புதன், 2 மார்ச், 2011

ஊ........ழல்


ஊழல் இந்தவார்தையை பயன்படுத்தாத அரசியல்வாதிகலுமில்லை ஊழலை அனுபவிக்காத அரசியல்வாதிகலுமில்லை. இது எளிதாக எல்லோராலும் விளங்கிக்கொள்ள முடிகிறது . நாம் கவனிக்க தவறிய அல்லது முதலாளித்துவ ஊடகங்கள் திட்டமிட்டே மூடி மறைக்கும் மற்றொரு விஷயம் இருக்கிறது . அதாவது இந்த ஊழலால் அதிகமாக ஆதாயம் அடைவோர் யார் அல்லது இதுபோன்ற ஊழல்கள் யாருடைய நலன்சார்ந்து நடத்தப்படுகிறது என்பதே அந்த மறைக்கப்படும் உண்மை. அதிகார மாற்றம்(போலி சுதந்திரம்) நடந்துமுடிந்த பின்பு இந்தியாவில் நடந்த முதல் ஊழல் முந்த்ரா ஊழல். இதன் சாரம் என்ன முந்த்ரா எனும் ஒரு முதலாளியின் நலனுக்காக நடத்தப்பட்டதே இந்த ஊழல். நேருவின் மந்திரிசபையில் இருந்த T.T .K கிருஷ்ணமாச்சாரி என்பவரால் நடத்தப்பட்ட ஊழல் . அந்த ஊழலின் மதிப்பு ஒன்றேகால் கோடி . இந்த ஊழல் வெளியே வந்ததும் வெட்க்கித்தலைகுனிவதாக அறிவித்தார் அன்றைய பிரதமர் நேரு. அன்று அவர் அறிவிப்பிலாவது வெட்கித்தலைகுனிந்தார் இன்றோ ஊழலை கூட பகிரங்கமாக ஆதரித்து அதற்க்கு வக்காலத்து வாங்கிகிறார்கள் தலைவர்கள். இதெர்க்கெல்லாம் என்ன காரணம். மக்களாகிய நமது மௌனமே அவர்களுக்கு நாம் வழங்கும் சம்மதமாக அவர்கள் கருதிக்கொண்டதே உண்மையான காரணம். ஒன்னேகால் கோடியில் துவங்கிய முந்த்ரா ஊழல் படிப்படியாக வளர்ந்து இன்றைய ஸ்பெக்ட்ரம் 1 ,70 ,000 கோடியை தொட்டது எப்படி. ஒவ்வொரு ஆட்சியிலும் ஒரு வரலாறு காணாத ஊழல். முந்த்ரா ஊழல் தொடங்கி ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை பலனடைந்ததும் ஊழல் அம்பலப்படுத்தியதும் முதலாளிகளே . தனக்கு கிடைக்காத சலுகைகள் தன் சக போட்டியாளருக்கு கிடைப்பதால் எழுந்த ஆத்திரமே வயிற்ரெரிச்சலே இந்த ஊழல்கள் அம்பலமாவதர்க்கு காரணமாகிறது. பின் இந்த ஆட்சியின் வரலாறு காணாத ஊழலை தேர்தலுக்கு பயன்படுத்தி தனக்கு தோதான ஆட்களையும் ஆட்சியையும் கொண்டுவந்து தனக்கான ஆதாய நலன்களை அரசின் திட்டமாகவே நிறைவேற்றிவிடுவது. நாமும் ஒவ்வொருமுறையும் இவர்களால் ஊழல் வரலாறு மாற்றப்ப்படும்பொழுது இதற்க்கு முந்தய ஊழலே பரவாஇல்லை எனவே அவர்களுக்கே வாக்களிப்போம் என்று இருந்துவிடுகிறோம் .இவர்களுக்கும் மக்களை பற்றி என்ன எண்ணம் இருக்கு . எனவே ஒவ்வொருமுறையும் நமது மௌனம் மட்டுமே நமெக்கெதிரான ஆயுதமாக நமேக்கே பயன்படுத்தப்படுகிறது . எல்லா அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு முறையும் ஊழலுக்கு எதிராக நம்மை அணிதிரள சொல்லி மாற்று கட்சிக்கு அதாவது சென்றமுறை ஊழல் புரிந்தவர்களுக்கு வாக்களிக்க பாதை காட்டுகின்றனர். மாறாக இம்முறை நாம் நம் மௌனங்களை உடைத்தெறிந்துவிட்டு அணிதிரள்வோம் இந்த ஊழலுக்கு எதிராக. எப்படி மீண்டும் ஒரு ஊழல்வாதியை தேர்ந்தெடுப்பதர்க்காக அல்லாமல் ஊழல் நம்மிடமிருந்து ஆட்டயப்போட்ட சொத்துக்களை பறித்தெடுப்போம் எனும் முழக்கத்தை எந்த அரசியல் கட்சி முன்வைக்குமோ அந்த அரசியல் கட்சியுடன் . அணிதிரள்வோம் பறித்தெடுப்போம்.
முந்த்ரா முதல் ஸ்பெக்ட்ரம் வரை நடந்த அனைத்து ஊழல்களும் உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள் என சொல்லிக்கொள்ளும் அம்பானி போன்ற முதலாளிகளின் திட்டப்படியே நடந்ததாகும். அம்பானி, நுஸ்லிவாடியா , டாட்ட , போன்ற பெரும் முதலாளி (பணமுதலைகளின்) வியாபார போட்டியே இந்த ஊழல்கள் அம்பலமாக காரணமுமாகும்.
முதலாளிகளின் நலன் சார்ந்தே ஊழல்கல் நடத்தப்படுகிறது என்பதை அறிய இந்த சுட்டியை பார்க்கவும்

http://www.vinavu.com/2011/01/06/the-telecom-scam/
http://www.vinavu.com/2011/01/04/a-spectrum-of-corporate-criminals/

1 கருத்து: