மண்ணில் புரண்டு விளையாடிய
கார் காலமும்
மதியில்லை என சுமந்த
தந்தையின் அடிகளும்
பொதியாய் சுமந்து சென்ற
புத்தக கூடையும்
பாதி வழி சுமந்து வந்த
வகுப்பு தோழனும்
கனவுகளை சுமந்து அலைந்த
கல்லூரி நாட்களும்
கவலைகளை சுமந்து
திரிந்த வீதிகளும்
நினைவில் வரும்பொழுது எல்லாம்
இல்லா துயரம்
நீ வரும்பொழுது மட்டும்.....