புதன், 23 பிப்ரவரி, 2011

மன்னித்துவிடுங்கள் முத்துக்குமாரர்களே.......


ஹாஸ்னி முபாரக் என்ற ஆட்சியாளனின் கொடுமை தாங்கமுடியாமல் நான்கு இளைஞர்கள் தங்கள் உடலுக்கு தீ வைத்து எரிந்து போனார்கள் எகிப்த்தில்
அந்த நெருப்பின் அரசியல் வெப்பத்தை உள்வாங்கி அதை அந்த தேசம் முழுதும் விதைத்தால் அஸ்மா மக்பூல் எனும் 26 வயது பெண். தன் தேசம் மாற்றம் காண ஏதாவது செய்யவேண்டும் என நினைத்த அவள் தன் பேஸ் புக்கில் ஒரு ஸ்டேடஸ் போட்டால் "தீக்குளித்த நான்கு இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்த தஹ்ரீக் சதுக்கத்துக்கு நான் செல்ல இருக்கிறேன் என்னைப்போல சிந்தனையுடைய  எவரும் வரலாம்" என்பதே அந்த ஸ்டேடஸ். இந்த  ஸ்டேடஸ் பார்த்து மூன்று இளைஞர்கள்தான் வந்திருந்தனாறாம் கூடவே காவல்துறையும். காவல்துறை அவர்களை கைது செய்து விசாரணை நடத்திவிட்டு எச்சரித்து அனுப்பியது.
திரும்பி வந்த அஸ்மா அச்சமடையவில்லை.அமைதியாகிவிடவில்லை. இம்முறை பேஸ் புக்கில் அவளே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டாள். அதில் "தங்களுக்கு தன்னம்பிக்கை இருக்குமானால் இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால் ஜனவரி 25 ஆம் தேதி நாம் போராட்டத்தில் குதிக்கவேண்டும் அன்று யார் வந்தாலும் வராவிட்டாலும் நான் தனியாக செல்வேன். தீ குளிப்பதற்காக அல்ல என்னை சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை நீங்கள் உங்களை ஆணாக கருதினால் வாருங்கள்" என்று ஆவேசமாகவும் "அல்லாஹுவை தவிர வேறு எந்த சக்த்திக்கும் அஞ்சாதீர்கள்" என நம்பிக்கையூட்டும் விதமாகவும் பேசியிருந்தால் .
ஜனவரி 26 ல் தேசத்தின் எல்லா திசைகளிலிருந்தும் தஹ்ரீக் சதுக்கத்தை தேடிவந்தனர் மக்கள்.
மக்கள் ஆம் மக்கள் மக்கள் மட்டுமே மாற்றத்தின் உந்து சக்தி என்று மாவோ சொன்னதை நிறைவேற்றிவிட்டே கலைந்து சென்றது அந்த மக்கள் கூட்டம் . ஊழல் ஒழியட்டும், குடும்ப ஆதிக்கம் முடியட்டும், முபாரக் பதவி விலகட்டும் என்பதற்கு மாற்றாக எந்தவித சமரச முயற்சிகளும் அந்த மக்கள் முன் எடுபடவேயில்லை.
முத்துக்குமரா அந்த எகிப்திய இளைஞர்கள் உன்போல ஆழமான மரணசாசனத்தையோ. அல்லது சடலத்தையே ஆயுதமாக்க நீ வழிகாட்டியதுபோலவோ ஒன்றும் செய்ததாக தெரியவில்லை. எனினும் அவன் விட்டுசென்ற நெருப்பு ஆட்சியாளர்களை பொசுக்கியது. இங்கு ஏன் அப்படி ஒரு நிலை வரவில்லை புவியியல்,நம்நாட்டின் வர்கத்தன்மை என்ற ஆராய்ச்சிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி எங்களுக்கு தெரியவருவதேல்லாம். ஒன்றே ஒன்றுதான் எகிப்து மக்களுக்கு எம்மக்கள் போன்று வாய்ஜாலம், வார்த்தை ஜாலம், உள்ள தன்னால தலைவர்கள் இல்லை என்பதே அங்கே மக்கள் தங்களை நம்பி வீதிக்குவந்தனர். இங்கோ ஓட்டுக்கு ஆதாயம் தேடும் தலைவர்களை நம்பியும் அவர்களின் சொல்லை நம்பியும் வீதிக்கு வருபவர்களாகவே இருக்கிறோம். உனது விசயத்தில் கூட உனது மரணசாசனத்தை மாணவர்களிடமும், மக்களிடமும் கொடுத்து இதுதான் இவனது இருதியாசை இனி ஆகவேண்டியதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லியிருந்தால் நிலைமாறியிருக்கும். மாறாக தலைவர்களிடம் சிக்குண்டு அனைபோடப்பட்டது உனது போராட்டம். இவ்வளவுக்கு பிறகும் தங்கள் தேர்தல் நலனுக்காக தலைவர்கள் தாங்கி பிடிக்கின்றனர் உனது புகைப்படத்தை. ஈழப் படுகொலைக்காக இரட்டைலைக்கு ஓட்டு கேட்ப்போரே தர்மபுரியில் நெருப்பில் மாண்டுபோன மாணவிகள் உன் உறவுகள் இல்லையா என நீ கேள்வி எழுப்புவது புரிகிறது. கொஞ்சம் அவகாசம் கொடு அதற்கும் பதில் தருவார்கள் தங்கள் வார்த்தை ஜாலத்தால். எங்கள் ரசிக குஞ்சுகள் அதற்கும் விசிலடிக்கும்.
எகிப்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் சாத்தியப்படும் . அதற்குள்ளாகவே உங்களுக்கான அடைக்கல தேசத்தை தேர்வு செய்துவைத்துக்கொள்ளுங்கள்.             .            

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தேர்தல் வந்து தீர்ந்தது என்ன ?


தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது டீக்கடை, பேருந்து, பேஸ் புக், வலைப்பூக்கள் எங்கும் விவாதங்களும் யார் ஜெயிக்கப்போவது என்ற ஆரூடங்களும் பார்க்கப்பட்டும் பரப்பப்பட்டும் வருகிறது . டீ கடை விவாதத்திற்கும் பேஸ் புக் விவாதத்திற்கும் வித்யாசம் ஒன்றே டீ கடையில் விவாதிப்போர் அம்மா ஆட்சி வந்தா பணப்புழக்கம் உண்டாகும் வறுமை குறையும்கிறான் பேஸ் பூக்ல விவாதிப்போர் அம்மா ஆட்சி வந்தா மீனவர் துயர் தீரும்கிறான் .இங்கே ஜெயிப்பது யாராக இருந்தாலும் தோற்ப்பது நிச்சியம் மக்களாகிய நாமே. தமிழ் தேசியவாதிகளோ BJP வந்தாலும் பரவாஇல்லை காங்கிரஸ் வரவே கூடாது என்கிறார்கள் துரோகிக்கு எதிரியே மேல் என்று விளக்கம் சொல்லப்படுகிறது எனவே இரண்டுமே மக்களுக்கானதில்லை என்பதை இவர்களே மறுக்கவில்லை.இசுலாமியர்களோ காங்கிரஸ் வந்தாலும் பரவாஇல்லை BJP வரவே கூடாது என்கின்றனர் (காங்கிரசையும் BJP யையும் இங்கே தமிழகத்தில் திமுக ,ஆதிமுக கூட்டணி அடிப்படயில் பார்க்கின்றனர்) ஆனால் இந்த இரு கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு என்பதே காவியும் கதரும் தான் என்பதே உண்மை. BJP ஈழத்தில் துரோகமிழைத்துள்ளது காங்கிரசும் முஸ்லீம்களுக்கு துரோகமிழைத்துள்ளது (பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதே இவர்கள் ஆட்சியில்தான்). எனவே எதுவும் ஆளுபவரை பொருத்தல்ல ஆட்சிமுறையை பொறுத்தே. நாடகம் என்னவோ பழசுதான். நடிகர்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றனர். சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்ற கற்பனை ஒரு அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட போதும்கூட இந்த நாடகம் மக்களிடம் செல்லுபடியாகிக் கொண்டே இருக்கிறது. மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய அறியாமை நடிகர்களை புதுப்புது வேடம்கட்ட தூண்டிக்கொண்டே இருக்கிறது. இந்த அறியாமைல் மாட்டிக்கொண்ட நடுத்துதர வர்க்கமோ தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்றும் அதை அலட்சியம் செய்வது தேசவிரோதம் என்றும் சாடுகின்றனர் தேசமே இல்ல எங்கபோய் தேசவிரோதம்? நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளோ?!?! கட்சியை பார்க்காதீர்கள் வேட்ப்பாளரை பாருங்கள் என்று தங்கள்பங்குக்கு தேசப்பற்றை பறைசாட்டுகின்றனர் இவர்கள்மட்டுமா புரட்சியாளர்களின் புகைப்படங்களை மூலதனமாகக்கொண்டு கட்சி நடத்தும் பாராளுமன்ற புரட்சிக்கட்சியின் தலைவரும் கூட ஸ்பெக்ட்ரம் ஊழல் குழப்பம் குழாய்அடி சண்டை பாராளுமன்றத்தில் நடந்தபொழுது இதையே இப்படி சொன்னார் "நாம் நமக்குள் சண்டை இட்டுக்கொல்லாமல் பாராளுமன்றத்தை காக்கவேண்டும்" என்று . ஆனால் உண்மை என்ன கட்சியை பார்க்காமல் வேட்ப்பாளரை மட்டுமே பார்த்து என்னபயன் என்பதை சற்று அறிவுப்பூர்வமாக அவர்கள் நமக்கு விளக்கினால் தேவலை . முதலில் நம் பாராளுமன்றம் உருவானவிதமே ஆங்கிலேயரின்  கிழக்கிந்திய கம்பனியின் நலனுக்கானதுதனே .பிறகு மக்களின் போராட்டங்கள் வலுவடைவதை கண்டே பாராளுமன்றத்தில் எதிரகட்சிமுறையை கொண்டுவந்தார்கள் அதற்காக ஆக்டேவியஸ் ஹுயும் என்பவனால் உருவாக்கப்பட்டதே இன்று நம்மை ஆண்டுகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி. அதன் பிறகு உலக வரலாற்றில் நிகழ்ந்த மாற்றங்களால் இந்தியாவைவிட்டு வாசல் வழி வெளியேறி பொடக்கால (கொள்ளிப்புரம்)வழிய நம்மை இன்றும் ஆள்வது இதுபோன்ற கம்பனிகளே. உதாரணமாக காட் ஒப்பந்தம் நாம் கட்சியை பாராமல் என்னதான் நல்லவனை தேர்ந்தெடுத்து அனுப்பினாலும் அவனால் பாராளுமன்றத்தில் பன்னாட்டுக்கம்பானிகளை பற்றிய கேள்விகளை அங்கே முன்வைக்கமுடியாது(இது காட் ஒப்பந்தத்தில் உள்ளது). அப்புறம் தமிழர் பிரச்சனை அதற்கும் இந்த கொள்கைகளே காரணம் ஈழ தோல்விக்கு காரணம் அந்தோணி அப்படின்னு சொல்லிட்டு வந்தோம் இப்போ என்ன நிலைமை அந்தோணிக்கு பதில் நம்ம தமிழன் ப.சிதம்பரம் சட்டீஸ்கர்ல மக்கள் கொல்லப்படுகிறார்கள் இது யாருடைய நலனுக்கு நடந்ததோ அதே நலனுக்குத்தான் ஈழமும் பலிகொள்ளப்பட்டது.அவ்வாறின்றி ஈழத்திற்கு மலையாளிகளையும் ஹிந்திக்காரர்களையும் குறை கூறினால் நமக்கு உடன்பாடில்லாமலே சிதம்பரம் நடத்தும் படுகொலைகளுக்கு தமிழர்களை குறைகூருவதுபோலாகும் . ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல் கூட யாருடைய நன்மைக்கானது என்பதை நம்முடைய ஊடகங்கள் சொல்வதேயில்லை ஆ.ராசாவுக்கு பதில் நாளை அதே இடத்தில் ஹெச்.ராசா வரலாம் அனாலும் இந்த ஊழல் இதே வர்க்க நலனுக்கு வேறுவடிவில் நடந்தே தீரும் . நாம் போடாட்டி நம்ம வாக்க வேறொருத்தன் போட்டுருவான் என்னும் அறிவார்ந்த வாதங்கள் வைக்கிறார்கள் சிலர் நம் வாழ்வையே திருடிவிட்டவர்கள் நம் வாக்கை திருடுவது பற்றி நமக்கென்ன அக்கறை வேண்டிக்கிடக்கு. இறுதியாக தேர்தல் புறக்கணிப்பு என்பது வன்முறையல்ல ஜனநாயகத்தில் அதற்கும் இடமுண்டு (குடும்ப அடையாள அட்டை திருப்பிக்கொடுப்பது தேர்தல் புறக்கணிப்பு போன்ற எல்லா போராட்ட வடிவங்களும் நம் நாட்டிலேயே நடந்துள்ளது இதற்க்கு முன்பும்) எனவே தமிழர் இசுலாமியர் என்பதல்ல பிரச்சனை எந்த வர்க்கம் என்பதே பிரச்சனை எனவே உழைக்கும் வர்க்கமாக ஒரு மாற்றத்தை முன்னெடுப்போம் உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைவோம்