிராக திறத்துடன் போராடிய பெண்.நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராக தீரத்துடன் போராடிய தேவியை முன்னுதாரணமாக எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டதாக தெரியவில்லை. செய்தி ஊடகங்களை இப்படி என்றால் தமிழ் சினிமாவில் என்ன நடக்கிறது. 75 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ்சினிமாவில் பெண்களின் பணி என்பதே கதாநாயகனுக்கு சமூகப்பணிகள் இல்லாதபோது அவரை என்டர்டிரைன் பண்ணுவதும் அவனுடன் ஆடிப்பாடுவதுமே. 75 ஆண்டுகளில் இதுவரை வந்துள்ள எந்த திரைப்படத்திலும் ஆண்(அதாவது நாயகன்) பெண்ணை ஏமாற்றுவதாகவும். அதற்காக அப்பெண் ஆண் வர்கத்தையே குறைகூறி பாடுவதுபோலவும் வந்ததாக நினைவிலில்லை. ஆனால் நேற்று வந்த 7 ஆம் அறிவு யம்மா யம்மா காதல் பொன்னம்மா முதல் நாளை வரவிருக்கும் 3 படத்தின் கொலைவெறி வரைக்கும் எல்லாமே பெண்ணினத்தை கொச்சைப்படுத்தும் வரிகளே. இதுல கொடுமை என்னவென்றால் சில பெண் பாடலாசிரியர்களே இதுபோன்ற பாடல் இயற்றுவதே. அவங்களை சொல்லி என்ன பண்ண நாயகன் எனும் ஆணுக்கான பாடலைத்தானே அவரும் இயற்றுகிறார்.இப்படி இழிவு படுத்துவதோடுமட்டுமல்லாது திரைப்படங்கள் செய்யும் இன்னொரு முக்கியமான விஷயம். பெண்களை விற்பனை பண்டமாக பார்ப்பது. பெண்களை பண்டமாக பாவிக்கும் இந்த ஆணாதிக்க முதலாளித்துவ சமூகம் மார்க்ஸை நோக்கி கேட்டது. ''பொது உடமை பொது உடமை என பேசுறிய உனது மனைவி ஜென்னியையும் பொது உடமை ஆக்கிவிடவேண்டியதுதானே''? என்று. ''தன்னைத்தவிர எல்லாத்தையும் பண்டமாகவே பார்த்து பழக்கப்பட்ட சமூகம் என்பதால்தான் ஜென்னியிடம் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள்'' என்றான் அந்த மாமேதை.
அன்றைக்கு மார்க்ஸ் சொன்ன வார்த்தைகள் இன்றும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது சினிமாவில் பெண் வெறும் பண்டமாகவே வந்துபோகிறாள். டிவி சீரியல்களும் டிவியில் வரும் விளம்பரங்களும் இதிலிருந்து எந்தவகையிலும் மாறுபடுவது இல்லை. சினிமாவில் மூன்று மணிநேரம் காட்டுவதை சீரியலில் 300 எப்பிசோடிலும் விளம்பரத்தில் 30 வினாடிகளிலும் காட்டுகின்றனர் என்பதைத்தாண்டி வேறுபாடு ஒன்றுமில்லை.
ஆண்மை என்பது எவ்வளவு பொய்யோ! பெண்மையும் அவ்வளவு பொய்யே!!
பெண் பற்றி நமது பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் அத்துனையும் உயிரியல் ரீதியானவை கிடையாது. எல்லாமே நமது பண்பாட்டு தொழிற்கூடங்களால் நமது மனதில் அழுத்தி ஊன்றப்பட்டவைகளே. ஆண் உண்டு ஆண்மை இல்லை பெண் உண்டு பெண்மை இல்லை என்பதற்கு மிக சிறந்த உதாரணம் நமது சமகாலத்தில் எகிப்த்தில் ஆட்சியே மாற்றிப்போட்ட கிளர்ச்சியை தோற்றுவித்த அஸ்மா மக்பூல் எனும் 26 வயது பெண்ணின் பேராண்மை.
ஹாஸ்னி முபாரக் என்ற ஆட்சியாளனின் கொடுமை தாங்கமுடியாமல் நான்கு இளைஞர்கள் தங்கள் உடலுக்கு தீ வைத்து எரிந்து போனார்கள் எகிப்த்தில்
அந்த நெருப்பின் அரசியல் வெப்பத்தை உள்வாங்கி அதை அந்த தேசம் முழுதும் விதைத்தால் அஸ்மா மக்பூல். தன் தேசம் மாற்றம் காண ஏதாவது செய்யவேண்டும் என நினைத்த அவள் தன் பேஸ் புக்கில் ஒரு ஸ்டேடஸ் போட்டால் "தீக்குளித்த நான்கு இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்த தஹ்ரீக் சதுக்கத்துக்கு நான் செல்ல இருக்கிறேன் என்னைப்போல சிந்தனையுடைய எவரும் வரலாம்" என்பதே அந்த ஸ்டேடஸ். இந்த ஸ்டேடஸ் பார்த்து மூன்று இளைஞர்கள்தான் வந்திருந்தனாறாம் கூடவே காவல்துறையும். காவல்துறை அவர்களை கைது செய்து விசாரணை நடத்திவிட்டு எச்சரித்து அனுப்பியது.
திரும்பி வந்த அஸ்மா அச்சமடையவில்லை.அமைதியாகிவிடவில்லை. இம்முறை பேஸ் புக்கில் அவளே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டாள். அதில் "தங்களுக்கு தன்னம்பிக்கை இருக்குமானால் இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால் ஜனவரி 25 ஆம் தேதி நாம் போராட்டத்தில் குதிக்கவேண்டும் அன்று யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் தனியாக செல்வேன். தீ குளிப்பதற்காக அல்ல என்னை சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை நீங்கள் உங்களை ஆணாக கருதினால் வாருங்கள்" என்று ஆவேசமாகவும் "அல்லாஹுவை தவிர வேறு எந்த சக்த்திக்கும் அஞ்சாதீர்கள்" என நம்பிக்கையூட்டும் விதமாகவும் பேசியிருந்தால் .
ஜனவரி 26 ல் தேசத்தின் எல்லா திசைகளிலிருந்தும் தஹ்ரீக் சதுக்கத்தை தேடிவந்தனர் மக்கள்.
மக்கள் ஆம் மக்கள் மக்கள் மட்டுமே மாற்றத்தின் உந்து சக்தி என்று மாவோ சொன்னதை நிறைவேற்றிவிட்டே கலைந்து சென்றது அந்த மக்கள் கூட்டம். எனவே அஸ்மாவின் பேராண்மை அந்த கொடுங்கோலனின் ஆட்சியே அகற்றியது. இன்னைக்கு மீசை முறிக்கி நான் ஆண் என சொல்லிக்கொள்ளும் எத்தனை பேருக்கு இருக்கிறது ஆட்சியாளரை எதிர்த்து கேள்விகேட்க்கும் ஆண்மை.
இறுதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் எந்த ஒரு சமூகமும் தானாக முன்வந்து போராடாதவரை விடுதலை அடையமுடியாது. ஆணாதிக்க சிந்தனையில் உதித்த பழமொழிகள், மத நம்பிக்கைகள், சினிமா, இன்னபிற விசயங்களை தூக்கி குப்பையில் வைப்போம். முன்னொரு காலத்தில் பெண்கள் அனைவரும் ஆண்களால் பராமரிக்கபடார்கள் எனும் வரலாற்றை நம் பிந்தைய தலைமுறையின் பாடதித்தில் வைப்போம்.ஆகவே ''ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே'' எனும் ஆணாதிக்க பழமொழிகளை தகர்த்தெறிவோம் ''சமூகவிடுதலை சாத்தியமாவதும் பெண்ணாலே ஆணாதிக்கம் ஒழிவதும் பெண்ணாலே'' எனும் புதுமொழி படைப்போம் வாருங்கள். நன்றி வணக்கம்

(8- 3 - 2012)அன்று சட்ட கல்லூரி மகளிர் தின விழாவில் பேசியது.

வியாழன், 28 ஜூலை, 2011

வெல்லட்டும் மாணவர் போராட்டம்..



புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டங்களை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களை திரட்டியும் போராடிவருகிறது. இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஒரு அவதூறு செய்தியை தினமணி வெளியிட்டு இருந்தது அதாவது பு ம இ முவினர் பள்ளிமானவர்களை வேனில் கடத்தி போராட வைக்கின்றனர் என்பதே அந்த அவதூறு. (மேலும் விபரங்களுக்கு http://www.vinavu.com/2011/07/27/media-lies/ ) இதில் விசேசம் என்னவென்றால் தினமலத்தின் செய்திகளையெல்லாம் புரிந்துகொண்டு அம்பலப்படுத்தும் தமிழனவாதிகளில் சிலரே தினமலமாக தினமணியும் மாறிவருவதை புரிந்துகொள்ளாமலோ அல்லது அறிந்தேவோ இந்த பொய்யை அப்படியே சமூகவலைத்தலங்களின் ஊடாக பரப்பியும் பு.ம.இ.முவை கொச்சைபடுத்தியும் எழுதிவருகின்றனர். பள்ளிமாணவர்கள் போராடுவது மிகப்பெரிய தவறாம்.ஆனால் வரலாறு வேறாக இருக்கிறது .
சிட்டகாங் வீரர்கள்! அறிவீர்களா?
1930 களில் இந்தியாவெங்கும் எதிரொலித்த பெயர்கள். பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆயுதம்தாங்கிய மழலை பட்டாளங்கள். இந்த வயதில் தேசப்பற்றா வியப்புகளுக்கு பதில் சொல்லினர் "தாயை நேசிக்க மீசை முளைக்கவேண்டிய தேவையில்லையே"
மழலைகள் கூடிப்பேசின விடுதலை வேண்டும் அதற்க்கு என்ன செய்யலாம்? காவி உடுத்தலாம் கதரும் உடுத்தலாம். பிரார்த்தனை பண்ணலாம் அனுமதி பெற்று அரசியல் பற்றி அமர்ந்தும் பேசலாம். சுதந்திரம் பெற இப்படிப்பட்ட சிந்தனைகள் சூறாவளியாக சுழண்டு கொண்டிருந்த காலத்தில் புரட்சிப்பாதையே விடுதலைப்பாதை. புரட்சி என்பது பிரார்தனையல்ல, அது ஒரு மாலைநேர விருந்தில் சங்கீதம் கேட்பதை போன்றதோ, நளினமானதோ நாகரீகமானதோ அல்ல. அது ஒரு பலத்க்கார நடவடிக்கை அதை நாம் தேர்ந்தெடுக்கவில்லை நமது எதிரியே தீர்மானிக்கிறான். என்று உணர்ந்த சிட்டகாங் நெருப்புக்குஞ்சுகள் "அதிகாரம் துப்பாக்கி முனையில் இருந்துதான் பிறக்கிறது" எனவே நாமும் துப்பாக்கி தூக்குவோம் அன்னை நாட்டுக்காக ஆயுதம் ஏந்துவோம். ஆயுத போராட்டமா என்றால் ஆயுதம் வேண்டாமா? எதிரிகளிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம்(கொல்லலாம்) என்று சிந்தித்து இருளில் கரைந்தது அந்த மழலை பட்டாளம்.
மறுநாள் காலை சிட்டகாங்கில் இருந்த ஆயுதக்கிடங்கு முற்றுகை இடப்படுகிறது.ஆயுதங்களை எடுத்துக்கொண்ட மழலைகள் ராணுவத்துடன் மோதுகின்றனர் மழலையர்.
பதினான்கே வயதுள்ள "டெகரா"தான் முதல் களப்பலி. (டெகரா என்றால் வங்கமொழியில் சிறுத்தை என்று பொருளாம்) .
டெகரா வீழ்ந்துவிட்டான் ஒருவன் கத்தினான் மற்றவன் பதிலளித்தான் "டெகரா வீழவில்லை அவன் நம்மில கலந்துவிட்டான்.நாம் வீழமாட்டோம் நாம் வீழும்போது சிட்டகாங் எழும். இந்திய எழும். பிரிடீஸ் ஆட்சி ஒழியும் வரை டெகரா நம்மில் கலந்துகொண்டே இருப்பான்" அவர்கள் எழுந்தார்கள் ஆவேசமாக தாக்கினார்கள். பத்து வயது முதல் பதினான்கே வயதுள்ள குழந்தைகளிடம் போருக்கென்ற பயிற்சி எடுத்த பிரிடீஸ் சிப்பிகள் பின்வாங்கி ஓடினர் என்பதே வரலாறு. எனவே வரலாற்றில் மாணவர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் போராடுவது என்பது ஒன்றும் புதுமையல்ல அது அவசியமும்கூட.
இசுரேலிய படைகளை எதிர்த்து வீரத்துடன் போராடிய லைலா கலேத்திடம் (உலக வரலாற்றி விமானம் கடத்திய ஒரே பெண் போராளி இவர் அதுவும் இரண்டு முறை http://mugavare.blogspot.com/2011/02/blog-post_23.html) ஆவணப்பட இயக்குனர் ஒருவர் கேட்க்கிறார் "குழந்தைகளுக்கும் கூட பயிற்சி அளிக்கிரீரே இதுதேவைதானா?" காலேத் பதிலளித்தார் "என்ன செய்ய எதிரிகள் குழந்தைகளையும் அல்லவா கொல்கின்றனர்" என்று
உண்மையில் பாதிப்புக்கு உள்ளாகும் வர்க்கம் என்ற முறையில் மாணவவர்கள் வர்க்கமாக ஒன்றிணைந்து போராடுவதே சரியானதாகும். இதுபோன்ற போராட்டங்களை ஆதரிப்பதும் ஊக்குவிப்பதின் மூலமுமே நாம் ஈழம் போன்ற பிரச்சனைக்களுக்கு மக்கள் போராட வரவில்லை எனும் புலம்பல்களை நிறுத்தி போராடி வெற்றியடைய முடியும். போராடும் விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை என்றோ தொழிலாளர்களுக்கு என்ன பிரச்சனை என்றோ அறிந்துகொள்ளாமல் அவர்களுக்கு ஆதரவும் அளிக்காமல் அவர்களின் போராட்டங்களை ஊக்குவித்து போராட்ட குணத்தை அவர்களின் இயற்க்கை குணமாக மாற்ற நாமும் ஊக்கியாக இல்லாமல். அவனை நேரடியாக பாதிக்காத ஈழம் போன்ற பிரச்சனைகளுக்கு மட்டும் அவர்கள் குரல் கொடுக்கவில்லையென்றும் அவர்கள் களத்துக்கு வரவில்லையென்றும் பொலம்புவது அபத்தமே அன்றி வேறென்ன?. சிட்டகாங் போல இன்றைய மாணவர்கள் போராடாததன் காரணம் மானாட மயிலாட போன்ற நிகழ்சிகள் மூலம் முதலாளித்துவ ஊடகங்கள் தங்களை பாதுகாத்துக்கொல்வதேயாகும். பெற்றோரும் அதுபோன்ற நிகழ்சிகளுக்கு தங்கள் குழந்தைகளை தயார் செய்வதுமேயாகும் எனவே அதையும் தாண்டி தங்கள் பிரச்சாரம் மூலமாக பள்ளிப்பிள்ளைகளை போராட வீதிக்கு கொண்டுவர முயலும் தோழர்களின் போராட்டத்தை ஊக்குவிப்போம் துணை நிற்ப்போம்.

வெள்ளி, 20 மே, 2011

வானமெல்லாம் காவி


CALL THE DOG MAD AND SHOOT என்று  ஒரு ஆங்கிலப்பழமொழி உண்டு . அதைக்கொண்டுதான் RSS இன் சிந்தாந்தம் இசுலாமியர்களுக்கு எதிராக இயங்குகிறது . இந்த பழமொழியின் பொருள் இதுதான் ஒரு நாயை நாம் கல்லால் அடித்தால் வேடிக்கை பார்ப்பவர்கள் ஒரு வாயில்லா ஜீவனை போட்டு அடிக்கிரேயேடா பாவினு திட்டுவாங்க அதே அந்த நாய் வரும்பொழுது  அந்த நாயை காட்டி  பக்கத்து தெருவில நாலு பேரக்கடிச்சிருக்கு. முந்தாநாள் கூட மூனுபேரக்கடிச்சிருக்கு அதுக்கு வெறி பிடிச்சிருக்குன்னு ஒரு கதையா அவுத்துவிட்டா ஆகவேண்டியதை அங்கே குழுமியிருக்கும் பொதுமக்களே பார்த்துக்குவாங்க. இந்த தந்திரம் தான் CALL THE DOG MAD AND SHOOT . இந்த தந்திரத்தை இசுலாமியர்களுக்கு எதிராக காந்தி படுகொலை முதலே நிகழ்த்தி அதில் வெற்றியும் அடைந்து வருகிறார்கள் இந்த மாபாதகர்கள்.(கோவை இரத்தினபுரி அப்பாயி மன்றத்தில் ( DYFI ) மாணவர்களுக்கு  நடத்தப்பட்ட QUIZ ல் காந்தியை கொன்றது யார் என்ற கேள்விக்கு ஒருசில மாணவர்கள் முஸ்லீம்கள் என்றும் ஒரு சில  மாணவர்கள்  அல்லும்மா காரன் என்றும் பதில் எழுதியிருந்தனர்) 
இந்த தத்துவத்தின் அடிப்படயில் வெளிவநத்த ஏராளமான வெற்றிப்படங்களின் வரிசையில இப்போது வானம் இதற்க்கு முன் வந்த உன்னைப்போல் ஒருவன் போன்ற படங்களுக்கும் இந்த படத்திற்கும் ஒரு சின்ன வித்யாசம் உள்ளது அதுதான் பார்ப்பனியத்தின் உள்வாங்கி செரித்தல் எனும் யுக்தி. 
இதற்க்கு முன் வந்த படங்களில் அப்பட்டமாக இசுலாமியர்களை பயங்கரவாதிகளாகக்காட்டியது . அதை எல்லோரும் ஆதரிப்பதில்லை என தெரிந்ததும் . இந்து பாசிச்ட்டுகளையும் அவர்களின் சில போக்கிரித்தனங்களையும் முதலில் காட்டிவிட்டு . பின் இசுலாமிய பயங்கரவாதத்தை காட்டி இருக்கிறார் இதன் இயக்குனர் கிரிஷ். முன்பு இது போன்ற படங்களை சாடிய என் தோழியும் கூட இந்த திரைப்படத்தை அருமை என்று எழுதிகிறாள். இந்த இடத்தில்தான் இப்படம் முந்தயவற்றிளிருந்து மாறுபடுகிறது.
படத்தில் காவி பயங்கரவாதிகளை எப்பிடி காட்சிப்படுத்துகிறான். அவர்கள் சும்மா பேசிக்கொண்டிருக்கும் இரு ஆண் பெண்  நண்பர்களிடம் வந்து தாலியை கட்டவேண்டும் அல்லது ராக்கி கட்டவேண்டும் என்கின்றனர் . அப்போது அவர்களின் கையில் ஆயுதம் ஒன்றும் இல்லை. அதை அந்த நண்பர்கள் மறுக்கவே அங்கே சின்ன சண்டை நடக்குது இறுதியில் நாயகன் அவர்களை வென்று விடுகிறான். சரி இது உண்மையிலேயும் நடந்த நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களே. அதற்க்கு ராம் சேனாவும் பொறுப்பேற்று உள்ளனர் இங்கே தமிழ்நாட்டிலும் காவி மதவாத அமைப்புகள் இச்செயலை ஆதரிக்கின்றன.
ஆனால் சிறுபான்மை சமூகத்தை காட்டும்பொழுதோ எப்படி காட்சிப்படுத்தப்படுகிறது. ஒரு இசுலாமிய குடும்பம் விநாயகர் சிலை ஊர்வலத்தை(நிஜத்தில் பொதுவாக  நடக்கும் துலுக்கன வெட்டு துளுக்கட்சியை கட்டு போன்ற கோசங்கள் எல்லாம் இல்லாத ஊர்வலம்) கடக்கும் பொழுது மனைவியின் மீது கலர் பூசும் கயவனிடம் ஞாயம் கேட்க்க தாக்கப்படுகிறார். அப்போதும் ரத்தம் வரும் அளவெல்லாம் தாக்குதலின் தீவிரம் இல்லை .இங்கே காவல் துறை அதிகாரி வந்து சமரசம் செய்துவைத்து அதே சமயம் முஸ்லீம் அண்ணன் தம்பிகளை நீங்கள் எதுவும் செய்வீர்கள் என்று கூறி ஒரு அறை அறைந்து அனுப்பி வைக்கிறார்( கோவை குண்டு வெடிப்புக்கு காரணமான நவம்பார் படுகொலைகளில் போலிசுகாரர்களே அடிபட்ட துலுக்கணுக பெரியாசுபத்திரிக்கு வரானுகனு வயர்லஸ் இல் தகவல் கொடுத்ததை என்னவென்பதுகாவலர்களே தங்கள் பைக்கிலிருந்து பெட்ரோல் எடுத்துக்கொடுத்து இசுலாமியர்களை அரசு மருத்துவமனையில் வைத்து எரித்ததும் அது  ஜூ வீ யில் படமாக வெளிவந்ததும் இங்கே நினைவு கூறுவது நன்று)    கைகலப்பில் தள்ளிவிடப்படும் இங்கே மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் அதாவது வேண்டுமென்றே தாக்கப்படாமல் எதார்த்தமாக கீழே விழும் கர்பிணி மனைவியின் கர்ப்பம் கலைகிறது அதை பார்த்து ஆத்திரப்படும் கணவனின் தம்பி தீவிரவாதியாக மாறுகிறான். பிறகு ஊருக்கு ஒரு பெயருடன் சுற்றுகிறான். கையில் பயங்கர ஆயதங்களுடன் மருத்துவமனையே தாக்குகிறான். முந்தய காட்சியில் காட்டப்பட்ட காவி பயங்கரவாதிகளைப்போல் ஒரு நாயகனால் வெள்ளப்படமுடிபனல்ல இந்த பயங்கரவாதி. என்பதுபோல் காட்சிப்படுத்தப்படுகின்றன சிறுபான்மையினரின் பகுதிகள்.
காவி பயங்கரவாதம்தான் இந்தியாவில் நடந்த பெரும்பான்மையான குண்டுவெடிப்புகளுக்கு காரணம் என்பதை கண்டறிந்ததுதான்  கார்க்கரேவின் படுகொலைக்கே காரணம் என்பதை கர்க்கரேவின் மனைவி தெரிவித்த பிறகும் கர்க்கரேவின் சான்றுகளுக்கு பிறகும் அசிமானந்தாவின் வாக்குமூலத்திற்கு பிறகும் இன்னும் எத்துனை ஆண்டுகளுக்கு இந்திய சினிமாவில் இசுலாமியர்களுக்கு மட்டுமே குண்டு வைக்க தெரியுமோ தெரியவில்லை.
விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டதல்ல எந்த மதமும் இசமும் ஆனாலும் அது அவதூறாக இருந்து ஒரு பொது புத்தியை உறவாக்கி விடக்கூடாது என்பதே என் கருத்து .
இசுலாமிய நம்பிக்கை பற்றி விமர்சித்து நண்பரின் மறைபொருள் எனும் குறும்படத்தை கோவையில் வெளியிட்டு இருக்கிறோம் .
 யுத்தம் செய் படத்தில் இசுலாமியர்களை கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்று நண்பர் தமிழ் எழுதிய கருத்திலும் முரன்பட்டோம் காரணம் கோவை குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி பாட்சாவின் அக்கா மகனே ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு கொண்டு , கொலை செய்து இப்போது சிறையில் இருக்கிறான் எனவே ஒரு தனி நபருக்கு முஸ்லீம் பெயரை வைத்து படத்தில் சித்தரிப்பது என்பது வேறு ஆனால் ஒரு சமூகத்தை சித்தரிப்பது என்பது வேறு 
எனவே வானமும் ஒரு காவி சிந்தனை படமே ...  என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்                         

திங்கள், 7 மார்ச், 2011

உழைக்கும் மகளிர் தின விழா


பெண்புத்தி  பின்புத்தி, ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை போன்ற ஆணாதிக்க பழமொழிகளுக்கெல்லாம் நம் சம காலத்தில் சாவுமணியடித்த அஸ்மா மக்பூசுக்கு முதலாவதாக வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வோம்.
மார்ச் 8 மகளிர்தினம் கொண்டாட தயாரகிக்கொண்டிருக்கின்றன பெரும் வர்த்தக நிறுவங்கள். மேட்டுக்குடி மகளிருக்கான விளையாட்டு நிகழ்சிகளை போட்டிபோட்டு அறிவித்து FLEX வைத்துள்ளனர் சில பெரும் ஜவுளி வர்த்தக நிறுவங்கள். அதிலொரு விளையாட்டு புதையலை தேடி (அதாவது காரில் சென்று தேடவேண்டும் சொந்தமாக கார் வைத்திருக்கும் பெண்கள்). மகளிர் தினத்தின் உண்மையான வரலாறே உண்மையில் நாம் தேடவேண்டிய புதையல. இன்று இவர்கள் கொண்டாடுவது போன்று ஓய்வு நேரத்தை போக்கிக்கொள்ள உருவானதல்ல மகளிர் தினம். ஓய்வின்றி உழைத்த மகளிர் தங்கள் களைப்பை போக்க ஓய்வு வேண்டி போராடி பெற்ற வெற்றியின் அடையாளமாக உருவாக்கப்பட்டதே மகளிர் தினம். மே 1 எப்படி உழைப்பாளர்கள் தினமோ அப்படிதான் மார்ச் 8 உழைக்கும் மகளிருக்கான தினம். 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பெண்கள் தங்கள் வீடுகளில்  பஞ்சிலிருந்து நூலை திரித்துக்கொடுக்கும் வேலையே செய்துவந்தனர். அந்த நூலிலிருந்து துணி உற்பத்தி செய்வார்கள். இந்த துணி உற்பத்தி செய்யும் முறையில் பின்னர் இயந்திரம் புகுத்தப்படுகிறது. இயந்திரத்தின் உற்பத்தி வேகத்திற்கு ஈடுகொடுத்து நூல் உற்பத்தியை செய்ய முடியவில்லை பெண்களால். எனவே அவர்கள் இரவு பகல் பாராமல் அயராது உழைக்க வேண்டிய நிர்பந்தம் வருகிறது. அதன் பொருட்டு பல பெண்களுக்கு திருமணம் கூட தடைபெறுகிறது அதிலிருந்துதான் (SPINSTERS ) ஸ்பின்ஸ்டர்ஸ் (bachelor என்பதன் female version ) எனும் வார்த்தை பிறந்தது. அப்படி உற்பத்தியில் ஈடுபட்ட மகளிர். 10 மணிநேர வேலையும், சம உரிமையும் வேண்டி நியுயார்க் நகரத்தில் 1857 மார்ச் 8ல் அணிவகுப்பு மற்றும் மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் அவர்களை விரட்டி சிதறடித்தது. இரண்டு வருடத்திற்கு பிறகு இந்த பெண்கள் அதே மாதத்தில்  முதல் தொழிற்சங்கத்தை துவங்கினர். 51 ஆண்டுகளுக்கு பிறகு 1908 அன்று நியுயார்க்கிலுள்ள  தையல்துறையை சேர்ந்த "வாரி" சகோதரிகள் 1857 ல் நடந்த அணிவகுப்பை கவுரவுத்தும், வாக்குரிமை கோரிக்கையை முன்வைத்தும், குழந்தைகள் உழைப்பை சுரண்டுவது ஒழியவேண்டும் என வலியுறுத்தியும், பேரணி நடத்தினர். இதேபோல் "ட்ராயாங்கில் தொழிற்சாலை" நியுயார்க்கில் 1911 இல் 146 பெண்கள் தங்களையே தியாகமாக தந்த போராட்டம் . இவ்வாறு பல்வேறு அடக்குமுறைகளையும் தாண்டி பல்வேறு காலகட்டங்களில் பெண்களின் போராட்டம் தொடருந்துகொண்டேயிருந்தது. 
"பெண்களின் இடம்" எனும் அற்ப சித்தாந்தங்கலையே வெட்க்கப்படவைத்த பெண்கள் அவர்கள். 
புகழ்பெற்ற லாரன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் வேலைநிறுத்தப் போராட்டத்தில் எங்களுக்கு "ரொட்டியுடன் ரோஜாவும் வேண்டும்'' என்ற பிரச்சார முழக்கத்துடன் பெண்கள் அணிவகுப்பு நடத்தினர்.
''அழகான நாளன்று நாங்கள் அணிவகுக்கும்போது
 ஆயிரக்கணக்கான இருட்டு சமையலறைகளும்,
 சாம்பல் நிறத்தில் ஓங்கி நின்ற இயந்திரங்களும் 
 ஒரு திடீர் சூரியனின் பிரகாசத்தால் 
 உணர்வுகள் பெருக்கெடுத்துப் பாடுகின்ற 
 எங்களை கேட்கின்ற மக்களுக்காக 
 பிரெட் அண்ட் ரோசஸ், பிரெட் அண்ட் ரோசஸ் !
 நாங்கள் அணிவகுத்துக்கொண்டே 
 நல்ல நாட்களை கொண்டுவருவோம் 
 பெண்கள் எழுவதென்றால் இனமே எழுந்ததாக பொருள் 
 இனி அடிமைதனமும் இல்லை.
 சோம்பேறிகளும் இல்லை.
 ஒருவன் அமைதியாக இருக்குமிடத்தில் 
 பத்துபேர் மட்டுமே உழைப்பதுமில்லை.
 இனி வாழ்வின் மகிழ்ச்சியை 
 பங்கிட்டுக்கொள்வதே இருக்கும் .
 பிரெட் அண்ட் ரோசஸ், பிரெட் அண்ட் ரோசஸ் ! 
சர்வதேச பெண்கள் தின அணிவகுப்பை நடத்துபவர்கள் வேலைநிறுத்தக்காரர்களின் கீதமான "பிரெட் அண்ட் ரோசஸ்" என்ற பாடலை விரும்பிப்பாடுவார்கள்.
சர்வதேச மகளிர் தினம் அதிகார பூர்வ அரசு விடுமுறை தினமாக 1908 ல் அறிவிக்கப்பட்டது. அந்த வருடம் அமெரிக்காவில் வாக்குரிமை பிரச்சாரத்திற்க்காக சோசலிஸ்ட் கட்சி ஒரு தேசிய பெண்கள் குழுவை நியமித்தது. கூட்டத்திற்கு பிறகு ஒவ்வொரு வருடத்திலும் ஒரு நாளை சோசலிஸ்ட் கட்சி  பெண்களின் வாக்குரிமைக்கான பிரச்சாரத்திற்க்காக ஒதுக்கவேண்டுமென்று குழு பரிந்துரைத்தது. வாக்குரிமையை வேலை செய்யும் பெண்கள் வரவேற்றனர்.                                
 1910 ல் சோசலிஸ்டுகளும்,பெண்ணியவாதிகளும் அமெரிக்க முழுதும் பெண்கள் தினத்தை கடைபிடித்தனர்.1910 மே மாதத்தில் நடந்த சோசலிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரஸ்சில் பிப்பிரவரி இறுதி ஞாயிற்றுக்கிழமையை சர்வதேச பெண்கள் தினமாக அறிவிக்க வேண்டுமென்று பெண்கள் தேசிய குழு பரிந்துரைத்தது. அதற்குப்பிறகு பெண்கள் தினத்தை சர்வதேச நிகழ்ச்சியாக அடையாளப்படுத்த வேண்டுமென்ற கருத்துடன் அதே வருடம் கொபன்ஹெகனில்  நடந்த 2 வது சர்வதேச சோஷலிச பெண்கள்  மாநாட்டில் பிரதிநிதிகளாக அவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் ''கிளாரா ஜெட்கின்'' என்ற புகழ்பெற்ற கம்யுனிஸ்ட் தலைவி சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாட்டில்பெண்களுக்கு உலகம் முழுதும் வாக்குரிமையை பெற உதவுவதற்கு  ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். அது மார்ச் 19 ஐ மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது. பின்னர் சில சதிகார அரசுகளின் திட்டப்படி மகளிர்தின எதிர்ப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டது.    
இவ்வாறு மிக நீண்ட போராட்டம் மற்றும் பெண்களை திரட்டி பெண்களுக்கு எதிராகவே துரோகம் இளைத்தல் போன்ற அரசின் சதிச்செயல் ஆகிய எண்ணற்ற இன்னல்களையும் தாண்டிதான் இறுதியாக இன்றைய சர்வதேசிய மகளிர் தினம் மார்ச் 8 ல் உலகும் முழுவதும் கொண்டாடப்படுகிறது.மார்ச் 8 இதுவெறும் வார்த்தையல்ல பெண்கள் போராடிப்பெற்ற வெகுமதி. இந்த வரலாற்று உண்மையை பேர் அண்ட் லவ்லியும் இன்ன பிற முகப்பூச்சு அமிலங்களும் நம்மிடமிருந்து திருடிச்செல்ல அனுமதிக்காமல் கொண்டாடுவோம் ஒரு உண்மையான "உழைக்கும் மகளிர் தினமாக".           

சனி, 5 மார்ச், 2011

இப்படியும் நடக்கிறது!


நன்றி : தினமணி


கேரளத்தைச் சேர்ந்த ராய் வர்கீஸ் என்பவர் எதற்காக ராஜஸ்தான் போனார், அவர் ஏன் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் இத்தனை ஆண்டுகளாக முறையான விசாரணை இல்லாமல் அடைபட்டுக் கிடந்தார் என்பதெல்லாம் புதிராக இருக்கின்றன. ஜெய்ப்பூர் சிறைச்சாலை ஆவணங்களின்படி அவரது பெயர் ஹிட்லர் பாபாகான் என்று காணப்படுகிறது. கைது செய்யப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏதாவது பெயர் தரப்பட வேண்டும் என்பதற்காகக் காவல்துறையில் வைக்கப்பட்ட கற்பனைப் பெயராகக்கூட இருக்கலாம் ஹிட்லர் பாபாகான் என்பது. 18 ஆண்டுகளும் நான்கு மாதங்களும் ராய் வர்கீஸ் என்கிற ஹிட்லர் பாபாகான் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் ஒரு விசாரணைக் கைதியாகத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுத் தனது வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். அவர் என்ன குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதே கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது கொலைக்குற்றம். வேடிக்கை என்னவென்றால் அப்படி ஒரு கொலை நடந்தது பற்றியேகூட அவருக்குத் தெரியாது என்பதுதான். ராய் வர்கீஸ் எப்போது புத்தி சுவாதீனத்தை இழந்தார் என்று யாருக்குமே தெளிவாகத் தெரியவில்லை. சித்தப்பிரமையுடையவர்களை மனநோய் மருத்துவமனைக்குச் சிறைச்சாலை நிர்வாகம் அனுப்ப வேண்டும் என்பதுதான் விதி, சட்டம். ஆனால், ஹிட்லர் பாபாகான் என்கிற ராய் வர்கீஸ் பல ஆண்டுகளாக ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலுள்ள தனிமைச் சிறையில்தான் அடைபட்டுக் கிடந்திருக்கிறார். தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் என்ன என்பதுகூடத் தெரியாத நிலையிலுள்ள ஒருவரை ஏன், எதற்காக இப்படித் தனிமைச் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்தது சிறைச்சாலை நிர்வாகம் என்பதற்குப் பதில் கிடையாது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலுள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக உள்ள சகோதரி மரியோலா, ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்குப் போதனை செய்வதற்காகவும், மனசாந்திக்காகப் பிரார்த்தனை செய்வதற்காகவும் சென்றிருந்தபோது, ஹிட்லர் பாபாகான் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்திருக்கிறார். இந்த வழக்கைப் பற்றியும், ஒரு மனநோய் பாதிக்கப்பட்ட மனிதர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவலத்தைப் பற்றியும் வெளியுலகுக்குத் தெரிவித்தவர் சகோதரி மரியோலாதான். கடந்த ஜனவரி 25-ம் தேதி ஜெய்ப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் ஹிட்லர் பாபாகான் என்கிற ராய் வர்கீஸýக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதுவும் எப்படி? ரூ. 50,000-க்கு உத்தரவாதமும், அவரைப் பாதுகாப்பதாக வாக்குறுதியும் எழுதி வாங்கிய பிறகுதான் 18 ஆண்டுகளாகத் தனிமைச் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த ராய் வர்கீஸ் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டார். இப்போது ராய் வர்கீஸ் கேரளத்திலுள்ள தனது சகோதரியின் பாதுகாப்பில் ஒரு மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 18 ஆண்டுகள் சிறைவாழ்வில் முழுமையாகப் பார்வையை இழந்துவிட்டிருக்கும் அந்த மனிதருக்குத் தன்னைப் பற்றியோ, தான் சிறையில் கழித்த நாள்களைப் பற்றியோ, இப்போது விடுதலையாகித் தனது சகோதரியுடன் இணைந்திருப்பது பற்றியோ எதுவுமே தெரியவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமையான விஷயம். யார் ஹிட்லர் பாபாகான்? அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலை வழக்குதான் என்ன? இனிமேல் அதைப்பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. உண்மையான கொலைகாரன் தப்பிவிட்டான். அப்பாவி நிரபராதி ஒருவர் செய்யாத குற்றத்துக்காகத் தண்டனை அனுபவித்து இப்போது மனநோயாளியாக ஊருக்கு அனுப்பப்பட்டு விட்டார். இதுபோல மேலும் 82 விசாரணைக் கைதிகள் ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் இருப்பதாகவும், அவர்களுக்கும், தான் உதவப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார் சகோதரி மரியோலா. இது ஏதோ ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைக்காதீர்கள். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ராய் வர்கீஸ் போன்ற ஆயிரக்கணக்கான அப்பாவிகள் முறையான விசாரணைக்கு ஆண்டுக்கணக்காகக் காத்திருந்து தங்களது வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். சுமத்தப்பட்ட குற்றத்துக்கான அதிகபட்சத் தண்டனையில் பாதி நாள்களை சிறையில் கழித்திருந்தால், விசாரணைக் கைதியை சொந்த ஜாமீனில்விட வேண்டும் என்பது விதி. இந்திய சிறைச்சாலைகளில் உள்ள 80% கைதிகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களும், கல்வியறிவு இல்லாதவர்களும் என்பதால், இப்படி ஒரு விதி இருப்பதே பல விசாரணைக் கைதிகளுக்குத் தெரியவே நியாயமில்லை. இந்திய சிறைச்சாலைகளின் நிலைமையை எடுத்துக்கொண்டால், மனித உரிமை மீறலின் உச்சகட்டமே அதுவாகத்தான் இருக்கும். போக்குவரத்து நெரிசலைவிட மோசமான நெரிசல் இந்திய சிறைச்சாலைகளில்தான் காணப்படுகிறது. 2008 புள்ளிவிவரப்படி, இந்தியாவிலுள்ள மொத்தம் 1,356 சிறைச்சாலைகளில், 3,84,753 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை 2,97,777. ஏறத்தாழ 88 ஆயிரம் பேர் அதிகமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கைதிகள் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருக்கின்றன என்பது ஒருபுறம். சிறைச்சாலை ஊழியர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட 68,920-க்குப் பதிலாக 49,250தான் காணப்படுகிறது என்கிறது தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம். நீதிமன்றங்களின் நிலைமை அதைவிட மோசம். மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. பத்து லட்சம் மக்கள்தொகைக்குக் குறைந்தது 50 நீதிபதிகள்கூட இல்லாத நிலைமையில் வழக்குகளை விரைந்து முடித்து, விசாரணைக் கைதிகளுக்கு இறுதித் தீர்ப்பு வழங்குவது எப்படி? ராய் வர்கீஸýக்கு ஏற்பட்ட நிலைமை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம். ஏதாவது வெளியூரில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்தேக வழக்கில் அழைத்துச் செல்லப்பட்டு ஏதாவது பெயரில் விசாரணைக் கைதியாக்கப்படலாம். இதைப் பற்றி மக்கள் மன்றம் கவலைப்பட மறுக்கிறதே, அதுதான் கவலையளிக்கிறது!

- தினமணி தலையங்கத்திலிருந்து...
நன்றி குருத்து  http://socratesjr2007.blogspot.com/2011/02/blog-post_21.html